புதுச்சேரியில் தியாகிகளுக்கு ரூ.1000 பென்ஷன் உயர்வு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: “புதுச்சேரியில் தியாகிகளுக்கு ரூ.1000 பென்ஷன் உயர்த்தி வழங்கப்படும்; மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியது: ‘‘நிதிலை அறிக்கையில் நம்முடைய நிதி ஆதாரம் என்ன, கடன் எவ்வளவு பெறப்போகிறோம், எவ்வளவு செலவு செய்துள்ளோம் உள்ளிட்டவை குறித்து விளக்கமாக சொல்லியுள்ளோம். இதில் எந்த மறைவும் இல்லை. இருக்கின்ற வருவாயை கொண்டு அறிவித்துள்ள திட்டங்களை … Read more

குடிக்க பணம்தர மறுத்த மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மதுரை மாவட்டம்,  மேலூர் அருகே கீழவளவு  பகுதியில்  வசித்து வந்தவர் முருகன்  என்ற சுப்பையா (30). இவரது தனது மனைவி செல்வியுடன் வாழ்ந்துவந்த நிலையில்  இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முருகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த அவர், மனைவியுடன் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு மதுப்பழக்கத்திற்கு அடிமையான  முருகன் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு  தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட … Read more

ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் ஐடி சோதனை நிறைவு

ஆம்பூர்: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் ஐடி சோதனை நிறைவுபெற்றது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வருமானவரித்துறை பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்  கடந்த 23ம் தேதி ஃபரிதா குழுமத்திற்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி சோதனை நடைபெற்றது. மேலும், ஃபரிதா குழுமம் தொடர்புடைய அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை … Read more

'வலதுசாரியாக இல்லாமல் நியாயத்தின் பக்கம் நிற்கிறீர்கள்' – குஷ்புவை பாராட்டிய சசி தரூர்!

பில்கிஸ் பானு விவகாரத்தில் நடிகை குஷ்பு நியாயத்தின் பக்கம் நின்றுள்ளதாக பாராட்டியுள்ளார் சசி தரூர். குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு 2008இல் ஆயுள் தண்டனை விதித்து … Read more

’‘சொத்து விவரம் தாக்கல் செய்யுங்கள்” – நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். பின்னர், இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை … Read more

ஜெயலலிதா மரணம் – நாளை முழு அறிக்கை தாக்கல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில்  2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்தது. ஆணையம் சார்பாக 151 பேரிடமும், தங்களை விசாரிக்க வேண்டும் என்று மனு செய்த 7 பேரிடமும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணையை நடத்தியது. … Read more

தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி: தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் மற்றும் அதன் மேலூர், நாவினிப்பட்டி, ஆட்டுக்கும், கீழையூர், கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கள்ளக்குறிச்சி வழக்கு: நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட கடிதம்.. நடந்தது என்ன?

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூர் பள்ளியில் ஜூலை 13ம் தேதி மர்ம மரணம் அடைந்த மாணவி குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்ன சேலம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய … Read more

சீரியலில் பாரம்பரியம்… வலைதளத்தில் வண்ணமயம்… மாரி நடிகையின் அசத்தல் லுக்

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்புவதில ஆர்வம் காட்டி வரும் ஜீ தமிழில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது மாரி சீரியல். ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த சீரியலின் ரீமேக்காக அமைந்துள்ள இந்த சீரியலில், தெலுங்கில் நடித்த நடிகை ஆஷிகாவே தமிழிலும் நாயகியாக நடித்துள்ளார். குறுகிய நாட்களில் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஆஷிகாவுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆஷிகா தமிழில் … Read more

“டோல்கேட் கட்டணத்தை உயர்த்துவது அநீதி” – அன்புமணி அடுக்கும் காரணங்கள்

சென்னை: “சுங்கச் சாவடிகள் தொடர்பாக மத்திய அரசு அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், சுங்கக் கட்டணத்தை நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து உயர்த்துவது அநீதியானது” என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 50 சுங்கச்சாவடிகளில் 28 சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. சுங்கச்சாவடிகளின் கட்டண வசூல் வெளிப்படைத் தன்மை … Read more