#கடலூர் || கல்லூரி மாணவி தற்கொலை பின்னணியில் நாடக காதலனின் கொடூரம்.!

கடலூர் மாவட்டம், தெற்கு பிரச்சாரத்தில், குளிப்பதை வீடியோ எடுத்து இளைஞர் ஒருவர் மிரட்டியதால், கல்லூரி மாணிவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலை செய்து கொண்ட அந்த இளம்பெண், தற்கொலைக்கு முன்னதாக எழுதிய கடிதத்தை தற்போது போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். 21 வயது கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், நைனார் குப்பத்தை இளைஞர் லோகநாதனை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட … Read more

ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு தலைமை மருத்துவர் ஆதித்யா தலைமையில் இருவருக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பேசிய மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ஸ்டீபன் ராஜ், இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்ய வேண்டுமானால் 2.50 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும் எனவும் … Read more

தமிழகத்தில் இன்று 30 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 12 பேர்: 39 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,52,887. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,51,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,578. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் 12 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

"சொத்து மதிப்புக்கு வரியா அல்லது சொத்து மதிப்பே வரியா?" – தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்

சொத்து மதிப்புக்கு வரியா அல்லது சொத்து மதிப்பே வரியா? மத்திய அரசு  சொத்துவரியை அதிகரிக்க சொன்னதாக மீண்டும் மீண்டும் பொய்யுரைக்கிறது தமிழக அரசு என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு திடீர் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரியை 150% வரை அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று தாக்குதலினால் தொழில்கள் நலிவுற்றும், மக்கள் வருமானம் குறைந்தும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த சொத்துவரி உயர்வு கண்டிக்கத்தக்கது. கடந்த … Read more

பாகிஸ்தான் மண்ணில் அக்தரை அலறவிட்ட தமிழக வீரர்: அவரே வெளியிட்ட மாஸ் வீடியோ

Former Cricketer Shoaib Akhtar Share Memories : பாகிஸ்தான் கரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் சோயிப் அக்தர். 90-களில் பாகிஸ்தான் அணியில் கால்பதித்த அவர்,  தனது அசுரவேக பந்துவீ்ச்சின் மூலம் எதிரணி வீரர்களை நிலைகுலைய வைத்தவர். அப்போதைய உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக சச்சின் தெண்டுல்கர், பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல பேட்ஸ்மேன்களை தனது வேகப்பந்துவீச்சின் மூலம் வீழ்த்திய பெருமைக்குரியவர். பந்துவீசுவாதற்காக பவுண்டரி எல்லையில் இருந்து ஓடி வரும் அக்தர் கடந்த … Read more

மத்திய அரசின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து தமிழக அரசு வரி உயர்த்துவதா – தோழமை சுட்டிய கூட்டணி கட்சி.! 

தமிழக அரசின் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மணிலா செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தி அநீதியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  இதற்கான காரணத்தை தெரிவிக்கும்போது ஒன்றிய அரசு உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றிய அரசு திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் அனைத்து … Read more

கல்லூரி மாணவரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் ; 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவையில் கல்லூரி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை இரவு சீனியர், ஜூனியர் தகராறில் குனியமுத்தூர் நேரு கல்லூரி மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு மாணவரை கடுமையாகத் தாக்கி, அவரது ஆடைகளைக் களைந்து அரை நிர்வாணமாக்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. பாதிக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின் பேரில் 9 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு … Read more

திருப்பத்தூர் | மலைக்கிராம துயரம் – வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகேயுள்ள மலை கிராமத்தில் கோயிலுக்குச் சென்ற வேன் சுமார் 50 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்த விபத்தில் ஒரே மலைக் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைத் தொடரின் ஒரு பகுதியில் புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு என 3 கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 20-க்கும் குக்கிராமங்கள் உள்ளன. இதில், நெல்லிவாசல் நாடு பகுதிக்கு உட்பட்ட சேம்பரை பகுதியில் மலைக்கிராம மக்களின் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் … Read more

கீழடி 8-ம் கட்ட அகழாய்வு, 460 பொருட்கள் கண்டெடுப்பு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 460 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறை சார்பில், கீழடியில் பிப்ரவரி 13-ம் தேதி, 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. தனியார் நிலத்தில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நீள் செவ்வக வடிவ தாய கட்டை, செப்பு காசு, சிவப்பு, பச்சை நிற பாசிகள், கழுத்தில் அணியும் பாசி, வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட … Read more

திடீரென மயக்கம் போட்டு விழுந்த சீமான்: தொண்டர்கள் பதற்றம்

திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்த, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்தார். மயக்கத்தில் இருந்த அவரை உடனடியாக தொண்டர்கள் ஆம்புலன்ஸுக்கு தூக்கிச் சென்றனர்.இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்புப் பகுதிகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சீமான் அங்கு சென்றார். அப்போது அவர்களிடம் பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்கள்: சென்னையில் சொத்துவரி 150% வரை உயர்வு… … Read more