முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள்!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் சொந்த தொகுதியில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவின் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டுமென சுவரொட்டிகள் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர … Read more

Tamil News Live Update: இந்தியாவில் 17 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. இ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், இயல்பறிவுக்கும் எதிரானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இரு நீதிபதிகளின் உத்தரவு, அதிமுக கட்சி விதிகளில் இல்லாத ‘வீட்டோ’ அதிகாரத்தை பன்னீர் செல்வத்திற்கு அளித்துள்ளது. … Read more

10-ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.  இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூலை 2) திருப்பூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இன்று திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் … Read more

மத்திய அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது.!

சென்னை திருவொற்றியூரில் மத்திய அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இருவரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். மணலியைச் சேர்ந்த துரைராஜ்  13லட்சம் ரூபாயும், ஆதிகேசவன் என்பவர் 17 லட்சம் ரூபாயும் தங்களது மகனுக்கு மத்திய அரசு வேலை வேண்டி ஹரிகிருஷ்ணன் என்பவரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் ஹரிகிருஷ்ணன் சொன்னபடி வேலை வாங்கித் தராமலும் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் … Read more

தொழில் புரிய ஏதுவான மாநிலங்களில் தமிழகத்துக்கு 3-வது இடம் – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழகம் 3-வது இடத்தை பெற்றதற்காக தொழில்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுள் தமிழகம் இடம்பெற்றுள்ளது. புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தாவியுள்ளோம். தொடர்ச்சியான, திட்டமிட்ட நடவடிக்கைகளால் முதலீடுகளுக்கான முக்கிய மையமாக தமிழகத்தை உயர்த்தியுள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், துறை … Read more

காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு

திருச்சியில் பாஜக மாநகரச் செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 11 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் அருகே பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யாவின் கார் மீது, ஒரு தனியார் பேருந்து மோதிய விபத்தில், சூர்யாவின் கார் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றை ஜுன் 19 ஆம் தேதி சூர்யா கடத்தி சென்றுவிட்டதாக, அவர் மீது … Read more

அமராவதியில் கடை உரிமையாளர் கொலை.. நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவான சமூக ஊடகப் பதிவுதான் காரணமா?

உதய்பூரில் தையல்காரர் வெட்டிக் கொல்லப்படுவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு, ஜூன் 21 அன்று மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 54 வயதான கடை உரிமையாளர் உமேஷ் பிரஹலாத்ராவ் கோல்ஹே கொல்லப்பட்டார். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிய பாஜகவின் நுபுர் ஷர்மாவை ஆதரிக்கும் சமூக ஊடகப் பதிவிற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக கோல்ஹே கொல்லப்பட்டதாக இப்போது புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள். இதுகுறித்து உமேஷ் கோஹ்லேவின்’ மகன் சங்கேத் கோஹ்லேவின் புகாரின் பேரில் அமராவதியில் உள்ள … Read more

இது விடியா திமுக அரசின் அடக்குமுறை.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!!

வேலூர் எம்பி கதிர் ஆனந்த், காட்பாடி மேம்பாலத்தை திறந்து வைப்பதற்கு முன்பாகவே, அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு திறந்து வைத்ததாக புகார் அளிக்கப்பட்டது. வருவாய்த்துறை அளித்த இந்த புகாரின் பெயரில், மாவட்டச் செயலாளர் அப்பு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது கண்டித்து உறவினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு மீது காட்பாடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக மாவட்ட … Read more

மதுரையில் லோடு வேனை திருடி சென்னை கொடுங்கையூரில் தொழில் நடத்தி வந்த திருடன் கைது.!.

மதுரையில் லோடு வேனை திருடி சென்னை கொடுங்கையூரில் தொழில் நடத்தி வந்த திருடன் கைது செய்யப்பட்டான். மேல அனுப்பானடியை சேர்ந்த சரவணன் என்பவரது டாடா ஏஸ் வேன் கடந்த மாதம் 13ந் நேதி திருட்டு போனது. அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுட்டனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது உறவினர் ஒருவர் திருட்டு போன வேன் கொடுங்கையூரில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சென்னை வந்த சரவணன் … Read more

தடுப்பூசி செலுத்தி ஓராண்டுக்குப் பின் எதிர்ப்புசக்தி குறைகிறது – பூஸ்டர் தவணை அவசியம் என அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: கரோனா தடுப்பூசி செலுத்தி ஓராண்டைக் கடந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால் பூஸ்டர் தவணையை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை தினசரி தொற்று பாதிப்புள்ளது. தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து … Read more