சென்னை : விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.. முதலமைச்சர் ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்சன் (26), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (40). இவர்கள் இருவரும் அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தனர். இந்நிலையில், மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடையை அகற்றும் பணியில் இருவரும் நேற்று பிற்பகல் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சாக்கடையில் இருந்து விஷவாயு கசிந்து இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு கால்வாய் சாக்கடைக்குள் மயங்கி விழுந்தனர். தீயணைப்பு படை வீரர்கள், இருவரையும் மீட்டு … Read more

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் நோக்கில் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை: மாறு வேடத்தில் ஆயுதங்களுடன் நுழையும் போலீஸாரை பிடிக்க தீவிர நடவடிக்கை

சென்னை: கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. மாறு வேடத்தில் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற போலீஸார் பிடிபட்டனர். 2008-ல் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுபோல மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக உள்ளன. நாட்டின் கடல் எல்லைகளில் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் ஒரு … Read more

சென்னை: வீட்டிற்கு நடந்து சென்றவரை கொடூரமாக வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடந்து சென்றவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிக்கொன்றனர். பழிக்குப்பழியாக கொலை நடந்ததா? ஏன காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு 5-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆதி சுரேஷ் (45). இவர், மவுண்ட் ரோடு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜோதி என்ற மனைவியும் புருஷோத்தமன் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் மீது பத்து வருடங்களுக்கு முன்பு சில வழக்குகள் … Read more

இட்லி மாவு இருந்தாப் போதும்… இன்ஸ்டன்ட் போண்டா இப்படி செய்யுங்க!

இட்லி மாவு இருந்தால் போதும் மிக எளிதில் இன்ஸ்டண்ட் போண்டா  செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள போகிறோம். தேவையான பொருட்கள் இட்லி மாவு பஞ்சை மிளகாய் சீரகம் பெருங்காயம் சோடா மாவு மிளகாய்த் தூள் ரவை அரிசி மாவு நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு கருவேப்பில்லை நறுக்கிய கொத்தமல்லி ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு எடுத்துகொள்ளவும். இதில் சீரகம், பெருங்காயம், சோடா மாவு மிளகாய்த்தூள் போட்டு கலக்கவும். தொடர்ந்து ரவை, அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (29.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 29/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 25 நாட்டு தக்காளி 20/15 உருளை 33/30/20 சின்ன வெங்காயம் 30/26/20 ஊட்டி கேரட் 52/45/40 பீன்ஸ் 80/75/70 பீட்ரூட். ஊட்டி /45.40 கர்நாடக பீட்ரூட் 30/28 சவ் சவ் 20/18 முள்ளங்கி 18/15 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 20/16 உஜாலா கத்திரிக்காய் 15/10 வரி கத்திரி 15/12 காராமணி … Read more

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பிரிவு மாணவர் சேர்க்கை தொடக்கம்: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், நடப்பு கல்வியாண்டுக்கான இளம் அறிவியல் பிரிவு மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இங்கு இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை (தமிழ் வழி),தோட்டக்கலை (தமிழ் வழி), வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், பட்டு வளர்ப்பு,வேளாண் … Read more

இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி பிரச்னை உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே மாறிமாறி போஸ்டர் ஒட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான மிசா செந்தில் என்பவர், அதிமுக கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தவறுகளை செய்த எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி , ஜெயக்குமார், சி.வி.சண்முகம் … Read more

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த போது ஏற்பட்ட விபரீதம்.. விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்சன் (26), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (40). இவர்கள் இருவரும் அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தனர். இந்நிலையில், மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடையை அகற்றும் பணியில் இருவரும் நேற்று பிற்பகல் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சாக்கடையில் இருந்து விஷவாயு கசிந்து இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு கால்வாய் சாக்கடைக்குள் மயங்கி விழுந்தனர். தீயணைப்பு படை வீரர்கள், இருவரையும் மீட்டு … Read more

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்..’ ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் ஒட்ட வைக்க முயற்சிக்கும் வெல்லமண்டி நடராஜன்?

அதிமுகவில் ஒற்றை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுவரை பனிப்போராக இருந்த ஒபிஎஸ் இபிஎஸ் மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சியின் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் இபிஎஸ் முன்னிலையில் உள்ளார். இதனால் முன்னாள் முதல்வரான ஒபிஎஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சிலர் ஒபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பகிரங்கமாக … Read more

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்பு..!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நுரையீரல் மற்றும் இருதயப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அந்த உறுப்புகள் செயலிழந்து விட்டதால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் உறுப்புகள் கிடைக்காமல் போகவே, அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களால் இயலவில்லை என்று கூறப்படுகிறது. உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போனதால் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார். Source link