அனந்தேரி ஊராட்சியில் சேவை மைய கட்டிட பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், அனந்தேரி ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், திருமண நிதியுதவி, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் போன்றவற்றை பெற ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு சென்று வருவதில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அனந்தேரி ஊராட்சியில் சேவை மைய கட்டிடம் கட்ட வேண்டும் என அக்கிராம மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு ₹13 லட்சம் மதிப்பில் புதிய சேவை மைய கட்டிட பணிகள் துவங்கியது. … Read more

கடலூர்: மின்கசிவு காரணமாக 4 வீடுகள் எரிந்து நாசம் -ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில் மின்கசிவு காரணமாக 4 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில் இருக்கும் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் கூரை வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது. தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைப்பதற்குள் காற்றின் வேகத்தால் அருகருகே இருந்த 4 வீடுகளில் தொடர்ந்து தீ பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 4 வீடுகள் தாண்டி தீ பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் வீட்டுக்குள் … Read more

2-வது விமான நிலையம் அமையவுள்ள பரந்தூருக்கு வருகிறது சென்னை மெட்ரோ ரயில்

சென்னை: 2-வது விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு சென்னை மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 3 … Read more

விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கு 90% மானியம் – தமிழக அரசு செம உத்தரவு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரால் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான … Read more

நிறைமாத கர்ப்பிணியை அலைகழித்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அரசு அதிகாரி எச்சரிக்கை

திருச்செந்தூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கால் காலவிரயம் காட்டும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் பொன் இசக்கி தெரிவித்தார். நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு அனுமதிக்காமல் அலைகழித்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வலியில் அனுமதிக்கபட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்த பெண்ணிற்கு இன்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இது … Read more

உத்திரமேரூரில் இடிந்து விழும் நிலையில் சார் பதிவாளர் அலுவலகம்; புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே இடிந்து விழும் நிலையில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சி சன்னதி தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பதிவாளர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில், உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களது முக்கிய ஆவணங்கள் பதிவு செய்வது மட்டுமின்றி பாதுகாக்கப்பட்டும் வருகிறது. … Read more

“தரையில் தான் அமர்கிறோம்” – பாஞ்சாங்குளம் பள்ளியிலும் தீண்டாமை? மாணவர்கள் அதிர்ச்சி புகார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தின்பண்டம் வாங்க வந்த மாணவர்களிடம் தீண்டாமையை காட்டிய கடை வியாபாரி உட்பட இருவர் கைதான நிலையில், சம்பவம் நடந்த கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நல அலுவலர் கந்தசாமி மற்றும் வருவாய் வட்டாட்சியர் பாபு ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது பள்ளி வகுப்பறையில் ஜாதி பாகுபாடு காட்டுவதாக மாணவர்கள் நேரில் புகார் தெரிவித்தனர். வகுப்பறையில் இருக்கைகளில் அமர அனுமதி இல்லை என்றும் தரையில் மட்டுமே அமர்ந்து … Read more

வாடகை பாக்கி செலுத்தாத 400 கடைகளுக்கு விரைவில் சீல்: சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: வாடகை பாக்கி செலுத்தாத 400 கடைகளுக்கு விரைவில் சீல் வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக 1,500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை, மாத வாடகை அடிப்படையில் வியாபாரிகளுக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகள் வாயிலாக மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், வாடகை பாக்கி உள்ள கடைகளை கண்டறிந்து, அவற்றை சீல் வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், … Read more

ஓபிஎஸ் ஒண்ணுமே இல்லாம ஆயிட்டார்… ஜெயக்குமார் வருத்தம்…

சென்னை, கிண்டியில், 105வது பிறந்த நாளையொட்டி,சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியின் உருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை அணிவித்து, பின், , செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கோஷ்டிக்கும், கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. என்பது கோஷ்டி, நாங்கள் கட்சி. ஒரு கட்சி என்றால், மக்களுக்காக போராட வேண்டும். அண்ணா பிறந்த நாள் கூட்டம், பொதுக்கூட்டம் நாங்கள் அறிவித்துள்ளோம். அவருக்கு பலம் இருந்தால் , கூட்டத்தை நடத்த சொல்லுங்கள், அவரிடம் கூட்டம் நடத்த ஆள் இல்லை. … Read more

திமுக தலைவர் வீட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்தவர்கள்: அதிமுக ஜெயக்குமார் சாடல்

சென்னை: ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுசனை கடித்த பழமொழியாக அரசியலில் நாகரீகமில்லாத வார்த்தைகளை பேசி வாங்கி கட்டி கொண்டு பதவிக்காக காத்திருக்கும் ஆர்எஸ் பாரதி நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிமுக குறித்து விமர்சனம் செய்துள்ளார் என்று சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். திமுக தலைவர் கலைஞர் வீட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்து அதன்பின்னர் கலைஞரால் அரசியலில் நுழைந்தார் என்று திமுகவை பற்றி காட்டமாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமியை  விமர்சனம் … Read more