'புஸ்வாணம்..': ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ ஒன்றாக சந்திக்காமலே சென்ற பிரதமர் மோடி

இரு நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தமிழகத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை வழியனுப்பி வைத்தார். பிரதமரின் இரண்டு நாள் வருகையின் போது அதிமுகவில் நடக்கும் ஒற்றை பிரச்சினையை வைத்து ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்தது இருந்து. அதைத் தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் … Read more

புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும் – அண்ணா பல்கலையில் மோடி உரை

அண்ணா பல்கலைகக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும் என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வியாழக்கிழமை (ஜூலை 28) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இதைத் தொடந்து, பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 29) அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தனி தீயணைப்பு நிலையம்: மூன்று ஆண்டு இழுப்பறிக்கு பின் பணிகள் தொடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தனி தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுவதற்கான பணிகள் 3 ஆண்டு இழுப்பறிக்கு பின் தொடங்கியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். கோயிலை சுற்றிலும் நெருக்கடியான பகுதி என்பதால் பாதுகாப்பு நடவடிக்கை உறுதி செய்யும் விதமாக சுழற்சி முறையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் தினமும் ஈடுபடுகின்றனர். கோயிலின் ஒவ்வொரு வாசலிலும் பணியிலுள்ள வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே … Read more

தரையில் சிந்தும் ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது-கூட்டுறவுத்துறை உத்தரவு

ரேஷன்  கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும் என கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டு இருக்கும் சுற்றறிக்கையில், ”நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரிபார்த்து தரமான அரிசியை மட்டுமே நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நியாய விலைக்கடைகள் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த … Read more

வரவேற்க இ.பி.எஸ்; வழியனுப்ப ஓ.பி.எஸ்: பேலன்ஸ் செய்த மோடி

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடக்கவிழவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அதிமுக சார்பில் வரவேற்க அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழியனுப்ப ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி இருவரையும் பேலன்ஸ் செய்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது. அதிமுகவில் ஜூன் இறுதி வாரத்தில் வீசத் தொடங்கிய சூறாவளி இன்னும் ஓயவில்லை. ஜூலை 11 ஆம் தேதி ஒரு பெரிய களேபரமே நடந்தது. அதிமுக பொதுக்குழுவில் இ.பி.எஸ் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் … Read more

குடும்பத் தகராறு காரணமாக வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை.!

மதுரை மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் வண்டியூர் சதாசிவம் நகர் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (46). இவர் அனுமார் பட்டியில் இரும்பு கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால், அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வேதனையடைந்த … Read more

75-வது சுதந்திர தினம்: 17 லட்சம் வீடுகள், முக்கிய சாலைகளில் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 லட்சம் வீடுகள் மற்றும் முக்கிய சாலைகளில் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுளளது. இதை செயல்படுத்துவது தொடர்பாக 27-ம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் அலுவலர்கள் … Read more

ரூ.1,600 கோடி மோசடி வழக்கு: ஆருத்ரா கோல்டு இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

வட்டி தராமல் 1,600 கோடி ரூபாயை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் 1,678 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறிய நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் வட்டியை தராமல் மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாமாக … Read more

திண்டுக்கல்லில் சாலையோரம் வீசப்பட்ட ஆதார் அட்டைகள், பான் அட்டைகள், தபால்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செண்பகனூர் அருகே சாலையோர ஓடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள், பான் அட்டைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தபால்களை போலீசார் சேகரித்து அஞ்சல்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். இந்த தபால்கள் அனைத்தும் 3 மாதத்திற்கு முன்பு அனுப்பப்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தபால்களை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் சாலையின் ஓரத்தில் வீசப்பட்டதால், அதுகுறித்த விவரங்கள் தெரியாமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில், சம்பந்தப்பட்ட அஞ்சலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். Source … Read more

கோடநாடு வழக்கு | “கேரளாவில் சயான் குடும்பத்தாரிடம் விசாரணை” – அரசு வழக்கறிஞர் தகவல்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மறு புலன் விசாரணையில் இதுவரை 267 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் குடும்பத்தினரிடம் கேரளாவில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு தேயிலை தோட்டத்தில் உள்ள பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு சம்பந்தமாக 5 தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் … Read more