நவராத்திரி விழா: தனலட்சுமி அம்மனுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

நவராத்திரியை முன்னிட்டு 30 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைக் கொண்டு ஸ்ரீ தனலட்சுமி அம்மன் அலங்காரிக்கப்பட்டார். நவராத்திரியை முன்னிட்டு வீடுகளிலும், கோவில்களிலும் நவராத்திரி கொலு வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறத. இதனிடையே வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 9 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 4 ஆம் நாளான இன்று … Read more

மக்களே முக்கிய தகவல்..!! உங்க பெயரில் போலி சிம் கார்டு இருக்கா? கண்டுபிடிப்பது, நீக்குவது எப்படி?

சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் அட்டை, ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. ஆதாரை ஆவணமாக வைத்தே சிம்கார்டுகளும் வழங்கப்படுவதால், ஒரு ஆதாரில் எத்தனை சிம்கார்டுகள் வாங்கலாம்? போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருந்தால் தெரிந்து கொள்வது எப்படி? போலி சிம் கார்டுகளை நீக்குவது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வோம். முதலில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் இணையதளமான tafcop.dgtelecom.gov.in பக்கத்துக்குச் செல்ல வேண்டும். அதில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதன்பிறகு உங்கள் மொபைல் … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து, ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை தசரா விடுமுறைக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் தரப்பில், அதற்குள் அதிமுக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தயாராகி வருகின்றனர். எனவே, … Read more

ஓபிஎஸ் கை மீண்டும் ஓங்குகிறதா? எடப்பாடிக்கு பிரேக் போட்ட உச்ச நீதிமன்றம்!

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் இது தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை சேர்த்து தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர். அதற்கு ஓபிஎஸ் தரப்போ, எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுச் செயலாளர் … Read more

கொந்தகை முதுமக்கள் தாழியில் இரும்பு வாள் கண்டெடுப்பு: போர் வீரனை புதைத்திருக்க வாய்ப்பு

திருப்புவனம்: கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் 40 செமீ நீளம் கொண்ட இரும்பு வாள் கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் 3ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கொந்தகையில் மொத்தம் 143 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 107வது முதுமக்கள் தாழி நேற்று தமிழக தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் … Read more

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அளித்த அனுமதியை மறுஆய்வு செய்யகோரிய வழக்கு தள்ளிவைப்பு.!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்.. மிரட்டல் கடிதம் எழுதிய ஆசாமியை பிடிக்க தனிப்படை

கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்.. மிரட்டல் கடிதம் எழுதிய ஆசாமியை பிடிக்க தனிப்படை Source link

வெளியானது சூப்பர் அறிவிப்பு.. குழந்தைகளுக்கு ரூ.4000 நிதியுதவி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சார்ந்தவர்கள் நிதி ஆதரவுத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ நிதி ஆதரவுத் திட்டத்தின் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள், எச்.ஐ.வி உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், குழந்தைகள் இல்லங்கள், சிறப்பு இல்லங்களின் கண்காணிப்பாளரால் பரிந்துரை செய்யப்படும் குழந்தைகள், … Read more

புதிய செல்போன்கள் உற்பத்தி மையமாக தமிழகத்தை மாற்றும் நோக்கில் செயல்படுகிறோம்: முதல்வர் ஸ்டாலின் 

செங்கல்பட்டு: “தற்போது சீனாவில்தான் புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. அதனைமாற்றி தமிழ்நாட்டையும் அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். செங்கல்பட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் பெகாட்ரானின் நவீன ஆலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: ” உயர் தொழில்நுட்பத் திட்டங்களையும், பெருமளவில் வேலைவாய்ப்பினை அளிக்கும் திட்டங்களையும் கொண்டுவர தமிழக அரசு … Read more

டிஜிபி அலுவலகத்தில் திருமாவளவன் மனு: ஆர்.எஸ்.எஸ்ஸும் நாங்களும் ஒண்ணா? என்ன நியாயம்?

சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்தத்தோடு சமூக நல்லிணக்கப் பேரணிக்கும் அனுமதி மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அக்டோபர் 02 – காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு அரசு தடை … Read more