சந்தை வரி விதிப்பு தொடர்பான ஓபிஎஸ் அறிக்கை; உண்மைக்குப் புறம்பான கூற்றுகள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: “தமிழகத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் விளை பொருட்களுக்கு கூடுதல் செஸ் விதிக்கப்படுவதாக தவறான புரிதலின் அடிப்படையில் அறிக்கை ஒன்றினை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அது முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரான கருத்து என்பதுடன் உண்மைக்குப் புறம்பான கூற்றுகளாகும்” என்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன மறுப்பு அறிக்கை: தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம் 1987, … Read more

முதுமலையில் 'ஜீப் சஃபாரி' சென்றவர்களுக்கு திக்திக் நிமிடங்கள் – துரத்திய காட்டு யானை

முதுமலையில் சபாரி சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர் மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் காட்டு யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற சபாரி ஜீப் ஒன்றை காட்டு யானை துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வனப்பகுதி சாலையின் இருபுறங்களிலும் நின்ற காட்டு … Read more

புகையிலை பயன்பாட்டையே முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது – பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

மனித உயிர்களை மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் புகையிலையை ஒழிக்க உறுதியேற்போம் என்று, பா.மக. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், “இன்று #WorldNoTobaccoDay. “புகையிலை: நமது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்” (Tobacco: Threat to our environment) என்பதை இந்நாளின் நோக்கமாக #WHO அறிவித்துள்ளது. உடல்நலக் கேடு மட்டுமின்றி விவசாயம், தயாரிப்பு, விநியோகம், குப்பை என அனைத்திலுமே புகையிலை பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், புகையிலையால் … Read more

பாம்பைக் கூட சமாளிப்போம்; பல்லின்னா பயம்… அப்போ நீங்க இதைப் பண்ணுங்க!

நம் வீட்டில் காணப்படும் பல்லி, ஒரு குளிர் ரத்தப் பிராணி. அண்டார்டிகா கண்டம் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பல்லிகள் காணப்படுகின்றன. சாதாரண வீட்டு பல்லிகள், விஷமற்றவை, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை. மேலும் அவை ஈக்கள், கொசுக்கள், கரையான்கள், கரப்பான் என பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. எனவே அவற்றை கொல்ல முயற்சிப்பதற்குப் பதிலாக அவற்றை துரத்துவது நல்லது. நீங்கள் பல்லிகளுக்கு பயப்படுகிறீர்கள் என்றால், உங்கள் வீடுகளில் பல்லிகள் வராமல் தடுக்கும் வழிகளை இங்கே பார்க்கலாம். வீட்டில் பல்லிகளை … Read more

இது என்ன புதுசா இருக்கு?… ஒட்டகத்தை பயன்படுத்தி மணல் கடத்தல்..!

சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நபர் ஒருவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒட்டகத்தை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். மரவ மங்கலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வளர்த்து வருகிறார். அதனை மாட்டு வண்டியில் கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதனைக் கண்டு மாட்டு வண்டியுடன் சேர்த்து ஒட்டகத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், ஒட்டகத்தை முறையாக … Read more

டெல்டா மாவட்டங்களில் 2-வது நாளாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 31) ஆய்வு செய்தார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த மே 24-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் தமிழக நீர்வளத்துறை சார்பில், சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் இரண்டாவது … Read more

ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள்: கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் காட்டில் விட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் வன உயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வெளிமான், புள்ளிமான், குரங்குகள், மட்ட குதிரைகள், நரி, முயல், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், இங்குள்ள குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் தின்பண்டங்கள், உணவு ஆகியவற்றை கொடுத்து வந்தனர். இதற்கு வனத்துறையினர் தடைவிதித்ததால் உணவிற்கு குரங்குகள் சிரமப்பட்டன. … Read more

Tamil News Live Update: மதுரையில் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.. 1,600 டன் குப்பைகள் தேக்கம்!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. பிளஸ் 2 வேதியியல் தேர்வு.. போனஸ் மதிப்பெண்! பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். பகுதி 1-அ, வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ, வினா எண் … Read more

6 மாதங்கள் காத்திருப்பு ஏன்? அவசர சட்டம் தேவை – தமிழகத்தின் மிகப்பெரிய உயிர்க்கொல்லிக்கு முடிவுகட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை  விவகாரத்தின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளை மேற்கொண்டு வந்த அரசு, இப்போதாவது புதிய சட்டம் இயற்றுவது தான் இச்சிக்கலுக்குத் தீர்வு என்ற நிலைக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் தெருவுக்கு வர … Read more

கள்ளக்குறிச்சி அருகே கறி விருந்து சாப்பிட்டு வாந்தி மயக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரை அடுத்த மேலந்தல் கிராமத்தில் கறி விருந்து சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோர் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருக்கோவிலூரை அடுத்த மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(37) என்பவர் கரும்பு வெட்டும் பணிக்கான மேஸ்திரியாக இருந்து வருகிறார். விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யும்போது, கரும்பு வெட்டி முடித்ததும், கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து, கரும்பு வெட்டிய தொழிலாளர்களுக்கு கறி விருந்து கொடுப்பது வழக்கம். அந்த … Read more