நீதிமன்ற தீர்ப்பால், படுஜோரில் ஓ.பி.எஸ்.? ட்விஸ்ட் வைக்கும் முன்னாள் அமைச்சர்.. ஜெயக்குமாரால் அதிர்ச்சி.!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை முடிவில் நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கப்பட்ட தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது அல்ல.” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.   கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அதிமுக ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் எந்தவிதமான ஒப்புதலும் பெறாமல் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது … Read more

தருமபுரி | தேசிய கொடியை ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியர்: நடவடிக்கை கோரி கிராம மக்கள் மனு

தருமபுரி: தருமபுரி அருகே சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற மறுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பேடர அள்ளி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், பேடர அள்ளியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தமிழ்ச்செல்வி என்பவர் பணியாற்றுகிறார். ஆகஸ்ட் … Read more

அன்பில் மகேஷ் பதவிக்கு ஆபத்து? – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி!

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராஜினாமா செய்ய வேண்டும் என, திமுகவினரே வலியுறுத்தி வருவதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில், அவரது மகனும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக உள்ளார். இளம் அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு … Read more

மனைவியின் நினைவு நாளில் தற்கொலை செய்த கணவர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அருகே உள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு வயது 55.  இவர் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். முதல் மனைவி முனியம்மாளுக்கு ஒரு ஆண் (விஜய்) குழந்தையும் இரண்டாவது மனைவி இந்திராகாந்திக்கு ஒரு ஆண் குழந்தை (சுந்தரேசன்) ஒரு பெண் குழந்தை (இனிதா ) உள்ளனர். இதில் முதல் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து இரண்டாவது … Read more

குளித்தலை: காவிரி ஆற்றுப் பகுதியில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் -கடைசியில் நடந்த சோகம்

குளித்தலை அருகே கடம்பர் கோயில் காவிரி ஆற்றுப் பகுதியில், குளிக்கச் சென்ற சகோதரர்கள் இருவரும் நீரில் மூழ்கியதில், தம்பி சடலமாக மீட்ட நிலையில் இன்று அண்ணனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயில் பகுதி காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சகோதரர்களான திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையத்தை சேர்ந்த ஜெயபாலன், ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ராமதாஸ் மற்றும் மனோகரன் ஆகிய மூன்று குடும்பத்தினரும் சேர்ந்து, நேற்று தங்களது சொந்த ஊரான … Read more

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: ஜூலை 11 அன்று நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக்கூட்டத்துக்கு தடை கோரியும், அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினரான அம்மன் பி.வைரமுத்துவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து பொதுக்குழுக் கூட்டம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11 அன்று நடந்தது. … Read more

அதிமுகவும், அந்த ரெண்டு பேரின் கடிதங்களும்… சபாநாயகர் அப்பாவு முடிவு இதுதான்!

தமிழகத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக சபாநாயகரிடம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர், விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் தான் எந்தவொரு பதிலும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். அவரே சொல்லாத போது நான் மட்டும் என்ன சொல்ல முடியும். அதேசமயம் பழைய நடைமுறை தொடரும் என்று ஒருபோதும் கூறியது இல்லை. புதிதாக உருவாக்கப் … Read more

கோவை: மினி எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் அருகில் அமர்ந்திருந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை பிச்சனூர் அருகே வாட்டர் ஹீட்டரை தொட்டுப்பிடித்த 7 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி பேபி. இந்தத் தம்பதிக்கு 7 வயதில் கிருத்திக் என்ற மகன் இருந்தான். ராமன் கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மகன் கிருத்திக்குடன், பேபி தனது தாய் வீட்டில் தங்கி பிச்சனூர் அரசுப் பள்ளியில் மகனை 3-ம் வகுப்பு படிக்க … Read more

திருப்பூரில் ‘ஒரு குரல் புரட்சி’ திட்டத்துக்கு வரவேற்பு: தினமும் குவியும் 60+ புகார்கள்

திருப்பூர் மாநகராட்சியில் ‘ஒரு குரல் புரட்சி’ திட்டத்தில் சாலை சீரமைப்பு மற்றும் சாக்கடை கட்டுவது தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன. திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நிலவும் குறைகளை தீர்க்கும் வகையில், ‘ஒரு குரல் புரட்சி’ என்ற திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கடந்த 13-ம் தேதி தொடங்கி வைத்தனர். பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக மாநகராட்சி சார்பில் 155304 என்ற இலவச தொடர்பு எண் அறிமுகம் செய்யப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தின் … Read more

எடப்பாடிக்கு தெற்கில் இருந்து வந்த சேதி… சொதப்புகிறதா மாஸ்டர் பிளான்?

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிர குளத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ரத்ததான கழக நிறுவனர் புதுக்குடி எம்.எஸ்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் தலைமையிலான அரசு வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இதன்மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் 10.5 சதவீத இட ஒதுக்கிட்டை பெற்றனர். ஆனால் 108 சமூக மக்களின் கெட்ட பெயரை எடப்பாடி பழனிசாமி சம்பாதித்துக் கொண்டார். அவர்கள் அனைவரும் எதிராக திரும்பினர். சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு … Read more