திருமணமாகி 4 மாதத்தில் நூதன முறையில் தற்கொலையா? அதிரவைத்த பட்டதாரி பெண்ணின் முடிவு

கோபிசெட்டிபாளையம் அருகே திருமணமாகி 4 மாதமே ஆன நிலையில் பட்டதாரி பெண், நூதன முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரைச் சேர்ந்த திருவேங்கடசாமி – மரகதமணி தம்பதியரின் மகள் இந்து, பிஇ பட்டதாரியான இவர், கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் நல்லகண்டன்பாளையம் துளசி நகரைச் சேர்ந்த விஷ்ணுபாரதி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணத்திற்குப் … Read more

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு: பல்வேறு துறைகளுக்கு தலைமை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்

சென்னை: சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு பல்வேறு துறைகளுக்கு தலைமை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும், பல்வேறு வகையான விளம்பரப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (16ம் தேதி ) தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை, கூட்டுறவு, உணவு … Read more

திமுக எம்பி ஆ.ராசா மீது முதல்வர் ஸ்டாலின் அப்செட் – உடன்பிறப்புகள் கப்சிப்!

எம்பி ஆ.ராசா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு எப்போதும், திமுகவில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். அந்த அளவுக்கு ஆ.ராசா மீது திமுக தலைமைக்கு தனி கவனம் இருக்கிறது என்றே சொல்லலாம். இருப்பினும், திமுக எம்பி … Read more

'மதுரை வேட்பாளர் மோடி வெற்றி' – இணையத்தில் ஹிட் அடித்த பாஜகவினரின் பிறந்தநாள் போஸ்டர்

பிரதமர் நரேந்திர மோடி தனது 72ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜகவினரும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றனர். பிரதமர் பிறந்தநாளான இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு, தமிழ்நாடு பாஜக சார்பில் தங்க மோதிரம் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகரில் பாஜகவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. ‘2024 மக்களவை தேர்தலில், மதுரை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி’ … Read more

பெரியார் 144-வது பிறந்தநாள்: ஈரோட்டில் சனாதன எதிர்ப்பு பேரணி

ஈரோடு: பெரியாரின் 144-வது பிறந்தநாளை ஒட்டி ஈரோட்டில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் சனாதன எதிர்ப்பு பேரணியை அந்தியூர் செல்வராஜ் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். 28 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பெரியாரிய உணர்வாளர்கள் என 1,000க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். சனாதன எதிர்ப்பு பேரணி பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவடைய உள்ளது. 

'ஆண்களை போல பெண்களும் ஆடை அணியுங்கள்' ஏன் சொன்னார் பெரியார்?

சமீபகாலங்களில் பெரியார் மீது கடுமையான தாக்குதலும் எதிர்ப்புகளும் அதிகரித்து உள்ளது. அவரது கருத்துக்களுக்கு எதிர்வினையாக அவரது சிலைகள் அவமானப்படுத்தப்படுகிறது. பெரியாரின் கருத்துகளும் அதனை தொடரும் எதிர்க்கருத்துகளுக்கும், பெரியாரின் இருந்த போதும், அவர் மறைந்த பிறகு நிகழ்பவை தான். விவாதங்களில் மூலமாக தான் வேறுபட்டை ஒழிக்க முடியும் என்பதால் பெரியார் சொன்னதாக பரப்பப்படும் கருத்துகளில் சிலவற்றுக்கான முழு பின்னணியும் விளக்கமும் இங்கே.. மார்டன் உடை அணியச் சொன்னாரா பெரியார்? 8 முழ சேலையை இழுத்துக் கட்டிக்கொண்டு, சேலையைச் சரிசெய்வதிலேயே … Read more

9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை – ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னை: தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது. இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த … Read more

நைட் பார்ட்டியில் பெண்களுக்கு 'மது' இலவசம்.. திருப்பூர் மேயரின் விளக்கம்!

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் டிஜே பார்ட்டியில் தம்பதியாக வருபவர்களுக்கும், மகளிருக்கும் அனுமதி இலவசம் எனவும், இதில் மகளிருக்கு மதுபானம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹோட்டல் நிர்வாகம் அந்நிகழ்ச்சியை ரத்து செய்தும் தங்கள் கவனத்திற்கு இல்லாமல் விளம்பர பிரிவு சார்பாக வெளியிடப்பட்டிருந்ததாகவும் அது போன்ற நிகழ்ச்சி எதுவும் நடைபெறாது … Read more

நரேந்திர மோடியின் பிறந்தநாள் பேனர் மீது கொடி கட்டிய விசிக!

நாடு முழுவதும் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதேபோல தந்தை பெரியாரின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பழனியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். பழனி ரயில்வே பீடர் சாலையில் மின்சார வாரியம் அருகே அனுமதியின்றி பாஜக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியிலேயே பெரியாரின் சிலையும் உள்ளதால் திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சி … Read more

தமிழ்நாடு டூ கேரளா: அதிக அளவிலான கனிம பொருட்களை ஏற்றிச் சென்ற 10 லாரிகள் பறிமுதல்

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான கனிம பொருட்கள் கேரளாவிற்கு ஏற்றிச் சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிரசர்களில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவிலான கனிம பொருட்களை இரவு நேரங்களில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு வள்ளியூர் துணை கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் வள்ளியூர் மற்றும் பணகுடி நான்கு வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு … Read more