4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி – அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, முதல்வர் தலைமையில் நடந்த அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், திமுகநிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும்மேல் பணியாற்றியவரும், 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவருமான கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் … Read more