குடிபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

பள்ளிப்பட்டு: குடிபோதனையில்  வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் பழைய காலனியைச் சேர்ந்தவர் சஞ்சய்(18)  8ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு வேலைக்கு செல்லாமல்  ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகின்றது. மது பழக்கத்திற்கு அடிமையாகி பணம் கேட்டு பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு அவரது கூரை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை … Read more

“மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவே சில இலவசத் திட்டங்கள்” – புதுச்சேரி பாஜக அமைச்சர் கருத்து

காரைக்கால்: மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவே சில இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என பாஜகவைச் சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் கூறியுள்ளார். காரைக்காலில் இன்று (ஆக.22) அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”புதுச்சேரி முதல்வர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த, … Read more

ஜிஎஸ்டி வரி வருவாய் எகிற என்ன காரணம்? அடடா… இந்த விஷயத்தை கவனிச்சிங்களா!

‘ஒரே நாடு- ஒரே வரி’ திட்ட்த்தின் கீழ் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) வசூலித்து வருகிறது. மொத்தம் சுமார் 1,300 பொருட்களுக்கும், 500 விதமான பல்வேறு சேவைகளுக்கும் 5%,12%, 18%, 28% என நான்கு வகையின்கீழ் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்போது, தினமும் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல் ஏன் இன்னும் ஜிஎஸ்டியில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. … Read more

திடீர் `பிரேக் டவுன்’ மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி நின்ற அரசு பஸ்: டிரைவர் சாதுர்யத்தால் 120 பயணிகள் தப்பினர்

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே மலைப்பாதையில் திடீரென பஸ் பிரேக் டவுன் ஆனதால் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. டிரைவரின் சாதுர்யத்தால் 120 பயணிகள் உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செங்கரையில் இருந்து ஆத்தூருக்கு நேற்று காலை 6.30 மணியளில் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் முள்ளுக்குறிச்சி பள்ளியில் படிக்கும் 50 மாணவர்கள் உள்பட 120 பேர் பயணம் செய்தனர். மேல்பூசணி குழிப்பட்டி அருகே மலைப்பகுதியில் பஸ் வளைந்தபோது, திடீரென பிரேக் டவுன் ஆனது. டிரைவர் … Read more

பொதுத்துறை வங்கிகள் எப்படி தனியார்மயமாக்கப்பட வேண்டும்?

வங்கி தேசியமயமாக்கலின் 53ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. அப்போது, வங்கிகள் தேசியமயமாக்கலின் நன்மை, தீமைகள் குறித்த விவாதம் மீண்டும் கிளம்பியது.கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் அதிக அளவு செயல்படாத சொத்துக்களுடன் (NPAs) போராடி வருகின்றன. எளிமையாகச் சொன்னால், NPA கள் கடன் வாங்கியவர் வங்கியில் திருப்பிச் செலுத்தத் தவறிய கடன்கள். கணிக்கத்தக்க வகையில், அதிக அளவு NPA கள் வங்கியின் லாபத்தை பாதிக்கிறது.செயல்படாத சொத்துக்ளின் (NPA) அதிகரிப்பு மற்றும் அடுத்தடுத்த வருமான … Read more

அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரத்திற்கு எதிராக உள்ள மனுக்களை உச்ச நீதி மன்றம் விசாரணை..!

உச்ச நீதிமன்றம் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் பிரிவுகள் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்துள்ளது. பணப் பரிமாற்ற மோசடிகளை தடுக்கும் வகையிலான பண மோசடி தடுப்புச் சட்டத்தில், அதை செயல்படுத்தும் அமலாக்கத் துறைக்கு புதிய அதிகாரங்கள் அளித்து சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமலாக்கத் துறைக்கு  பண மோசடி வழக்குகளில் சொத்துக்களை பறிமுதல் செய்தல், சோதனை நடத்துதல், கைது … Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: தமிழகத்தில் ரூ.16,914 கோடியில் 714 திட்டப் பணிகள்

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் மொத்தம் ரூ.16,914 கோடி செலவில் 714 பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நகரத்திற்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி நிதி வழங்கப்படும். இதைப்போன்று மாநில அரசு ரூ.500 கோடி நிதி வழங்க வேண்டும். இவை இரண்டும் சேர்த்து ரூ.1000 … Read more

கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்க! – ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலை.களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அவர்களின் நிலை கவுரவமாக இல்லை; … Read more

ஆயுள் தண்டனை கைதியை காதலியுடன் ஓட்டலில் தங்க விட்டு காவல் காத்த போலீஸ்.. இதுலாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?

சிறையில் இருந்து வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வெளியே அழைத்துச்செல்லப்பட்ட 55 வயது ஆயுள் தண்டனை கைதியை, நடுவில் காதலியுடன் ஓட்டலில் தங்குவதற்கு அனுமதித்த 3 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கையூட்டு பெற்றுக் கொண்டு ஓட்டல் வாசலில் பலத்த காவலில் ஈடுபட்ட காவலர்கள் கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பச்சாகான்..! 55 வயதான இவர் இர்பான் கான் என்பவரை கொலை செய்த வழக்கில் … Read more

நிதி அமைச்சர் கார் மீது காலணி வீச்சு விவகாரம்: பாஜக மகளிரணி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு

மதுரை: தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த 3 பெண்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த குமார், பாலா, … Read more