மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 55 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்பு

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை 55 கி.மீ தூரத்திற்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தப் பேரணி, சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’இயக்கத்திற்கு ஆதரவாக, பாப் (BOB) அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இதில் சவேரா ஹோட்டலின் இணை நிர்வாக இயக்குநர் நினா ரெட்டி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து காலை … Read more

30 செகன்ட்தான் டைம்; இந்த மரத்தில் எத்தனை ஆந்தை இருக்கு சரியா கண்டுபிடிங்க

சமீபத்தில் வெளியான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் உள்ள மரத்தில் மொத்தம் எத்தனை ஆந்தைகள் இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்பதுதான் ஆந்த சவால். பலரும் முதல் ஆந்தையை எளிதில் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால், மற்ற ஆந்தைகளைக் கண்டுபிடிப்பதில் தோல்வி அடைந்துள்ளனர். வெறும் 20% பேர் மட்டுமே இந்த படத்தில் எத்தனை ஆந்தைகள் உள்ளது என்பதை சரியாகக் கண்டுபிடித்துள்ளனர். இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. … Read more

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து. இவருக்கு கையில் காயம் ஏற்றபட்டதால் மதுரை அரசு மருத்துவமனையின்  விபத்து மற்றும் அவசர சிகிச்சை வளாகத்தில் உள்ள எலும்பு சிகிச்சை பிரிவில் அனுமதிகப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது கடைக்கு சென்றுவிட்டார். அப்போது, கழிவறைக்கு சென்ற மணிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி காவல்துறையினருக்கு … Read more

பெண் குழந்தைகளின்பாதுகாப்பை வலியுறுத்தி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்

சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். சேலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 7 மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 13 கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டனர். இப்பயணத்தை சேலம் வடக்கு, போலீஸ் துணை ஆணையர் மாடசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.  Source link

தாய் – சேய் நல பெட்டக பொருள், இரும்புச் சத்து திரவம் கொள்முதலில் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு: அண்ணாமலை அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

சென்னை: தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும் , தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் . அப்போது பேசிய அவர், “திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. … Read more

TNTET தேர்வு; இப்படி படிங்க… ஈஸியா பாஸ் ஆகலாம்!

Tamilnadu TET exam syllabus and preparation tips in Tamil: ஆசிரியர் கனவோடு இருக்கும் பலரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் டெட் தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் எப்படி தயாராவது என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. … Read more

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. முதியவர் உயிரிழப்பு.!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள கத்தாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமாரவேலு (வயது 76). இவர் சொந்த வேலை காரணமாக ராணிப்பேட்டை நோக்கிய தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராணிப்பேட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளி அருகே வரும்போது பின்னால் வந்த லாரி, குமரவேல் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குமரவேலு சம்பவ இடத்திலேயே … Read more

தமிழ்நாட்டில் முதல் முறையாக பி.ஏ.5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், மாநிலத்தில் 8 பேருக்கு பி.ஏ.5 மற்றும் 4 பேருக்கு பி.ஏ.4 வகை உருமாறிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் முதல் முறையாக பி.ஏ.5 வகை கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டதாகவும் கூறினார். Source link

பண்ருட்டி | கெடிலம் ஆற்றில் மூழ்கி கர்ப்பிணி, 4 சிறுமிகள் உட்பட 7 பேர் பலி

பண்ருட்டி: கெடிலம் ஆற்றில் குளிக்கச்சென்று மூழ்கியவர்களை காப்பாற்றச் சென்றவர்கள் ஒருவர்பின் ஒருவராக மூழ்கியதை அடுத்து 7 பேர் பலியான சோகம் இன்று நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த ஏ.குச்சிப்பாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் இன்று குளிக்கச் சென்ற கர்ப்பிணி மற்றும் நர்ஸிங் மாணவிகள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. ஏ.குச்சிப்பாளையம் அருகே கீழ்அருங்குணத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிப்பதற்காக ஏ.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துராமன் மகள் சுமுதா (16), … Read more

சென்னையில், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த கேரள இளைஞர்; சதி வேலையா? என போலீசார் விசாரணை

BSNL network hacked by Kerala youth in Chennai: சென்னையில், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்து தனியாக டெலிபோன் எக்ஸ்சென்ஞ் நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னையில் கடந்த 15 நாட்களில் 72 லேண்ட்லைன் இணைப்புகளில் இருந்து சுமார் 10,000 – 15,000 அழைப்புகள் என அதிகப்படியான அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதை பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் ஆய்வு … Read more