புதுச்சேரியில் முறைப்படி உத்தரவு இல்லாமல் "சர்வீஸ் பிளேஸ்மென்ட்" அடிப்படையில்  பணிபுரியும் பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள்: ஆளுநரிடம் புகார்

புதுச்சேரி: முறைப்படி உத்தரவு இல்லாமலும் அலுவலக ஆணைப்படியும் “சர்வீஸ் பிளேஸ்மென்ட்” அடிப்படையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பணிபுரியும் பல நூற்றுக்கணக்கான ஊழியர்களை திரும்ப அவரவர் பணிக்கு செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர், தலைமைச் செயலரிடம் மனு தரப்பட்டுள்ளது. துறை செயலரின் உத்தரவின்றி ஆணை பிறப்பித்து அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது. புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் 43 பேர் அங்கு பணியில் … Read more

எங்கள் ஆட்சியிலேயே 1000 கோடிக்கு ஊழல்… எம்.ஆர். விஜயபாஸ்கரால் அதிமுக அப்செட்

கரூரை அடுத்த ஆத்தூர் பிரிவு சாலையில் அறிஞர் அண்ணா 114வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு அதிமுக கரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய எம்.ஆர். விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி … Read more

ஆ.ராசா மீது மதவாதிகள் தாக்குதல் நடத்தினால் பொறுக்கமாட்டோம் – சீமான் கொந்தளிப்பு

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. … Read more

புதுச்சேரியில் 16 வயது பெண்னை பாலியல் தொழிலில் ஈடுபத்தியவர்கள் கைது: போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கடலூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் அவரது மனைவி உமாவும் வீடு வாடகைக்கு எடுத்து 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பாலாஜி மற்றும் அங்கு இருந்த … Read more

"ஆ.ராசாவை குறிவைத்து மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால்.." – சீமான் கடும் எச்சரிக்கை

மனுதர்மத்தைச் சாடியதற்காக ஆ.ராசாவை குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என எச்சரித்துள்ளார் சீமான். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ”மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. … Read more

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்: சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: தமிழகத்தில் தீவிரமாக பரவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பரிசோதனைக் கருவிகளுடன் கூடிய காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (செப்.18) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் ஏற்படும் குழந்தைகளுக்கு போதிய படுக்கை இல்லை. பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி … Read more

10.5% இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்: மருத்துவர் ராமதாஸ் உறுதி

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் வன்னியர் இட ஒதுக்கீட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீர வணக்க நாள் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே .முரளி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, மாநில நிர்வாகிகள் இசக்கிபடையாச்சி, தீரன், பு.தா.அருள்மொழி, என்.டி,சண்முகம், சக்கரவர்த்தி, சரவணன், இளவழகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிமீறல் – விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குனர், நூலகர் ஆகிய பணிகளுக்கான ஆள் தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமூகநீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே இட ஒதுக்கீட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவது சமூகநீதி குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் பல்கலக்கழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக நூலகர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய இரு பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் வரும் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. … Read more

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் எதிரே கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி தீவிரம்: அதிகாரிகள் நடவடிக்கை

வலங்கைமான்: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் எதிரே வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்படுகிறது. வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன் பெரும் விதமாக கூட்டு குடிநீர் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்திற்கு என கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் சாலைகளின் மைய பரப்பில் குழாய் பதித்து கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட கோவிந்தகுடி விருபாட்சிபுரம், செம்மங்குடி, புலவர் … Read more

"மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு".. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-     மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (18.09.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 19.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more