பாஜகவில் சசிகலாவை ஏற்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்: அண்ணாமலை

நெல்லை/திருச்சி: பாஜகவில் சசிகலாவை ஏற்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், “அதிமுகவில் சசிகலாவை சேர்த்துவிட்டால் அக்கட்சி இன்னும் வலுவாக இருக்கும். பாஜகவுக்கு அவர் வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவரது வருகை பாஜகவினருக்கு உறுதுணையாக இருக்கும். அவரை அதிமுகவில் சேர்க்காவிட்டால், பாஜகவில் இணைப்பதற்கான பணிகளை நாங்கள் முன்னெடுப்போம்” என்றார். பேட்டியின்போது, சசிகலாவின் பெயரைச் சொல்லாமல் … Read more

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பயணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது. அரசுப் பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தின் வைப்புத் தொகை கடந்த மார்ச் மாதம் வரை ரூ.53,555 கோடி ரூபாயாக உள்ளது. இந்தத் தொகை எல்.ஐ.சி.யின் பணத்திரட்சியுடன் கூடிய புதிய … Read more

Tamil News Live Update: தக்காளி விலை குறைந்தது.. கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை! தமிழகத்தில் நடைபெற்ற 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதன்படி 12ம் வகுப்பு தேர்வுகளில் 1.95 லட்சம், 11ம் வகுப்பு … Read more

அடுத்தடுத்து தீப்பற்றி எரியும் மின்சார ஸ்கூட்டி.. நெல்லையில் பரபரப்பு சம்பவம்.!

கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனம் திடீரென தீப்பிடித்து எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டி ஒன்று தீபிடித்து எரிந்துள்ளது . கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் ஆசீர் என்பவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் சமீபத்தில் எலெக்ட்ரிக் … Read more

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2-வது நாளாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறைவால் பயணிகள் கடும் அவதி.!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2-வது நாளாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறைவால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலை முதல் காத்திருந்த பயணிகள் பேருந்துகள் வராததால் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் குதித்தனர். கிடைத்த ஒரிரு பேருந்துகளில் ஏற பயணிகள் முண்டியடித்துக் கொண்டனர். குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் பட்சத்தில் முன்பதிவு பிரச்சினைகளால் அதிலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக பேருந்துகள் குறைந்தளவில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. Source link

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்தது தமிழகம்

சென்னை: தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை, மத்திய அரசால் 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், கரோனா பரவலால் அதன் அம்சங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை அமல்படுத்துவதில் மத்திய கல்வி அமைச்சகம் தீவிரம் காட்டிவருகிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஆரம்பம் … Read more

திண்டிவனம் அருகே சோகம் – கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேரப்பிள்ளைகளுடன் மூதாட்டி பலி

கல்குவாரியில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்துக்கு பள்ளி விடுமுறைக்காக சிறுவர்கள் சிலர் தங்களின் பாட்டி புஷ்பா என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டுக்கு வந்திருந்த தனது பேரப் பிள்ளைகளை மூதாட்டி புஷ்பா, பெருமுக்கலில் அமைந்துள்ள செயல்படாத கல்குவாரி குட்டைக்கு குளிப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் குழந்தைகள் 3 பேரும் அடுத்தடுத்து குட்டையில் தவறி விழுந்துள்ளனர். இதை பார்த்து … Read more

இப்போ இது முக்கியம்… வருமான வரி சேமிக்க டாப் 5 வழிகள்!

வருமான வரி செலுத்தும் வரம்பிற்குள் வருபவர்கள் வரிச்சலுகை பெறுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. வரி செலுத்துபவர்கள் இந்த வழிமுறைகளில் தங்களுக்கு பொருத்தமானவைகளை தேர்வு செய்து கொள்ளலாம் . வரி சலுகைக்கு ஏற்ற வாய்ப்புகளை தேர்வு செய்யும்போது, அவை நிதி இலக்குகளுக்கு பொருத்தமாக இருப்பது அவசியம். வருமான வரியை சேமிக்க டாப் ஐந்து திட்டங்களை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம். பி.பி.எப் 80 சி பிரிவின் கீழ் வரும் பிபிஎப் திட்டம்: ஓய்வூதிய பாதுகாப்பிற்கு உதவும் பி.பி.எப் திட்டத்தில் முதலீடு … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (02.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 02/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 18/14/12 நவீன் தக்காளி 45 நாட்டு தக்காளி 38/30 உருளை 34/24/22 சின்ன வெங்காயம் 45/30/26 ஊட்டி கேரட் 40/35/30 பீன்ஸ் 60/50 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 30 சவ் சவ் 20/17 முள்ளங்கி 20/17 முட்டை கோஸ் 35/30 வெண்டைக்காய் 30/15 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி 30/20 காராமணி … Read more

கே.கே. மரணம் குறித்து போலீஸார் விசாரணை – சந்தேக மரணம் என வழக்கு!!

பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் இறப்பை சந்தேக மரணமாக பதிவுசெய்து காவல்துறை விசாரித்து வருகிறது. கேகே கொல்கத்தாவில் 2 கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக சென்ற நிலையில் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார். அவரது மரணத்தை சந்தேக மரணமாக காவல்துறை பதிவுசெய்துள்ளது. கேகே தங்கியிருந்த ஹோட்டலின் மேலாளர் மற்றும் பிற பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்வரை என்னென்ன நடந்தது என்பதை அறிய சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது. முதல்கட்ட … Read more