கல்வீச்சு; கார்கள் உடைப்பு: கலவர மயமான அ.தி.மு.க தலைமை அலுவலகம்

வானகரத்தில் பொதுக்குழு கூடிவரும் நிலையில், மறுபுறம் ஓ.பி.எஸ் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தடைகளை உடைத்து உள்ளே நுழைந்தார். அப்போது, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால், அதிமுக தலைமை அலுவலகம் போர்க்களமானது. அங்கே நடைபெற்ற கல்வீச்சு, கார்கள் உடைப்பு சம்பவங்களால் அதிமுக தலைமை அலுவலகம் கலவரமயமானது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், இன்று (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more

இலங்கைக்கு இந்தியா இராணுவத்தை அனுப்ப உள்ளதா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இலங்கையில் நிலவிவரும் பெரும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்து தற்போது வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ள கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம், “இலங்கையில் தற்போது நடந்து பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் புரட்சி போன்றவற்றை கையாள வசதியாக, இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மை இல்லை”. என்று தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை … Read more

“சசிகலாவுக்கு எதிரான வருமானவரித்துறை நடவடிக்கை செல்லும்”-உயர்நீதிமன்றம்

“சசிகலாவுக்கு எதிரான வருமானவரித்துறை நடவடிக்கை செல்லும்” “சசிகலா பினாமி நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை செல்லும்” பண மதிப்பிழப்பு கரன்சிகளை பயன்படுத்தி சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டவர்கள் மீது ஐ.டி எடுத்த நடவடிக்கை செல்லும் – உயர்நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சசிகலா பினாமிகளான கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள் வருமானவரித்துறை நடவடிக்கையை எதிர்த்து வழக்கு ஓஎம்ஆர்-ல் உள்ள … Read more

கரோனா தொற்று இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கரோனா வைரஸ் தொற்று இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போதைய நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் 28 மெகா முகாம்களும், மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் … Read more

இனி ஒரே தலைவர் எடப்பாடிதான்: அ.தி.மு.க பொதுக்குழுவில் தலைவர்கள் பேச்சு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஏற்கெனவே திட்டமிட்டபடி, சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு RFID தொழில்நுட்பத்துடன் அதிநவீன அடையாள அட்டை வழங்கப்பட்டது. போலி உறுப்பினர்களை தடுக்க நுழைவு வாயிலில்16 ஸ்கேனர்களுடன் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே திடீரென மோதல் நிகழ்ந்தது. இரு தரப்பினரும், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  இதனால், … Read more

உலக நாடுகளின் கவனம் ஈர்த்த இந்தியாவின் தேசிய சின்னம் : திறந்து வைத்தார் பிரதமர் மோடி.!

புதிய பாராளுமன்ற கட்டிடம் மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ், டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் அமைக்கப்படுகிறது.  மேலும், இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் எதிர்காலத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமர்வதற்கு ஏற்ற வகையில்  அமைக்கப்படுகிறது. இந்த புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற  கூட்டத்தின் போது 1,224 உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் கட்டப்படுகிறது. இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் … Read more

பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்.!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்டவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். வாட்டர்டேங்க் பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான வெங்கட்ராமன் என்பவர் மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்தபடி தனது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை நேற்று தனது மொபைல் போன் மூலம் ஆய்வு செய்த போது அதிகாலை … Read more

அதிமுக கிளை செயலாளர் டு பொதுச்செயலாளர்: பழனிசாமியின் அரசியல் பயணம் – ஒரு டைம்லைன் பார்வை

1954-ம் ஆண்டு பிறந்த பழனிசாமி, அரசியல் ஆர்வம் மற்றும் எம்ஜிஆர் மீது கொண்ட பற்றால் 1974-ல் அதிமுகவில் தனது 20-வது வயதில் இணைந்தார். அதிமுகவில் ஒரு அடிப்படை தொண்டன்கூட தலைமைப் பொறுப்புக்கு வரமுடியும் என்பதை முதல்வராகி நிரூபித்த பழனிசாமி, தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் பதவியையும் வசமாக்கியுள்ளார். 1974 -ல் அதிமுகவில் இணைந்து, சிலுவம்பாளையம் கிளைச் செயலாளரானார். அதன்பின் ஒன்றியம், மாவட்டப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டார். 1989 – எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜானகி, ஜெயலலிதா அணி என இரு அணிகள் … Read more

இடைக்கால பொதுச் செயலாளர் இ.பி.எஸ்: ராமதாஸ், அன்புமணி வாழ்த்து

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   அதிமுக தலைமை அலுவலகத்தில்  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும்  கடும் மோதல் நிலவியது. இந்நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.   அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றுவருகிறது. 16 தீர்மானங்களில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நிரந்தர பொதுச் செயலாளராக … Read more

மேகதாது ஆணை விவகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து தமிழக அரசு காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க … Read more