கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வு வேளாண், தொழில் வளர்ச்சியை பாதிக்கும் – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.!

வெட் கிரைண்டர்கள், விவசாய பம்ப்செட்டுகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 18% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜூலை 18-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜி.எஸ்.டி வரி உயர்வால் தொழில் வளர்ச்சி, குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சண்டிகரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை உயர்த்த … Read more

மதுபோதையில் காவல்துறையினரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்ட இளைஞர்.!

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் ஒரு இளைஞர் காவல்துறையினரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. பெரியார் சிலை ரவுண்டானா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த இரு இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது ஒரு இளைஞர், போலீசாரை ஒருமையில் பேசியதோடு, அங்கிருந்த தடுப்புகளை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார். இதனையடுத்து அந்த இளைஞரை அடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார்,  விசாரித்ததில், ரகளையில் ஈடுபட்டது கூத்தாநல்லூர் … Read more

வேளாண், தொழில் வளர்ச்சி பாதிப்பு; கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வை குறைக்கவும்: ராமதாஸ்

சென்னை: வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வெட் கிரைண்டர்கள், விவசாய பம்ப்செட்டுகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 18% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜூலை 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழில் வளர்ச்சி, … Read more

'ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் டிஸ்மிஸ்' – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வருபவர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள், பள்ளிக்கு அருகே வசிப்பவர்கள், மாவட்டத்துக்குள் வசிப்பவர்கள் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும். காலிப் பணியிடங்களின் விவரங்கள் அனைத்தையும் இன்று அந்தந்த பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் … Read more

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர்களே – பா.ஜ.க

BJP Annamalai addresses OPS and EPS as ADMK Co-Ordinator’s: ஒற்றைத் தலைமை விவகாரத்தால், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக அ.தி.மு.க.,வின் ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-ஐ ஒருங்கிணைப்பாளர்கள் என்றே குறிப்பிட்டுள்ளது. குடியரசு தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக, பா.ஜ.க அறிவித்துள்ள வேட்பாளர் திரவுபதி முர்மு, சென்னையில் இன்று கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருகிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள … Read more

'நல்லாட்சியின் நாயகன்' வெட்கக்கேடானது! எப்போது, எங்கே நிறைவேற்றினீர்கள் முதல்வரே? – சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்

காற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில் அவற்றை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்வதா? உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே? என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சனநாயகத்தால் நிறுவப்படும் ஓர் அரசை நாட்டின் குடிகள்தான், மதிப்பிட வேண்டும். ஆட்சி முறைமைகளில் நன்மைகள் நிகழ்ந்தால் அவர்களாகத்தான் போற்றிக் கொண்டாட வேண்டும். ஆனால் இங்கோ, ‘நூறாண்டு போற்றும் ஓராண்டு சாதனை’ என ஆட்சியாளர்களே அரசுப் பணத்தில் விளம்பரம் செய்துச் … Read more

நிலத் தகராறில் பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைப்பு.. பா.ஜ.க.வினர் சாலை மறியல்..!

மயிலாடுதுறை மாவட்டம் எருக்கட்டாஞ்சேரியில் பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்தவரை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். மாவட்ட செயலாளர் பாலாஜி என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கும் இடத்தகராறு இருப்பதாகவும், அதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாலாஜியின் கீற்றுக் கொட்டகை அலுவலகத்திற்கு உதயகுமார் தீ வைத்ததாக, பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலாஜி அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் உதயகுமாரை தேடி வருகின்றனர். Source link

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா – பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா பரவல் கண்டறியப்பட்டது. அதன்பின் அந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்று குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. 2021-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கரோனா … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள்!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் சொந்த தொகுதியில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவின் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டுமென சுவரொட்டிகள் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர … Read more

Tamil News Live Update: இந்தியாவில் 17 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. இ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், இயல்பறிவுக்கும் எதிரானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இரு நீதிபதிகளின் உத்தரவு, அதிமுக கட்சி விதிகளில் இல்லாத ‘வீட்டோ’ அதிகாரத்தை பன்னீர் செல்வத்திற்கு அளித்துள்ளது. … Read more