கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி – பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கல்வித் துறை உத்தரவு இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. … Read more

சென்னைவாசிகள் கவனத்திற்கு.. அடுத்த 2 நாட்கள் மழை நீடிக்கும்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று (ஜூலை 23) பல பகுதிகளில் மழை பெய்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்கு, நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

"மரம் வளர்த்தால், இலவச மின்சாரம்" ஜார்க்கண்ட் மாநிலம் போல் தமிழகத்திலும் பின்பற்ற வேண்டிய திட்டம் –  மருத்துவர் இராமதாஸ்.!

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ஜார்க்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்திருக்கிறார்.  சுற்றுச்சூழலை காக்க பசுமைப்போர்வையை விரிவாக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது! புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க மரங்களை வளர்க்க வேண்டியது  மிகவும் அவசியமானது. அதனால் தான் பிறந்தநாள், திருமண நாளில் மரக்கன்று நடும் பாட்டாளிகளுக்கு நானே தொலைபேசியில் … Read more

நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமையடைகிறது: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமையடைகிறது என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க ஏக்கம் தீர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதி … Read more

அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழப்பு

மேட்டூர் அருகே அனுமதி இன்றி விளைநிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஆலமரத்துப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட கூழ் கரடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன் என்ற புஷ்பநாதன், இவருக்கு சொந்தமான விளை நிலத்தில் பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இந்த நிலையில் இவர், தோட்டத்திற்கு அருகே காப்புக்காடு இருப்பதால் அவ்வப்போது வனவிலங்குகள் விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதை தடுக்க நிலத்தின் அனுமதி இன்றி … Read more

தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று மெகா முகாம் – இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆளுநர் வேண்டுகோள்

சென்னை: அனைவரும் இலவச பூஸ்டர் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று 32-வது சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தொற்றால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்வதே பாதுகாப்பானது. நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. … Read more

டன் கணக்கில் இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா – கடலோர காவல்படை நடவடிக்கை எடுக்குமா?

20 நாட்களில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 1200 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். தமிழக கடலோர பகுதிகளான நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் இலங்கைக்கு மிக அருகாமையில் சுமார் 25 நாட்டில்கல் தொலைவில் மட்டுமே உள்ளதால் இங்கிருந்து அதிகப்படியான கஞ்சா கடத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களில் மட்டும் இலங்கை கடற்படை மூன்று கோடி ரூபாய் மதிப்புடைய 1200 கஞ்சா மற்றும் 1600 கிலோ … Read more

அதிமுக அலுவலகத்தில் ஆவணங்கள் கொள்ளை – சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சி அலுவலக அசல் பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்ததாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 9 நிர்வாகிகள் மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, … Read more

வீட்டிற்குள் நுழைந்த விஷப் பாம்பு: ஒருமணி நேரம் போராடிப் பிடித்த தீயணைப்புத் துறையினர்

பொன்னமராவதி அருகே வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பை ஒருமணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பாண்டி அம்மன் கோயில் வீதியில் வசிப்பவர் ராஜேஸ்வரி. இவரது வீட்டிற்குள் விஷப் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை பார்த்த ராஜேஸ்வரி, அதிர்ச்சி அடைந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்னமராவதி தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி பாம்பு பிடிக்கும் கருவியைக் கொண்டு லாவகமாக … Read more

சென்னை வடபழனி, திருப்போரூர், சிறுவாபுரி உட்பட முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா

சென்னை வடபழனி முருகன் கோயில், கந்தக்கோட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் நேற்று ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். முருகன் கோயில்களில் சித்திரை, மாசி, கார்த்திகை, ஆடிக் கிருத்திகை நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படும். இதன்படி ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த வைபவத்தின்போது பக்தர்கள் காவடி எடுத்தும், … Read more