கவுன்சிலர்களின் கள ஆய்வுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டும்: சென்னை மேயர் பிரியா உத்தரவு

சென்னை: கவுன்சிலர்களின் கள ஆய்வுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய கவுன்சிலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், வார்டு பிரச்சினைகளையும் மேயர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட கவுன்சிலர் ரேணுகா, “ஆய்வுகளின்போது வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து உரிய தகவல்களை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் … Read more

சேலம் அம்பலவான சுவாமி கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: 2 மாதங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்டம் குகையில் உள்ள அம்பலவான சுவாமி கோயிலின் கல் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை 2 மாதங்களில் தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “சேலம் மாவட்டம் குகை பகுதியில் உள்ள அம்பலவான சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கல் மண்டபம், கோயில் திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களின்போதும் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், இந்த … Read more

“வினை விதைத்தவர்கள் வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது” – மதுரையில் தினகரன் பேச்சு

மதுரை: “வினை விதைத்தவர்கள் வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது” என்று அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் பேசினார். மதுரையில் இன்று அமமுக கட்சியின் சார்பில் மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக நிறுவனத் தலைவர் டிடிவி.தினகரன் பேசியது: “கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி, ஒசூர் வரைக்கும் 234 தொகுதியிலும் அமமுகவுக்கு கட்டமைப்பு உருவாக்கியுள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப்பதவியை ஏலம்போட்டு நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். அம்மாவால் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தவர்கள் … Read more

மக்களுக்கு தேவையானதை முன்கூட்டியே அறிந்து செயல்படுபவர் மோடி- நிர்மலா புகழாரம்.!

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.  சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ” பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த பல்வேறு நாடுகள் கூட தற்போது பின்தங்கி விட்டன. இப்படிப்பட்ட நிலையில், உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா … Read more

“மின் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பெருமிதம்

புதுச்சேரி: “மின் துறையில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம். தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்” என புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த மின் சக்தி திருவிழா நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியது: ‘‘அனைத்து துறைகளிலும் நம்முடைய நாடு தன்னிறைவு பெற்று தலைசிறந்த நாடாக விளங்க வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம். புதுச்சேரி மின் துறையின் வளர்ச்சியை எண்ணிப் … Read more

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் – கோவையில் 3 ஆசிரியர்கள் கைது

கோவையில் ஒரே நாளில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் தொல்லை கொடுத்த மூன்று ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3 ஆசிரியர்கள் உட்பட 5 பேர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் சுகுணாபுரம் மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர் உட்பட நேற்று ஒரே நாளில் … Read more

டாஸ்மாக் பார் டெண்டர்; ஆகஸ்ட் 2 முதல் விண்ணப்பம்

Tamilnadu TASMAC bar tender starts august 2: டாஸ்மாக் பார்களை நடத்துவதற்கு புதிய உரிமம் வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்த டெண்டர் வெளிப்படையாக நடக்க வேண்டும் என பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அதன் சில்லறை கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களை நடத்துவதற்கு புதிய உரிமம் வழங்க டெண்டர்களை வெளியிட உள்ளது. இதையும் படியுங்கள்: அனைத்துக் கட்சி ஆலோசனை: இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் … Read more

‘செவாலியே விருது’க்கு தேர்வான ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிரான்ஸ் நாட்டின் ‘செவாலியே விருது’ பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “பதிப்புத் துறையில் இந்தியா – பிரான்ஸ் இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் … Read more

இளம்வயதில் மரணமடைந்த பாஜக பெண் கவுன்சிலர் – அண்ணாமலை இரங்கல்

இளம்வயதில் இயற்கை எய்திய நீலகிரி மாவட்ட பாஜக பெண் கவுன்சிலருக்கு இரங்கல் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். நீலகிரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரக்‌ஷனா. இவர் கீழ்குந்தா பேரூராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 6வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 வயதே ஆன இளம்வயது கவுன்சிலர் ரக்‌ஷனா கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த இவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்தச் செந்தி அப்பகுதி மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.   ரக்‌ஷனாவின் தந்தை கமலக்கண்ணன் மஞ்சூர் … Read more

வேளாண்மைத் துறையிலிருந்து தோட்டக்கலைத் துறைக்கு தென்னை சாகுபடியை மாற்ற திட்டம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு

தஞ்சாவூர்: தமிழக வேளாண்மைத் துறையிலிருந்து தென்னை சாகுபடியை தோட்டக்கலைத் துறைக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி, அதற்கு தென்னை விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அகில இந்திய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் 2-வது இடமும், உற்பத்தி திறனில் முதலிடமும், சாகுபடி பரப்பில் 3-வது இடமும் வகித்து வருகிறது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 37 மாவட்டங்களில் மொத்தம் 10,84,116 … Read more