“இப்போதைக்கு தகவல் தர முடியாது” – நீட் மசோதா குறித்த ஆர்டிஐ மனுவிற்கு ஆளுநர் மாளிகை பதில்

சென்னை: நீட் விலக்கு மசோதாவானது சம்பந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ள நிலையில், அதுகுறித்து தகவல் தெரிவிக்க முடியாது என்று தகவல் அறியும் உரிமை சட்ட மனுவிற்கு ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் ‘தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்’ தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் … Read more

செஸ் ஒலிம்பியாட்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை, போட்டிகள் இரண்டு அரங்குகளில் நடைபெறவுள்ளன. ஒரு அரங்கில் ஒரே நேரத்தில் 50 போட்டிகளும், … Read more

திருச்சி போலீஸ் ரெய்டில் சிக்கிய வி.சி.க மாநில நிர்வாகி!

எல்பின்’ என்ற தனியார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வந்தவர் ரமேஷ்குமார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அச்சு ஊடக பிரிவின் மாநில துணை செயலாளராக இருந்துள்ளார். எல்பின் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில், முதலீட்டு திட்டங்கள், ஆன்லைன் மார்க்கெட்டிங் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தது. இந்நிறுவனத்தில் இன்னொரு இயக்குனராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக பிரிவு மாநில துணை செயலாளராக  ராஜாவும் செயல்பட்டு வந்தார் . இந்த தனியார் நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பல … Read more

இந்த அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.!

சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  “வங்கக்கடலில் கச்சத்தீவுக்கும்,  கோடியக்கரைக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேரை அவர்களின் விசைப்படகுடன் சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. கடந்த 10 நாட்களில்,  மூன்றாவது முறையாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். சிங்களக் … Read more

அதிமுகவில் தனக்கான அதிகாரம் தற்போதும் தொடர்கிறது – ஓபிஎஸ்

ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் அதிமுகவில் தனக்கான அதிகாரம் தற்போது வரை தொடர்வதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதிமுகவின் சிறப்பு பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் கூரியர் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஒற்றைப் பதவி அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் அல்லது பிற புதிய பதிவியிடங்கள் அதிமுகவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கடிதம் வந்தால் ஏற்க கூடாது என தெரிவித்துள்ளார். அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட … Read more

மாங்கனித் திருவிழா: விமரிசையாக நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்

காரைக்கால்: மாங்கனித் திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவரும், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், கைலாசநாத சுவாமி நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குட்பட்ட, காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: உபகரணங்கள் தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான உபகரணங்களை தமிழ்நாடு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது இந்திய தேர்தல் ஆணையம். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மாநில தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநில … Read more

சேலம்- சென்னை 8 வழிச் சாலை கைவிடப் படுமா? மத்திய அமைச்சர் வி.கே சிங் பதில்

சேலம் எட்டு வழிச்சாலைக்கான 90 % நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே  திட்டபணிகள் தொடங்கும் எனவும், அதே சயம் மக்கள் முழுமையாக எதிர்த்தால் திட்டம் கைவிடப்படும் என்று  மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி. கே. சிங் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் வேலுார் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம், வேலுாரில் நேற்று நடைபெற்றது. இதில் இணை அமைச்சர் வி.கே. சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது : தமிழகத்தில் உள்ள தேசிய … Read more

ஜல்லிக்கட்டு விவகாரம் : இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! முழு விவரம்.!

சென்னை ஒக்கியம் துரைபாக்கத்தைச் சேர்ந்தவர் சேஷன், இவர் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.   இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘‘ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாட்டு மாடுகள் தான் என்பதற்கான கால்நடை மருத்துவர்களின் சான்றிதழ்கள் அளிக்கப்பட வேண்டும். … Read more

“பரிவர்த்தனைகளை இனி திண்டுக்கல் சீனிவாசன் கையாளுவார்” – வங்கிகளுக்கு இபிஎஸ் கடிதம்..!

அதிமுகவின் புதிய பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன் இனி, கட்சியின் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளை கையாளுவார் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  அதிமுகவின் கணக்குகள் உள்ள கரூர் வைஸ்சியா, இந்தியன் வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் இனி திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திட்டு வரவு செலவுகளை முறையாக கையாளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அதிமுகவின் பொருளாளர் தாம் தான் என்றும், தனக்கு தெரியாமல் வங்கி கணக்குகளை வேறு யாரும் … Read more