சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல்.. போலீசார் விசாரணை.!

சென்னையை அடுத்த மாங்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் வீட்டிற்குச் சென்ற மர்ம நபர்கள் கத்திமுனையில் அவரைக் காரில் கடத்திச் சென்றுள்ளனர். சுரேஷ்குமார் தனது வீட்டை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த நிலையில், முன்பணம் கொடுக்க சிலர் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி … Read more

அரசு நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் வந்துள்ளன மோடி பிரதமரான பிறகு ஊழல் குறைந்துள்ளது: பாமக தலைவர் அன்புமணி கருத்து 

விழுப்புரம்: அரசு நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் வந்துள்ளன. பிரதமராக மோடி வந்தபின் ஊழல் குறைந்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்பு மணி ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தப்பின் ஊழல் குறைந்துள்ளது. அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மொழி பற்றிய சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இந்தியாவை பொருத்தவரை எந்த ஒரு மொழியும் தேசிய மொழியும் … Read more

நெல்லை: முறைகேடாக கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்தியதாக 5 லாரிகள் பறிமுதல்

கேரளாவுக்கு முறைகேடாக கனிமவளங்களை கடத்திய 5 லாரிகளை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் பறிமுதல் செய்தார். நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி பாறை சரிந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளில் பாறை வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 6 குழுவினர் அந்த குவாரிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் இன்று வரை இந்த குவாரிகளுக்கு கனிம வளங்களை ஏற்றிச்செல்ல … Read more

சென்னை விஐடி கல்லூரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு!

சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில், மேலும் 42 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வளாகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் முதல், கொரோனா கிளஸ்டரைப் புகாரளிக்கும் நான்காவது கல்வி நிறுவனம் இதுவாகும். இந்த புதிய எழுச்சி மூலம், சென்னையை (33) விஞ்சும் வகையில், செங்கல்பட்டு (46) புதிய பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் திங்கள்கிழமை … Read more

தர்மபுரி அருகே இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த இளைஞர் மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி உயிரிழப்பு.!

தர்மபுரி அருகே இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த இளைஞர் மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். தர்மபுரி அருகே இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் மாது. இவர் நேற்று வெளியூர் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வரும்போது, பேருந்து நிலையத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மாதுவின் மீது இருசக்கர வாகனம் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் பின்னால் வந்த அரசு பேருந்து மாதுவின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் மாது பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை … Read more

தனியார் பேருந்துன்னா வானத்திலயா ஓட்டிட்டு போறீங்க.. இறக்கி விட்டா என்னப்பா? அடாவடி ஓட்டுனரின் ஆவேச வீடியோ..!

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் 25 ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்ற பயணி ஒருவர் தங்கள் கிராமத்தில் பேருந்தை நிறுத்தச்சொல்ல நடத்துனரோ, அரசுப் பேருந்தில் ஏறவேண்டியது தானே என்று மரியாதைக்குறைவாக பேசி பயணியிடம் அடாவடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் வந்து, கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் முருகவிலாஸ் பேருந்தில் பணிபுரியும் ஊழியரின் மிரட்டல் வீடியோ ஒன்று மண்டை ஓட்டு முத்திரையுடன் இணையத்தை கலக்கி வந்தது. இந்த … Read more

அமைச்சர் பொறுப்பு | தலைமைக்கு தர்மசங்கடம் தர வேண்டாம்: உதயநிதி வேண்டுகோள்

தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென தொண்டர்களுக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை சுட்டிக்காட்டி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு … Read more

ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆன்லைன் ரம்மியை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டது எனவும் அவர் குற்றம் சாட்டினார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பீரியட் நேரத்தில் இந்த சைட் டிஷ்-ஐ தொட பெண்களை அனுமதிக்க மாட்டாங்க… காரணம் தெரியுமா?

மாதவிடாய் காலங்களில் ஊறுகாய் பாட்டிலைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது கெட்டுப்போகக்கூடும் என்பதால் தனது பாட்டி அதை அறிவுத்தியதாக தொழிலில் பொறியாளரான ஷிகா பிரசாத் கூறியுள்ளார். இது அவரது கதை மட்டுமல்ல, இந்தியாவில் பல பெண்கள் இது போன்ற தப்பெண்ணங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் ஆளாகிறார்கள். மாதவிடாயின் போது உணவைத் தொட்டால் உணவு அசுத்தமாகிவிடும் என்று பாரம்பரியமாக நம்பப்பட்டது. இந்த பழமையான பாரம்பரியம் இன்னும் பல இடங்களில் உள்ளது. அங்கு ஊறுகாய் அல்லது கசப்பான சட்னியை தொட்டால் அது … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (31.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 31/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 18/14/12 நவீன் தக்காளி 70 நாட்டு தக்காளி 65/60 உருளை 34/24/22 சின்ன வெங்காயம் 45/30/26 ஊட்டி கேரட் 52/50/45 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 70/50 பீட்ரூட். ஊட்டி 50/40 கர்நாடக பீட்ரூட் 32 சவ் சவ் 20/16 முள்ளங்கி 20/16 முட்டை கோஸ் 35/30 வெண்டைக்காய் 30/15 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி … Read more