மதுரையில் கடந்த 3 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.72,000 அபராதம் வசூல்.!

மதுரையில் கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களிடம் கடந்த 3 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.72,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதையடுத்து மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளிலும் பொது இடங்களில் தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் … Read more

இது தாண்டா போலீஸ்.. உயிர் காக்கும் மருத்துவருக்கு நள்ளிரவில் உதவிய காவலர்..! எல்லாம் ஒரு வயது குழந்தைக்காக..!

திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த இடத்தில் பிரபல மருத்துவரின் ஒரு வயது பேரனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை சரி செய்வதற்காக பூட்டப்பட்ட மருந்தகத்தை நள்ளிரவில் திறக்க வைத்து மருந்துவாங்கிக் கொடுத்து உதவிய காவலரின், தன்னலமற்ற சேவையை பாராட்டி கொழும்புவை சேர்ந்த தமிழ் மருத்துவர் தூத்துக்குடி போலீசுக்கு பாராட்டுக்கடிதம் எழுதி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். அந்தவகையில் இலங்கையின் தலை நகரான … Read more

திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு கார்கோ சேவை நிறுத்தம்

திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு இன்று (ஜூலை 1) முதல் கார்கோ சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நியச் செலாவணி பாதிக்கப்படும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை, திருச்சி,மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவை அளித்து வருகிறது. அதன்படி, தினசரி சென்னைக்கு 3 சேவையும், திருச்சிக்கு 3 சேவையும், மதுரைக்கு ஒரு சேவையும் அளித்துவந்தது. ஆனால், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் … Read more

’10 ஆண்டு உழைப்பு’-சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த விவசாயியின் மகன்!

சிவில் சர்வீஸ் தேர்வில் ஈரோடு அருகேயுள்ள சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருபானந்த் என்ற மாணவர் இந்திய வனப்பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள சென்னம்பட்டி ஜர்த்தல் பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ் – ஹேமலதா தம்பதியினரின் இரண்டாவது மகன் கிருபானந்த். இவர், கடந்த 27 ஆம் தேதி வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 16-வது இடமும் தமிழக அளவில் முதலிடம் பெற்று இந்திய வனப் பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். … Read more

நயன்தாரா பெயரை டேமேஜ் செய்யும் பவுன்சர்கள்… இப்படி செய்யலாமா?

ஹனிமூனை முடித்த நயன்தாரா படப்பிடிப்புக்கு சென்றபோது அவரது பாதுகாவலர்களாகன பவுன்சர்கள் நடந்துகொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னி்ந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ந் தேதி திரமணம் செய்துகொண்டார். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றளர். அதனைத் தொடர்ந்து மறுவீடு அழைப்பு தாய்லாந்து ஹனிமூன் என பிஸியாக இருந்த விக்கி – நயன் … Read more

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா.. போக்சோவில் கைது.!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாரையூரணி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் (வயது 37). இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த இவரது அண்ணன் மகளான 15 வயது பள்ளி சிறுமி நாரையூரணிக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சித்தப்பா பாலமுருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் செல்போனில் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் … Read more

கோத்தகிரியில் கோர விபத்து : லாரி ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் பலி..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த முகமது ரபீக் மற்றும் காவலர் அபுதாஹிர் ஆகியோர் இன்று மதியம் கோத்தகிரி பள்ளிவாசலில் தொழுகை செய்துவிட்டு காவல்நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். கேர்ப்பெட்டா, புதூர் இடையே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகளையொட்டி கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் இடறிவிட்டதில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த லாரி முகமது ரபீக் மீது ஏறிச்சென்றதில் … Read more

பெரியகுளம்: 182 ஏக்கர் அரசு நில முறைகேடு வழக்கில் துணை வட்டாட்சியர் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் தனியார் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட வழக்கில் துணை வட்டாட்சியரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகளின் துணையுடன் தனி நபர்களின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக பெரியகுளம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலர் அன்னபிரகாஷ், பெரியகுளம் கோட்டாட்சியர் ஆனந்தி, ஜெயப்பிரதா, … Read more

ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்

ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்? என்று இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி வெங்கட்ராமன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், “தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும் குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உதவிய தமிழக அரசுக்கு இஸ்ரோ சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவிலேயே புவியியல் அடிப்படையில் பூமத்திய ரேகைக்கு அருகில் ஸ்ரீஹரிகோட்டா இருப்பதால்தான் தலைசிறந்த ஏவுதளமாக விளங்குகிறது. … Read more

கண்ணைக் கவரும் பூந்தோட்டத்தில் தேனீயைக் கண்டுபிடிங்க… உங்க கூர்மையான பார்வைக்கு சவால்!

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கண்ணைக் கவரும் பூந்தோட்டத்தில் மறைந்திருக்கும் தேனீயைக் கண்டுபிடிக்க முடியுமா? என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். இணையத்தில் நாள்தோறும் பல ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்களாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில்லாத குழப்பத்தை அளித்து இறுதியில் விடை … Read more