வெள்ளைப்படுதல் நிறம்.. பின்னணியில் இருக்கும் மருத்துவ காரணங்கள் என்ன?

பெண்ணின் யோனியில் இருந்து வெளியேறும் திரவம், முற்றிலும் இயற்கையானது. பிறப்புறுப்பு, கருப்பையின் வாய் போன்ற இடங்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய கசிவே இந்த வெள்ளைப்படுதல். உண்மையில், இது உறுப்பை சுத்தமாகவும், தொற்று இல்லாததாகவும் வைத்திருப்பதாக அறியப்படுகிறது. “உங்கள் பிறப்புறுப்பு திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உயவு அளிக்கவும், உங்கள் யோனியை சுத்தமாக வைத்திருக்கவும் வெள்ளைப்படுதல் உதவுகிறது” என்று ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி கூறினார். சாதாரண வெள்ளைப்படுதல் என்பது மெல்லிதாக ஒட்டக்கூடிய தன்மையுடனும் இருக்கும். எவ்விதத் துர்நாற்றமும் … Read more

நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால்.. ஊழியர்களுக்கு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை.!

நாளை நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வருமாறு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கோரி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வருமாறு தொழிலாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி எந்த விடுப்புகள் தரப்பட மாட்டாது எனவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் … Read more

டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு நடக்குமா? – ரவீந்திரநாத் எம்பி கருத்து

ராஜபாளையத்தில் ரவீந்திரநாத் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு இருக்கும் ஒரே எம்பி நான் தான். எனவே கட்சியில் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தாண்டி அதிமுக எம்பியாக பணியாற்றுகிறேன். தற்போது அனைத்து மாவட்டத்திலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கட்சி யில் எனது பணி குறித்து ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுப்பார். நீதிமன்ற உத்தரவுப்படி தலைமைக் கழக அலுவலகத்தில் சாவி கொடுக்கப்பட்டது. மேல்முறையீட்டில் இரண்டு வாரங்களில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் … Read more

ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்புக்கு காரணமானதா மழைநீர் தேக்கம்?

உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டியில் பள்ளத்தில் தேங்கியுள்ள மழைநீரில் விழுந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (ஜேசிபி டிரைவர்) – வள்ளிமீனா தம்பதியினர். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. வள்ளிமீனா, தங்களின் முதல் குழந்தையுடன் தனது தாய் வீடான மூப்பபட்டிக்கு சென்றிருந்திருக்கிறார். மேலும் கவின்சாரதி (ஒன்றரை வயது) என்ற இரண்டாவது குழந்தையை சின்னச்செம்மேட்டுப்பட்டியில் உள்ளள பாட்டி முருகாயிடம் விட்டுள்ளார். இந்நிலையில் … Read more

டிராவில் முடிந்த ஆட்டம்: பிரக்ஞானந்தாவின் அசத்தல் நகர்வுகளால் பூரிப்படைந்த ரசிகர்கள்

44-வது செஸ் ஒலிம்பியாட்யில் விளையாடிவரும் இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா ஆடிய போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இந்த சிறு சருக்கலால் அவரை செஸ் ரசிகர்கள் கொண்டாட மறக்கவில்லை. தமிழகத்தின் செல்லப் பிள்ளையாக பார்க்கப்படும் இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா. இவர் இத்தாலி வீரர் லாரன்சோ லிடிசியை எதிர்கொண்டார். செஸ் போட்டியை பார்க்க வந்த அனைவரின் கண்களும் பிரக்ஞானந்தாவின் மீதே இருந்தது. ஆனால் அவரோ, தந்து விரிந்த கண்களால் செஸ் போர்டையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கழுத்து … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (02.08.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 02/08/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/18/16 நவீன் தக்காளி 15 நாட்டு தக்காளி 12/10 உருளை 40/33/26 சின்ன வெங்காயம் 38/34/30 ஊட்டி கேரட் 65/60/45 பீன்ஸ் 50/40/30 பீட்ரூட். ஊட்டி 48/45 கர்நாடக பீட்ரூட் 22/20 சவ் சவ் 18/16 முள்ளங்கி 15/12 முட்டை கோஸ் 30/20 வெண்டைக்காய் 12/10 உஜாலா கத்திரிக்காய் 20/10 வரி கத்திரி 20/15 காராமணி … Read more

மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பதால் மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்: தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் வேண்டுகோள்

சென்னை: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்றுதமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து டான்ஸ்டியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 14 மாதங்களில் குறு மற்றும் சிறு தொழிற்சாலைகளின் மறுவாழ்வுக்காகவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் பல்வேறு சலுகைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவை … Read more

கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – உறவினர்கள் சாலைமறியல்

தியாகதுருகம் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூவாடு கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி என்பவரின் மனைவி பெரியநாயகம், இவருக்கு வேணுகோபால், ஐயப்பன் ஆகிய இரண்டு மகன்களும், மஞ்சமாதா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியநாயகம் கர்ப்பமுற்ற நிலையில், கருக்கலைப்பு செய்வதற்காக நேற்று தியாகதுருகம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு கருக் கலைப்பு செய்யப்பட்டதாகவும் இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் … Read more

சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் பொலிரெட்டிபாலம் யார்டில், கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 2ஆம் தேதி, காலை 8.15 மணி முதல் 13.35 மணி வரை ஒரு சில எக்ஸ்பிரஸ் மற்றும் மெமு ரயில் சேவைகள் மாற்றப்படும். ரயில் எண் 12711, விஜயவாடா – சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 2  விஜயவாடா சந்திப்பில் இருந்து காலை 6:10 மணிக்கு புறப்படும் ரயில், கூடூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படும். ரயில் … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நேற்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் … Read more