4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி – அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, முதல்வர் தலைமையில் நடந்த அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், திமுகநிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும்மேல் பணியாற்றியவரும், 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவருமான கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் … Read more

மிக மிக குறைவான வாக்கு வங்கி விகிதம் – ஆனாலும் தேமுதிகவுக்கு தொடரும் மாநில கட்சி அந்தஸ்து!

கடந்த 2011ம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்தாலும், இரண்டு சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத தேமுதிக, மாநில கட்சி அந்தஸ்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுதொடர்பான எதிப்புக்குரல்கள் சமீபகாலமாக அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை 1968 இன் படி, ஒரு மாநிலக் கட்சி மொத்த வாக்குகளில் குறைந்தது 8% பெற்றிருக்க வேண்டும் அல்லது சட்டமன்றத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி … Read more

ஐஏஎஸ் அதிகாரிகள், குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம், ஜிஎஸ்டி விலக்கு: எதிர்க்கட்சி மாநிலங்கள் விரும்புவது இதுதான்

நிதி ஆயோக்கின் ஆளும் கவுன்சில் கூட்டத்தில் தலையிட ஒதுக்கப்பட்ட நேரத்தில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர்: விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் சட்ட உத்தரவாதம், ஐஏஎஸ் அதிகாரிகளின் பற்றாக்குறை, ஜிஎஸ்டி விலக்குகள், மாநிலங்களுக்கான அதிக நிதி ஒதுக்கீடு, மற்றும் கொள்கை விவகாரங்களில் மாநிலங்களுடன் போதுமான ஆலோசனை இதில் முக்கியமா இருந்தது. காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் இடதுசாரிகள் ஆளும் கேரளாவைச் சேர்ந்த முதல்வர்கள், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியதால் … Read more

இன்று முதல் ஆரம்பம்..  உச்சகட்ட பரபரப்பில் ஓபிஎஸ்.!!

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவு செய்ய இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் … Read more

பாழடைந்த வீட்டில் கல்வீசும்’சந்திரமுகி’ திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை

கடலூர் முதுநகரில் பாழடைந்த வீட்டில் இருந்து கற்கள் வந்து விழுவதாக கூறி மக்கள் அச்சத்தில் தூக்கத்தை தொலைத்த நிலையில், பாம்புகளுக்கு அஞ்சிய பெண் ஒருவர் சந்திரமுகி பாணியில் செய்த பூச்சாண்டி அம்பலமாகி உள்ளது. கடலூர் முதுநகரில் உள்ள பென்ஷன் லைன் தெருவில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவின் மையப்பகுதியில் ஒரு பாழடைந்த பங்களா உள்ளது. இந்த பங்களாவின் உரிமையாளர் சென்னையில் வசித்து வரும் நிலையில் மிகப்பெரிய தோட்டத்துடன் கூடிய பங்களாவில் ஒரு கார் … Read more

விலையில்லா வேட்டி, சேலைகளை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க முயற்சி: அண்ணாமலை குற்றச்சாட்டு

பொங்கலுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலையை உற்பத்தி செய்தற்கான நூலுக்கான டெண்டரை தமிழக அரசு தாமதப்படுத்தி வருகிறது. இதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து வேட்டி, சேலைகளை வாங்க முயற்சி நடக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். 75-வது சுதந்திரதினத்தை யொட்டி, ஈரோட்டில் பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். தொடர்ந்து, கைத்தறி தின விழாவையொட்டி, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் … Read more

நண்பர்கள் தினம்: அனைவரின் பாராட்டையும் பெற்ற போக்குவரத்து காவல் துறையினரின் செயல்

நண்பர்கள் தினத்தையொட்டி வாகன ஓட்டிகளுக்கு தேசியக் கொடிகளை வழங்கி நட்புறவு பாராட்டிய மதுரை போக்குவரத்து காவல் துறையினரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நண்பர்கள் தினத்தை போற்றும் விதமாக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் மதுரை கீழவாசல் மற்றும் பெரியார் நோக்கி சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளை நிறுத்தினர். … Read more

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம்.!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் … Read more

IND VS WI: தொடரை வென்ற இந்தியா.. சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 -1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது. கடந்த 29ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆகஸ்ட் … Read more

மறைமலைநகர் | பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதி விபத்து: 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

மறைமலைநகர்: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே கருநீலம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி தேன்மொழி (26). இவர்களுக்கு சித்தார்த் (4), லோகேஷ் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தேன்மொழி இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் லேசாக உரசி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது போதியது. இதில் … Read more