ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த விவகாரம்: காவல்துறை தரப்பில் சீராய்வு மனு தாக்கல்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த 22 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். மேலும் நீதிபதி தனது உத்தரவில் பல்வேறு நிபந்தனை விதித்தார் … Read more

தூய்மை பணியாளர்களுக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை: நீதிபதிகள்

மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும்  என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.  2013 ஆம் ஆண்டு சட்டத்தின் படி மனிதர்களைக் கொண்டு மலம் அளுதல், பாதாள சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் ரோபோட் மற்றும் நவீன இயந்திரங்களைக் கொண்டு செய்ய கோரிய வழக்கு விசாரணையில், நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.  வழக்கு குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் முழுமையான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற … Read more

விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவருக்கு ஆயுள், 6 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவருக்கு ஆயுள், 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த 2021-ல் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை குழந்தைவேலு பாலியல் வன்கொடுமை செய்துள்ளர்.  

'ஓசில வரல: பணத்தை பிடி டிக்கெட்ட கொடு' – மூதாட்டியின் செயலால் அரசு பேருந்தில் பரபரப்பு

அமைச்சர் பொன்முடியின் பேச்சு விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் கோவையில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்ய மாட்டேன் எனக் கூறிய மூதாட்டியின் வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. தமிழக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்கள் ஓசியாக பயணம் செய்கிறார்கள் என்று பொது வெளியில் பேசியது விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் இன்று காலை கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் … Read more

மலைப்பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு..!!

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. இந்த மலைப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் கடுங்குளிரும், மழையும் பொழிவதால், அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஸ்வெட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக, பள்ளிகள் மூடப்பட்டிருந்தால், ஸ்வெட்டர்கள் வழங்கப்படவில்லை. ஆனால், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பருவமழை தொடங்குவதற்கு … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி 

சென்னை: கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் சேதமடைந்த தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மரணமடைந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில், பள்ளிக் கட்டிடம், வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், … Read more

ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மறுத்தது சரியா… தமிழக அரசியல் களம் சொல்வது என்ன?

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனை எதிர்த்து மீண்டும் உயர் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் நாடியிருக்கிறது. அதேசமயம் சீராய்வு மனுவை தாக்கல் செய்து காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துகள் … Read more

RSS பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 471 திருக்கோவில்களில் கையடக்க கணினி மூலம் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூசைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திருக்கோயில்களில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பணம் செலுத்த கையடக்க கணினி வாயிலாக டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை … Read more

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 52% வாக்குகள் பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் பிற்பகல் 12 மணி நிலவரப்படி 52.60 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 2,470 வாக்குகளில் 1,299 வாக்குகள் பதிவாகி உள்ளன.

கொடைக்கானல் வனச் சரணாலயத்திற்குள் ஹெலிகாப்டர் பறக்கலாமா, கூடாதா? அரசு விளக்க வேண்டும்

கொடைக்கானல் வனச் சரணாலயத்திற்குள் ஹெலிகாப்டர் பறக்கலாமா, கூடாதா என்ற விடை தெரியாமல் பொதுமக்கள் அச்சத்தல் உள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியை, இந்தியாவின் 12-வது வன உயிர் சரணாலயமாக, தமிழக அரசு அறிவித்ததை அடுத்து மத்திய அரசின் ஒப்புதல் சமீபத்தில் வழங்கப்பட்டது. பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானல் மலைப் பகுதியை வனச் சரணாலயமாக அறிவித்ததற்கு, விவசாய சங்கங்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வனச்சரணாலய திட்டம் செயல்படுத்தப்பட்டு, தற்பொழுது … Read more