எகிறும் விமான டிக்கெட் விலை: சென்னை- துபாய் கட்டணம் இவ்வளவா?

Chennai  – Doha Air ticket price become costlier Tamil News: இந்தியாவில் உள்நாட்டு விமான கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், நாட்டில் இருந்து வளைகுடா நாடுகளான துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டின் விலை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து துபாய், தோகா உள்ளிட்ட நாடுகளுக்கு குறைவான நேரடி விமானங்கள் மற்றும் போக்குவரத்துப் பயணிகளின் அதிக தேவை காரணமாக டிக்கெட் விலை உயர்த்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள … Read more

இன்று பொதுக்குழு கூட்டத்தில்… ''அண்ணன் ஓ பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்'' – எடப்பாடி கே பழனிச்சாமியின் அந்த உரை.! 

இன்று காலை தொடங்கிய அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், தற்காலிக அவைத்தலைவர் செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு தலைமை ஏற்க அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அவரின் அந்த உரையில், ‘காலம் எல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், பண்பும், பாசமும் கொண்ட நல்லாட்சி நடத்திய புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியை வணங்கி, தற்காலிக கழக அவைத் தலைவரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களை கழக செயற்குழு, … Read more

பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் பலி.. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

கடலூர் மாவட்டம் எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். வனிதா என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மருந்து உராய்வினால் திடீரென வெடி விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. அதில், சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், இந்த பட்டாசு ஆலையின் உரிமம் கடந்த ஆண்டு முடிவடைந்தது, மீண்டும் உரிமத்திற்காக விண்ணப்பித்து இருப்பதும் தெரியவந்தது. … Read more

சென்னை பெரும்பாக்கத்தில் குப்பை மேடாக மாறிவரும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம்

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இடம் இப்போது குப்பை மேடாக மாறி வருகிறது. சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவததை தவிர்க்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தி குப்பை தரம் பிரித்து அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த மே 27-ம் தேதி முதல் ஜூன் 10-ம் … Read more

சூர்யா சிவாவை விடுவிக்க கோரி திருச்சியில் பாஜக பிரமுகர்கள் சாலை மறியல்

பாஜகவின் OBC பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா திருச்சியில் இன்று மாலை கைது செய்யப்பட்டார். அவர் மீது கூட்டுக் கொள்ளை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி பாஜகவினர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திலும், பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினருக்கும், போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் … Read more

அறுவை சிகிச்சை செய்த அழகி மரணம்; அச்சுறுத்தும் குரங்கு அம்மை… உலகச் செய்திகள்

Brazil model dead, monkey box, Sri lanka crisis today world news: உலக நாடுகளில் நடைபெற்ற முக்கியமான, சுவையான செய்திகளின் தொகுப்பை இப்போது பார்ப்போம். குளத்தில் மூழ்கிய நீச்சல் வீராங்கனையை மீட்ட பயிற்சியாளர் அமெரிக்காவின் நீச்சல் வீராங்கனையான அனிதா அல்வாரெஸ், புடாபெஸ்டில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற FINA உலக நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கிள்ஸ் இறுதிப் போட்டியில் மயங்கி விழுந்ததையடுத்து, உடனடியாக அவரது பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபியூன்டெஸால் குளத்தின் அடிப்பகுதியில் இருந்து அவரை … Read more

#BREAKING || கடலூர் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு.. தமிழக முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.!

கடலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் இன்று வழக்கம்போல ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உருகுலைந்த நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும்,  இருவர் ஆபத்தான நிலையில் … Read more

பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த டாட்டா மேஜிக் வாகனம்.. உடனடியாக பயணிகள் கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்..!

திருவள்ளூர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. திருவள்ளூர் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற டாட்டா மேஜிக் வாகனம், நெமிலிச்சேரி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து கரும்புகை வந்ததாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பயணிகளுடன் உடனடியாக கீழே இறங்கிய நிலையில், சிறிது நேரத்தில் வாகனம் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. Source link

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி பள்ளியில் ‘காலை உணவு வங்கி’ தொடக்கம்

திருச்சி: தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு வங்கி என்ற முன்னோடித் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. திருச்சி மாநகரில் மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மக்கள் பங்களிப்புடன் 2007-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி தென்னூரில் உள்ள சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 2018-ம் ஆண்டு முதல் காலை உணவாக இட்லி, இடியாப்பம், வெண் பொங்கல், … Read more

சென்னை: போதைப்பொருள் சோதனையில் ரூ.2 கோடி ஹவலா பணம் பறிமுதல்

சென்னையில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க மேற்கொண்ட வாகன சோதனையில் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி ரூபாய் பணத்துடன் காரில் வந்த இருவர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் துறைமுகம் உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வடக்கு கடற்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணடி … Read more