நாயின் மீது மோதிய மினி லாரியை துரத்தி சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அரியலூரில் பழைய துணி என்று கூறி லாரியில் கடத்தப்பட்ட 50 லட்சம் மதிப்புடைய 5 டன் குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் சிலால் என்ற கிராமத்தில் தா.பழூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் மார்க்கம் நோக்கி சென்ற லாரி ஒன்று நாயின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனையடுத்து தா.பழூர் காவல்துறை ஆய்வாளர் ஜெகதீசன் லாரியை விரட்டி பிடித்து ஓட்டுனரிடம் லைசன்ஸ் கேட்டுள்ளார். ஓட்டுநர் பயந்து … Read more

ஹால் டிக்கெட், மாஸ்க், ஆதார்… TNPSC குரூப் 4 தேர்வர்கள் ‘செக் லிஸ்ட்’ மறக்காதீங்க!

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் கடைசி நேரத்தில் தேர்வர்கள் நினைவில் கொள் வேண்டிய விதிமுறைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் தேர்வுகள் நடத்தி பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது தமிழகம் முழுவதுமு் 7689 மையங்களில் நடத்தப்படும் இந்த தேர்வுக்காக சுமார் 22 லட்சம் … Read more

செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கான அழைப்பிதழ் இன்னமும் எனக்கு வரவில்லை: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: “செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழ் பலருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு இன்னும் அழைப்பிதழ் வரவில்லை” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்திருக்கிறார். சென்னை அருகிலுள்ள மாமல்லபரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதிவரை 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கிறது. இந்த செஸ் பிரச்சார ஜோதி இன்று புதுச்சேரி வந்தடைந்தது. புதுச்சேரி நுழைவு வாயிலில் மாநில ஒருங்கிணைப்புக் குழு மற்றும் நேரு யுவகேந்திரா சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடற்கரை சாலை … Read more

"மொழி அரசியல் செய்யும் பலரின் பெயர் கூட தமிழில் இல்லை" – ஆளுநர் தமிழிசை விமர்சனம்

மொழி அரசியல் செய்யும் பலரின் பெயர் கூட தமிழில் இல்லை என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார். மொழி அவசியம் என்பதை தாண்டி அரசியல் மட்டுமே செய்கிறார்கள் எனவும், விமர்சிப்பவர்களுக்கு தமிழில் பெயர் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எல்லா விதத்திலும் நாங்கள் தமிழ் பற்று உள்ளவர்கள் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ஏ.ஆர் ரகுமான் கவனத்தை ஈர்த்த விஜய் டி.வி நடிகை: காரணம் என்னவாக இருக்கும்?!

விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வந்த நடிகை திவ்யா கிருஷ்ணனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யா கிருஷ்ணன். இந்த … Read more

ஸ்கூட்டி மீது மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து.. பெண் ஒருவர் பலி.!

ஸ்கூட்டி மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுஉள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் வெள்ளச்சிவிளை பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை. இவரது மனைவி ஷைலஜா (வயது 42) நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டியில் வில்லுக்குறி சென்றுவிட்டு வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளார். இந்த நிலையில் ஷைலஜா வெள்ளச்சிவிளையை சென்றடைந்தபோது எதிரே மோட்டார் பைக் ஒன்று வந்தது. அந்த மோட்டார் பைக்கில் தக்கலை பகுதியில் வசித்துவரும் செல்சோ என்பவர் ஓட்டிவந்துள்ளார்.  இந்நிலையில் … Read more

“மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு செய்ய ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?” – தமிழக பாஜக

சேலம்: “மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியதை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?” என பாஜக மாநிலத் துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளும் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்தும், ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை, உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் பாஜகவினர் தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் … Read more

தஞ்சையில் கனமழை.. ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

தஞ்சையில் 2 நாட்கள் பெய்த கனமழையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகி உள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் 17 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த திடீர் மழையினால் பல இடங்களில் இளம் பயிர்கள் தண்ணீரால் சூழ்ந்துள்ள நிலையில் நெல் மூட்டைகளும் சேதமடைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் முன்னைப் பட்டியில் அமைந்துள்ள நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் திறந்தவெளி சேமிப்புக்கிடங்கில் சேமித்து … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ஜூலை 28-ல் 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு வரும் 28-ம் தேதி 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் இன்று (23-ம் தேதி … Read more

தாமிரபரணியில் கலந்த 17 பேரின் மூச்சுகாற்று.. வடுவாய் மாஞ்சோலை படுகொலையின் ரத்த சரித்திரம்!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் இருந்து 22 கி.மீ. தொலைவில் இருக்கிறது மாஞ்சோலை எஸ்டேட். அதற்கடுத்து காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என மொத்தம் உள்ள ஐந்து எஸ்டேட்களில், ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பின்னுள்ள அந்த ரத்த சரித்திரத்தை யாரும் மறக்க முடியாது. அந்த நாள் ஜூலை 23, 1999. எல்லோரையும் போல மாஞ்சோலை தொழிலாளர்களுக்கும் அது சாதாரண விடியலாகவே இருந்தது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் … Read more