ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த புதுவை முக்கிய புள்ளிகள்..! – ராகுல் காந்தியுடன் சேர்ந்து பாதயாத்திரையில் பங்கேற்ப்பு..!

காங்கிரஸ் ராகுல் காந்தி தொடங்கிய ஒற்றுமை பாதயாத்திரையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் யாத்திரை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவர்களோடு நடந்து சென்றனர். கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு, காஷ்மீருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். ராகுல்காந்தி கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் விவேகானந்தா கலைக்கல்லூரியில் இருந்து 2-ம் நாள் பாதயாத்திரையை தொடங்கினார். இதில் புதுவை முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் 3 பஸ்களில் சென்று … Read more

தேர்தல் விதி மீறல் வழக்கு: நடிகர் வையாபுரி விடுவிப்பு

போடி: தேர்தல் விதிமீறல் வழக்கில் இருந்து நடிகர் வையாபுரி விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியை ஆதரித்து நடிகர் வையாபுரி பிரசாரம் செய்தார். தேனி மாவட்டம், போடி புதூர் பகுதியில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தி, அங்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தட்டில் பணம் வைத்து வையாபுரி கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தேர்தல் விதிமீறலுக்காக போடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போடி ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய உத்தரவால் … Read more

புதுக்கோட்டை: தக்காளியை திருமண பரிசாக வழங்கி ஆச்சர்யப்படுத்திய நண்பர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு அவரது நண்பர்கள் தக்காளியை பரிசாக வழங்கி நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணிகண்டன் – யோகேஸ்வரி ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. மணமக்களுக்கு மணமகனின் நண்பர்கள் தக்காளி பைகளை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அருகிலுள்ள மாநிலங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக … Read more

“எந்த மாநிலத்திலும் எதையும் காங். திணிக்காது” – நீட் விவகாரத்தில் அனிதா சகோதரரிடம் ராகுல் காந்தி உறுதி

நாகர்கோவில்: “தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?” என்று குமரியில் நடைபயணத்தின்போது அனிதாவின் தந்தை, சகோதரரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார். ராகுல் காந்தி இன்று 2-வது நாளாக ‘இந்திய ஒற்றுமை பயணம்’ மேற்ண்டபோது நீட் தேர்வில் உயிரிழந்த மாணவி அனிதாவின் தந்தை சண்முகம், சகோதரர் மணிரத்தினம் ஆகியோரிடம் பேசினார். அவர் குமரி மாவட்டம் கொட்டாரத்தில் இருந்து சுசிந்திரம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தபோது, அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்தினம், தந்தை சண்முகம் ஆகியோர் … Read more

முதல்வர் ரங்கசாமி டென்ஷன்; ராமதாஸ் திடீர் அதிரடி!

புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு செய்துகொண்டன. ஆனால் அதே கூட்டணியில் இருந்த பாமகவை எந்த கட்சிகளும் கண்டுகொள்ளாதது மருத்துவர் ராமதாசை ரொம்பவே டென்ஷன் ஆக்கியது. கடைசி வரைக்கும் கோரிக்கை வைத்தும் கூட தொகுதிகள் ஒதுக்கப்படாததால் 15 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட பாமக முடிவு செய்தது. இறுதி நேரத்தில் கூட்டணி கட்சி கை விட்டதாலும், சட்ட … Read more

பூதப்பாண்டியில் மீண்டும் அட்டகாசம்: 500 வாழைகளை துவம்சம் செய்த யானை கூட்டம்

பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே இன்று காலை யானை கூட்டம் 500 வாழைகளை துவம்சம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. தாடகை மலை அடிவாரத்தில் உள்ள உடையார்கோணம் பகுதியில் சுமார் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் 1200 வாழைகளை நட்டு வந்தார். கடந்த ஜூன் மாதம் அவரது தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம் 700 வாழை மரங்களை பிடிங்கி நாசமாகிவிட்டு சென்றது. இதுகுறித்து ராஜா வனத்துறை, வேளாண்துறை, வருவாய்துறைகளிடம் நிவாரணம் … Read more

எடப்பாடி: சாக்கடை கழிவு நீருடன் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ள நீர்!

எடப்பாடியில் வெள்ள நீர் சாக்கடை கழிவு நீருடன் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியின் மையப் பகுதியில் பாயும், சரபங்கா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், அதன் கரையோர பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து புகுந்தது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் … Read more

ஆப்கனுக்கு எதிராக 212 ரன்கள் குவித்த இந்தியா: கோலி அபார சதம்

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்  ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இரு அணிகளுமே இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் கே.எல்.ராகுலுடன் முன்னாள் கேப்டன் விராட்கோலி தொடக்க வீரராக களமிறங்கினார். கடந்த சில வருடங்களாக சரியாக ரன் குவிக்காமல் விமர்சனத்திற்கு உள்ளான … Read more

“பிரித்தாளப்பட்டுள்ள சமூகத்தை ஒன்றிணைக்கும் பயணம் இது” – நாகர்கோவிலில் ராகுல் காந்தி பேச்சு

நாகர்கோவில்: “கன்னியாகுமரியில் இருந்து நான் மேற்கொண்டுள்ள யாத்திரை, மக்களை பிரிவினையில் இருந்து ஒன்றிணைப்பதற்கான யாத்திரை” என்று தனது நடைபயணத்தின்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி 2- வது நாள் யாத்திரையில் வியாழக்கிழமை அகஸ்தீஸ்வரத்தில் இருந்து சுசீந்திரத்திற்கு வந்தார். பின்னர் மாலையில் சுசீந்திரத்தில் இருந்து நாகர்கோவில் கிறிஸ்தவக் கல்லூரி நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். அவர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டெரிக் … Read more

ஒன்றிய அரசு சுத்தமா கண்டுக்கல… நீங்களாவது இதை செய்யுங்க…முதல்வருக்கு ரவிக்குமார் எம்பி கோரிக்கை!

இளையபெருமாள் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக, விசிக எம்பி ரவிக்குமார், முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இந்திய ஒன்றிய அரசால் மணடல் குழு அமைக்கப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்டது எல்.இளையபெருமாள் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு.. ’Committee on Untouchability, Economic and Educational Development of the Scheduled Castes’ என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட அந்தக் குழு பொதுவாக ’இளையபெருமாள் கமிட்டி’ என்றே அழைக்கப்படுகிறது. பட்டியல் சாதிகளின் நலன்களுக்கான மத்திய ஆலோசனை வாரியம் … Read more