கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட சிங்கப்பூர் பீர்; உணவு பஞ்சம் குறித்து ஐ.நா எச்சரிக்கை… உலகச் செய்திகள்

Global food shortage crisis, Singapore sewage water used beer today world news: இன்று உலக நாடுகளில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். முதல் பெண் கறுப்பின நீதிபதி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பினப் பெண்மணியாக, உச்ச நீதிமன்றத்தில் கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் பதவியேற்றார். 51 வயதான ஜாக்சன் நீதிமன்றத்தின் 116 வது நீதிபதி ஆவார். நீதிபதி ஸ்டீபன் பிரேயரின் ஓய்வு நண்பகல் முதல் அமலுக்கு வந்த நிலையில், அவரது இடத்தில் … Read more

#திருப்பூர் || ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!

ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபராகவும், பைனான்ஸியராகவும் இருந்து வந்தார். இவரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது பெற்றோர் கோவிலுக்கு சென்றதால் பாலசுப்பிரமணி தனியாக இருந்துள்ளார். நள்ளிரவு வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் அவரை பாலசுப்பிரமணியை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். … Read more

டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால்தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? : அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால் தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? எனத் தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் வினவியுள்ளது. காடுகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற 5 கோடியே 36 இலட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், ரசாயன முறைப்படி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்நிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் அழிவதை ஒப்புக் கொள்ளும் அரசு, அறிக்கை தாக்கல் செய்வதைத் தவிர வேறு என்ன செய்துள்ளது? என நீதிபதிகள் வினவினர். அந்நிய மரங்களால் … Read more

திருப்பூர் மசூதி விவகாரம் | “ஐகோர்ட் உத்தரவை மீறிய திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுங்கள்” – தமிழக பாஜக

சென்னை: திருப்பூர் மசூதி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட திருப்பூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருப்பூரில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்த மசூதியை மூட வேண்டும்; அங்கு தொழுகை நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில், வருவாய்த் துறை … Read more

’தேர்தலை முதலில் இருந்து நடத்துங்க’ – புதிய வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த எஸ்.சூரிய மூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ”அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு, முறையாக தேர்தல் நடைமுறைகளை கையாளாமல் … Read more

தமிழகத்தில் பா.ஜ.க.,வால் எதுவும் செய்ய முடியவில்லை – யஷ்வந்த் சின்ஹா

Yashwant Sinha meets DMK ally says BJP won’t do anything in Tamilnadu: நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நாம் உள்ளோம், மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையே அதற்கு சாட்சி என எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் முடியவுள்ள நிலையில், ஜூலை 18 ஆம் தேதி குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக … Read more

கானா இசையமைப்பாளர் மீது இளம்பெண் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார்..!

ஆபாச படத்தை வெளியிட்டுவிடுவதாக மிரட்டிய கானா பாடல் இசையமைப்பாளரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கானா பாடல் இசையமைப்பாளர் சபேஷ் சால்மன் என்பவர் தன்னை காதலித்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக தெரிகிறது. அது பற்றி கேட்டபோது நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதாக மிரட்டுவதாக தெரிவித்தார். இதற்கு அவரது தந்தை செல்வகுமாரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில், அவர் அந்த பெண்ணை மிரட்டும் ஆடியோக்களும் இணையத்தில் வைரலானது. … Read more

கூண்டில் சிக்கி ஆக்ரோஷமாக காணப்பட்ட சிறுத்தை.. ஒரு கூண்டில் இருந்து மற்றொரு கூண்டுக்கு மாற்றும் போது தப்பியோட்டம்..!

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கி ஆக்ரோஷமாக காணப்பட்ட சிறுத்தை, வேறு கூண்டுக்கு மாற்ற முயன்ற போது தப்பியோடியது. செயல்படாத கல்குவாரி ஒன்றில் பதுங்கியிருந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த அந்த சிறுத்தை அதிகாலை கூண்டில் சிக்கியது. அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை வேறு கூண்டுக்கு மாற்ற முயன்ற போது அது தப்பியோடியது. அந்த சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். Source link

'மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட மாநில அரசுக்கு பாதுகாப்பில்லை' – யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

சென்னை: ”மதச்சார்பின்மை மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அரசுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை” என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத் தாக்கலை சில நாட்கள் முன் செய்தவர், இப்போது ஓவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று அரசியல் தலைவர்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று சென்னை வந்த அவர், … Read more

ரூ.2.64 கோடி ஹவாலா பணம்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக இதுவரை பிடிபட்ட பணம்!

உரிய ஆவணங்களின்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த மாதத்தில் மட்டும் ரூ.2.64 கோடி ஹவாலா பணங்கள் பிடிபட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்ட வந்த பையின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரைப் பிடித்து அவரது பையை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டபோது அவரது பையில் கட்டு கட்டாக … Read more