கள்ளக்குறிச்சி மாணவி இறந்த பள்ளியில் மறுசீரமைப்பு பணிகள்- மாவட்ட நிர்வாகம் அனுமதி

கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தை தொடர்ந்து வன்முறை நிகழ்ந்த பள்ளியில் மறுசீரமைப்பு கட்ட பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்ததை அடுத்து, ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் பள்ளி கட்டடங்கள் சேதமடைந்தன. அவற்றை சீரமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை 10 நாட்களில் பரிசீலனை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சார்பில் பெற்றோர் … Read more

கமலின் கோவை வருகை, ஆ.ராசா பேச்சு: வானதி சீனிவாசன் சரமாரி விமர்சனம்

கோவை: கோவை தெற்கு தொகுதி குறித்து மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு இப்போதுதான் நியாபகம் வந்துள்ளது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை சிவானந்தா காலனி, ஓஸ்மின் நகர் அங்கன்வாடியில் மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணி நிகழ்ச்சியை இன்று (செப்.17) தொடங்கி வைத்த பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர், மாவட்டத்தில் தெற்கு தொகுதிக்கு … Read more

6 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏஜி பாபு காவல் தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டு உள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனி விஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சீருடை பணியாளர் … Read more

நீங்கள் காந்தியைப்போல – பிரதமருக்கு கங்கனா பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தனது 72ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பல்வேறு தலைவர்கள் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோடியுடனான தனது பழைய புகைப்படத்தை பதிவிட்டு ‘உலகத்தின் சக்திவாய்ந்த மனிதர்’ என மோடியை அவர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது வாழ்த்து குறிப்பில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், ஒவ்வொரு நாளும் நம் நாட்டிற்குச் சேவை செய்ய உங்களின் … Read more

அனந்தேரி ஊராட்சியில் சேவை மைய கட்டிட பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், அனந்தேரி ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், திருமண நிதியுதவி, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் போன்றவற்றை பெற ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு சென்று வருவதில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அனந்தேரி ஊராட்சியில் சேவை மைய கட்டிடம் கட்ட வேண்டும் என அக்கிராம மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு ₹13 லட்சம் மதிப்பில் புதிய சேவை மைய கட்டிட பணிகள் துவங்கியது. … Read more

கடலூர்: மின்கசிவு காரணமாக 4 வீடுகள் எரிந்து நாசம் -ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில் மின்கசிவு காரணமாக 4 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில் இருக்கும் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் கூரை வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது. தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைப்பதற்குள் காற்றின் வேகத்தால் அருகருகே இருந்த 4 வீடுகளில் தொடர்ந்து தீ பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 4 வீடுகள் தாண்டி தீ பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் வீட்டுக்குள் … Read more

2-வது விமான நிலையம் அமையவுள்ள பரந்தூருக்கு வருகிறது சென்னை மெட்ரோ ரயில்

சென்னை: 2-வது விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு சென்னை மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 3 … Read more

விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கு 90% மானியம் – தமிழக அரசு செம உத்தரவு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரால் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான … Read more

நிறைமாத கர்ப்பிணியை அலைகழித்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அரசு அதிகாரி எச்சரிக்கை

திருச்செந்தூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கால் காலவிரயம் காட்டும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் பொன் இசக்கி தெரிவித்தார். நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு அனுமதிக்காமல் அலைகழித்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வலியில் அனுமதிக்கபட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்த பெண்ணிற்கு இன்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இது … Read more

உத்திரமேரூரில் இடிந்து விழும் நிலையில் சார் பதிவாளர் அலுவலகம்; புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே இடிந்து விழும் நிலையில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சி சன்னதி தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பதிவாளர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில், உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களது முக்கிய ஆவணங்கள் பதிவு செய்வது மட்டுமின்றி பாதுகாக்கப்பட்டும் வருகிறது. … Read more