மதுரையில் மாற்றுக்கடைகள் கட்டிக்கொடுத்தும் வெளியேற மறுத்தவர்களின் கடைகள் அகற்றம்.!

மதுரையில் மாநகராட்சி சார்பில் மாற்றுக்கடைகள் கட்டிக்கொடுத்தும் மீனாட்சியம்மன் கோவில் எதிரே புதுமண்டபம் பகுதியில் இருந்து வெளியேற மறுத்தவர்களின் 32 கடைகள் அகற்றப்பட்டன. புதுமண்டபத்தின் சிற்பங்களை பாதுகாக்கும் நோக்கில் அங்கிருந்த கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் குன்னத்தூர் சத்திரத்தில் கடைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன. எனினும் 32 கடைக்காரர்கள் கடைகளை அகற்ற மறுத்து வந்தனர். இது தொடர்பான வழக்கில் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவற்றை போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கோவில் ஊழியர்கள் … Read more

சென்னையில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைத்தார். திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். 60 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் நல்லடக்கம் … Read more

புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ள பீடத்தில் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன.  சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார். சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ கலைஞரின் வெண்கலச்சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிலை வைக்கப்பட்டுள்ள இந்த பீடத்தில், 1.வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்2. அண்ணா வழியில் அயராது உழைப்போம்3. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்4.இந்தி திணிப்பை எதிர்ப்போம்5.மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி … Read more

விஜே சித்து மாதிரி நக்ஷ்த்திரா வாழ்க்கை ஆகிட கூடாது.. தேம்பி அழுத சீரியல் நடிகை ஸ்ரீநிதி!

யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி. இவர் தனது உயிர்த் தோழியான நக்ஷ்த்திரா குறித்து பேசிய விஷயங்கள் தான் இப்போது ஊடகங்களில் பரபரப்பாகி உள்ளது. விஜே சித்து எனக்கு நல்ல பிரெண்டு. அவ பாய் பிரெண்டோட இருக்கும்போது என்னோட பிரெண்ட்ஸ்லாம் அவகிட்ட பேச  சொன்னாங்க. ஆனா, நான் எதுவும் சொல்லல. ஏன்னா ஒருத்தங்க லவ் பண்ணும்போது நம்ம கண்ணுக்கு அவங்க மட்டும்தான் தெரிவாங்க, மத்தவங்க என்ன சொன்னாலும் கேட்காது. டிசம்பர் 8 … Read more

கொடூர கொலை., கொந்தளிப்பில் டிடிவி தினகரன்.!

தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழகம் முழுவதும் படுகொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு திரு.வே.சுப்பிரமணி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த துயரமடைந்தேன்.  அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வே.சுப்பிரமணி படுகொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் விரைந்து கைது செய்து உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.  தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழகம் … Read more

பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்க தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த விஏஓ தற்காலிக பணியிடை நீக்கம்

தருமபுரி அருகே பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்க தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த விஏஓ-வை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரூர் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சில்லாரஹள்ளி விஏஓ வாக பணியாற்றி வந்த பரமசிவம் என்பவரும், உதவியாளர் ஜெயந்தியும் சேர்ந்து பிறப்பு, இறப்பு உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள் வழங்குவதற்கும் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.   Source link

“ஒன்றியம், திராவிட மாடல்… இந்த வார்த்தைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்

கோவை: “ஒன்றியம், திராவிட மாடல் போன்ற வார்தைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்த பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோவை சாய்பாபா காலனி அவைத் தலைவர் ரமேஷின் மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துக்குக் காரணம் போக்குவரத்து விதிமீறல். குறிப்பிட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கனரக வாகனங்கள் இயங்குவதே காரணம். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் … Read more

இந்த பொழப்புக்கு இது நீங்கதான் தூக்குல தொங்கனும்… இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் இணையதளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொண்டு வந்தாலும், பொழுதுபோக்கான அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகினறனர். இதிலும் குறிப்பாக நெட்டிசன்கள் பதிவிடும் மீம்ஸ்களுக்கு நல்ல வரவேற்கு அளித்து வருகினறனர். உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸ்களாக பதிவிடும் மீம்ஸ் கிரியேட்ட்ர்கள் சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லைஃ குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் சின்னத்திரையில் சீரியல் … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மறைக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. pic.twitter.com/ofV1ElXgPQ — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 28, 2022 சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு … Read more

மனைவி மற்றும் 2 பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை

சென்னை அடுத்த பொழிச்சலூரில் மனைவி மற்றும் 2 பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ஐடி ஊழியரான பிரகாஷ், நேற்று அவரது திருமண நாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மனைவி காய்த்ரி மற்றும் மகள் நித்யஸ்ரீ, மகன் ஹரி கிருஷ்ணன் ஆகியோருக்கு மயக்கம் மருந்து கொடுத்துவிட்டு மரம் அறுக்கும் இயந்திர ரம்பத்தால் கழுத்தை அறுத்து … Read more