அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை! இதுதான் மழைக்கு காரணம்!

கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், தென்காசி, தேனி மற்றும் வட தமிழகத்தில், ஞாயிறு முதல் புதன்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடே மழைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 10 ஆம் தேதி வரை மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும், அப்பகுதிகளுக்கு … Read more

சென்னை மாநகராட்சி Vs ஒப்பந்ததாரர்கள் | பணிகளை முடிக்க Strike Rate; முடிக்காவிடில் Blacklist – அனல் பறந்த மழைநீர் வடிகால் கூட்டம் 

சென்னை: “ஸ்ட்ரைக் ரேட்” நிர்ணம் செய்து மழைநீர் வடிகால்கள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும், உரிய காலத்தில் முடிக்காவிடில் கருப்புப் பட்டியல் நிச்சயம் என்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2071 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. இந்த மழை நீர் வடிகால் முறையாக தூர்வாரி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால்தான் மழைக் காலங்களில் தண்ணீர் எந்த தடையும் இன்றி செல்ல முடியும். இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு மழைநீர் … Read more

’ஜாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்கிறார்’.. துணைத்தலைவி மீது ஊராட்சிமன்ற தலைவி புகார்!

ஊராட்சிமன்ற பெண் தலைவரை அவதூறாகவும், ஜாதி பெயரை குறிப்பிட்டும் பேசிய துணை தலைவர், அவரது கணவர் உட்பட 3 பேர் மீது படியலின வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சிமன்ற தலைவியாக இருப்பவர் செல்வி. துணை தலைவியாக இருப்பவர் ஷகிலா. இந்நிலையில் துணை தலைவர் ஷகிலா மற்றும் அவரது கணவர் ரவி, தன்னை பணிசெய்ய விடாமல் தடுப்பதுடன், ஜாதி பெயரைக் கூறி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர் என பட்டியலினத்தைச் … Read more

கோவிட் தொற்று அதிகரிப்பு: தமிழகம் உள்பட 6 மாநிலங்களை அலர்ட் செய்த மத்திய அரசு

கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால், கொரோனா சோதனை, தடுப்பூசி மற்றும் கோவிட் -19 வுழிகாட்டுதல் நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட ஆறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் … Read more

எதிர்நீச்சலில் இடம்பெயரும் மீன்கள்: மீன்பிடி பகுதியாக மாறிய வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள்

ஆண்டிபட்டி: வைகை அணையில் உள்ள மீன்கள் எதிர்நீச்சல் மூலம் ஆற்றை நோக்கி அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் உள்ளூர் மக்கள் பலரும் அவற்றைப் பிடித்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக பெய்த மழை காரணமாக மூல வைகை மற்றும் முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கொண்டுள்ளது. ஆற்றில் அதிளவில் தண்ணீர் வந்து … Read more

மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை.. இபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றவர்களும் பங்கேற்பு

தேனி பெரியகுளத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ். திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் ஈ.பி.எஸ். நடத்திய பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பி.எஸ். தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் முகாமிட்டுள்ளார். அவரை அவரது ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து வந்து சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ். ஆல் நியமிக்கபட்ட தென்காசி, நெல்லை, திருவாரூர் மாவட்ட செயலாளர்கள், 300-க்கும் மேற்பட்ட ஓ.பி.எஸ். ஆதரவு கட்சி நிர்வாகிகளுடன் பெரியகுளத்தில் … Read more

தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு கடிதம் 

சென்னை: தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் செந்தில் குமாருக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, சராசரியாக தினசரி 2,044 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இந்தியாவின் வாராந்திர புதிய … Read more

’’தாலிச் செயினை அடகுவைத்த பணம்சார் அது’’ – பணத்தை தொலைத்த பெண் போலீசில் புகார்

வங்கியில் நகை அடமானம் வைத்து பணத்தை வாங்கி பைக்கில் வைத்து, வீட்டிற்கு சென்று பார்த்தபோது பணம் காணவில்லை என பெண் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராயப்பன் (49). இவரது மனைவி கீதா (35). இருவரும் இன்று மாலை ராமநத்தத்தில் உள்ள இந்தியன் வங்கியில் விவசாயப் பணிக்கு தனது 7 பவுன் தாலிச் செயினை அடகுவைத்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி, மொபட் … Read more

முதல்வரின் சீரிய முயற்சியால் மழை பாதிப்புகள் பெருமளவில் தடுப்பு: அமைச்சர் பேட்டி

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் சீரிய முயற்சியால் பெருமளவிலான மழை பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்தார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மழை பாதிப்பு தொடர்பாக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பெருமழை காரணமாகவும் காவேரி நதிநீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் பாதிக்கப்படக் கூடிய ஒன்பது மாவட்டங்களில் பேரிடர் முன்னெச்சரிக்கை பணிக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அணைகள் … Read more

பட்டியலினத்தவர் குறித்த அவதூறு கருத்து வழக்கு – நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் பிடிவாரண்ட்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்படத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு … Read more