கள்ளக்குறிச்சி | பேச்சுவார்த்தையில் எடுத்த முடிவின்படி அரசுப் பள்ளியில் கொடியேற்றிய பட்டியலின ஊராட்சி பெண் தலைவர்
கள்ளக்குறிச்சி: போலீஸார் முன்னிலையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் படி, சின்னசேலத்தை அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராம அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் சுதா நேற்று தேசியக் கொடியேற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குட்பட்ட எடுத்தவாய்நத்தம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. “இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டுகளில் ஊராட்சி மன்றத் தலைவர் சுதந்திர தின நாள்களில் தேசியக் கொடி ஏற்றியதைப் போன்று, இந்த ஆண்டு தானும் தேசிய கொடியேற்ற அனுமதிக்க வேண்டும்” … Read more