ஓ.பன்னீர்செல்வம் கையில் அதிமுக – எடப்பாடி பழனிசாமி அப்செட்!

அணியில் உள்ள மாவட்ட செயலாளர்கள், பக்கம் தாவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அண்மையில் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்றும் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு … Read more

நாடு முழுவதும் நடைபயணம் செய்து காந்திய கொள்கையை பரப்பி வரும் கருப்பையா

திருப்பதி: தேசப்பிதா மகாத்மா காந்தியின் அகிம்சை, கொள்கை, நாட்டின் ஒற்றுமையை உட்பட பல கருத்துக்களை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மற்றும் நடைபயணம் மேற்கொண்டு வரும் காந்தியவாதியான எம் கருப்பையாவைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். அகில இந்திய காந்திய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செயலாளராகப் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த கருப்பையா 1992 ஆம் ஆண்டு சைக்கிள் மற்றும் நடைபயணம் பயணத்தைத் தொடங்கி இதுவரை 97,000 கி.மீ. தூரம் கடந்துள்ளார். 2000 ஆம் … Read more

2021 – ஆம் ஆண்டு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் சேர்க்கை அறிவிப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஓரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 24.06.202 முதல் 20,07.2022 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு 18.08.202 முதல் 23.08.2022 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. எனவே பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஓரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகவும் என்று … Read more

புரட்டாசி மகாளய அமாவாசை – மதுரையிலிருந்து காசிக்கு விமான சுற்றுலா!

புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மதுரையிலிருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. தற்பொழுது புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிகத் தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த இருக்கிறது. இந்த 6 நாட்கள் சுற்றுலா, செப்டம்பர் 24 அன்று மதுரையில் இருந்து துவங்குகிறது. விமான கட்டணம் … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு: 10 நாட்களில் முடிவெடுக்க ஆட்சியருக்கு உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணத்தையடுத்து சூறையாடப்பட்ட பள்ளியை சீரமைக்கவும், பள்ளியை மீண்டும் திறக்கவும் அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனு மீது 10 நாட்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 17-ம் தேதி அப்பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு யாரும் நுழையக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. … Read more

விலைவாசி உயர்வு அனைவருக்கும் பொதுதானே! -அப்போ அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் அகவிலைப்படி ?

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது தமிழக அரசு ஊழியர்ககள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கட்டுமே என்று அகவிலைப்படி 3 %அதிகரிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவி்ப்பை அடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்து 31% ஆக இருந்து வந்த DA … Read more

ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்பவர், வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், காவலர் குடியிருப்பில்  ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த  நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை பயன்படுத்தப்படுவது போன்ற விவகாரங்கள் குறித்து விசாரித்தார் . டிஜிபி கடந்த வாரம் தாக்கல் செய்த அறிக்கையில், ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு … Read more

தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சீபுரம் மாவட்டத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17 முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு 10-15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.2 இலட்சமும் 20 ஆண்டுகளுக்கு மேல் … Read more

“அந்த மாணவிகள் என்மகளின் ஃப்ரெண்ட்தானா? ஆதாரத்த காட்டுங்க’-கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

45 நாட்களாகியும் மர்மம் ஏன் இன்னும் மர்மமாகவே இருக்கிறது என்று விழுப்புரத்தில் பேட்டியளித்த கள்ளக்குறிச்சி மாணவி  தாயார் செல்வி வருத்தம் தெரிவித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நேற்றைய தினம் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையில் முதல் மற்றும் இரண்டாம் பிரேத பரிசோதனை விவரங்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பரிசோதனை அறிக்கை விவர நகல்களை வழங்கும்படி மாணவியின் தாயார் மனுதாக்கல் செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தாயார் செல்வி, … Read more

பழனி கோயில் திருமஞ்சன கட்டண உரிமை யாருக்கு? ஐகோர்ட் முக்கிய உத்தரவு

பழனி முருகன் கோயில் திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.பழனி முருகன் கோயில் அர்ச்சகர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பழனி முருகன் கோயிலில் பூஜைகள் செய்வதற்கான கட்டணம் இந்து சமய அறநிலைய துறையின் ஆணையர் சார்பாக இறுதி செய்யப்பட்டது. ஒரு பூஜைக்கு ரூபாய் 9 ரூபாய் 40 பைசா என நிர்ணயம் செய்யபட்டுள்ளது.இதில், கோயில் பங்காக 6 ரூபாய் 40 … Read more