கேப்டனின் தேமுதிக படுத்தே விட்டது- பிரேமலதாவை டென்ஷன் ஆக்கும் எடப்பாடியார்!

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு, 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று தமிழக முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், … Read more

நாட்டில் முதல்முறையாக தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: கனிமொழி கருணாநிதி பெருமிதம்

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று மதுரையில் துவங்கி வைத்தார். இதை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவங்கி வைத்தார். பின்னர் கனிமொழி … Read more

அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்து கொள்ள அவரவர்களுக்கு உரிமை உண்டு: ஐகோர்ட் கிளை

மதுரை: அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்து கொள்ள அவரவர்களுக்கு உரிமை உண்டு, அதனை யாரும் தடுக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை முன் மனுதர்ம தேவ இதிகாசங்களை எரித்து போராட்டம் நடத்த தடை கோரிய வழக்கில், போராட்டங்கள் நடத்த அரசு தரப்பில் எந்த அனுமதியும் அளிக்கவில்லை, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை காலநிலை மாற்ற வரைவு செயல் திட்ட அறிக்கையை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடுவதா? – மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: சென்னைக்கான காலநிலை மாற்ற வரைவு செயல் திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னைக்கான காலநிலை மாற்ற வரைவு செயல் திட்ட அறிக்கையை சென்னை மாநகராட்சி இணையத்தில் ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அக்டோபர் 26-ம் தேதிக்குள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பதற்கான வழிகாட்டுதலையும் குறிப்பிட்டுள்ளது. சென்னைக்கான காலநிலை மாற்ற வரைவு செயல் திட்ட அறிக்கையை … Read more

கடைசியில இப்டி சொல்லிட்டாரே? உதயச்சந்திரன் IAS-ஐ வம்பிழுத்த வேலுமணி!

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார். அப்போது மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். பின்னர் பேசிய எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் எந்த வரியும் ஏற்றவில்லை. ஆனால் தற்போது அப்படியில்லை. குடிநீர் வரி, சொத்து வரியை அதிகப்படுத்தினர். தற்போது மின் கட்டணத்தை … Read more

ஆவின் இனிப்புகளின் விலை உயர்வு இன்று முதல் அமல்

தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் மூலம் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தரமான பால் மற்றும் இனிப்புகள் கிடைப்பதால் மக்கள் ஆவின் பொருட்களை விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில், பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஆவின் இனிப்பு பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட விலைகளும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.  உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலை விவரம்:   * 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.45 லிருந்து … Read more

போலி பத்திர பதிவுகளை சார்பதிவாளர் ரத்து செய்யும் சட்டம் ஒரு வாரத்தில் அமல்: அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: பத்திரப்பதிவு துறையில் உள்ள குறைகள் சரிசெய்யப்படும் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுக்கு காலதாமதம் ஆவதாக எழுந்த புகாரை அடுத்து மதுரை ஒத்தக்கடையில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவகத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், போலி பத்திர பதிவுகளை சார்பதிவாளர் ரத்து செய்யும் சட்டம் ஒரு வாரத்தில் அமலுக்கு வர உள்ளது. போலி பத்திரம் எப்போது பதிவு செய்திருந்தாலும் ரத்து செய்யப்படும் என்றார். பத்திரப்பதிவு துறையில் உள்ள குறைகள் … Read more

`30 ஆண்டுகளாக பதவி உயர்வில்லை' – டிஎம்எஸ் வளாகத்தில் போராட முயன்ற செவிலியர்கள் கைது

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுகாதார செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராம சுகாதார செவிலியர்களுக்கு 30 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், கிராம சுகாதார, செவிலியர்களின் முதல் கட்ட பதவி உயர்வை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தியும், ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திற்கும் ஒரு சமுதாய நல செவிலியர் பணி இடத்தை உருவாக்க வெளியிடப்பட்ட ஆணையை அமல்படுத்த வலியுறுத்தியும் செவிலியர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இவற்றுடன் சேர்த்து சுமார் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று … Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.1-ல் காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடக்கம்

சென்னை: தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளவும் கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை … Read more

இது இல்லாட்டி டைடல் பார்க் வந்தாலும் கஷ்டம் தான்… பெரிய சிக்கலில் மதுரை!

மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் வரப் போகிறது. இதுதான் சமூக வலைதளங்களில் இன்றைய ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. தெற்கு விஸ்வரூபம் எடுக்கும். வேலைவாய்ப்பு பெருகும். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களை நோக்கி செல்ல வேண்டியதில்லை. தென் மாவட்ட இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் தமிழக அரசு அளித்துள்ள மகத்தான பரிசு என்றெல்லாம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசி வருகின்றனர். இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஓரிடத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திறக்கப்பட்டு … Read more