ஆம்னி பேருந்து கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு என பயணிகள் புகார்

சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அரசுப் பேருந்துகளும் அதிக அளவு இயக்கப்படாததால், கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்ல முடியாத பயணிகள் செய்வதறியாது தவித்தனர். அரசு இதில் கவனம் செலுத்தி ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை … Read more

கூடுதல் வட்டி! அதிக லாபம்;  பிக்ஸ்ட் டெபாசிட் எனும் வரப்பிரசாதம்!

நீங்கள் உங்கள் பணத்தை சாதுர்யமாக சேமிக்க நினைத்தால் தபால் துறை அறிய வாய்ப்பை அறிக்கிறது. தபால் அலுவலகத்தில் பிக்ஸ்ட் டெபாசிட் ( FD) கணக்கை தொடங்குவதன் மூலம் நீங்கள் கூடுதல் வட்டியை பெற முடியும். கூடுதல் வட்டி கிடைப்பதுடன் நம் பணத்திற்கு அரசின் உத்தரவாதமும் சேர்ந்து கிடைக்கிறது. பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கை தொடங்கினால் உங்களுக்கு காலாண்டு அடிப்படையில் வட்டி கிடைக்கும். தபால் நிலையத்தில் பிக்ஸ்ட் டெபாசிட் கணக்கு  தொடங்குவது  மிகவும் சுலபம். ஒன்று முதல் 5 ஆண்டுகள் … Read more

எங்கள் சாவிற்கு யாரும் காரணமில்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் நகைமதிப்பீட்டாளர் தற்கொலை..!

குடும்பத்துடன் நகைமதிப்பீட்டாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் .இவருக்கு திருமணமாகி ரோகிணி என்ற மனைவியும் அர்ச்சனாஎன்ற மகளும் உள்ளனார். ரமேஷ் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை அக்கா மேகலா தங்கை ரோகிணியை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.  நீண்ட நேரம் ஆகியும் அவர் அழைப்பை ஏற்காததால் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். … Read more

போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பியோட்டம்.!

சென்னை அடுத்த திருவேற்காட்டில் உள்ள போதை மறு வாழ்வு மையத்தில் இருந்து 17 பேர் தப்பி சென்றதாக கூறப்படும் நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேல் அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர், ஒரு அறையின் ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தப்பிச் சென்றவர்களில் 8 பேர் மீண்டும் மறு வாழ்வு மையத்திற்கு வந்ததாக சொல்லப்படும் நிலையில் தப்பியோடிய … Read more

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ செயல்படுவது எப்படி?

சென்னை: நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராயபுரம், தங்கசாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தீவிரத் தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார். இதன்பிறகு முதல்வர் தலைமையில் மாணவ, மாணவியர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை … Read more

ராமநாதீசுவரர் கோவிலின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு – உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோவிலின் சொத்துக்கள் அக்கிரமிக்கப்படுவது குறித்த புகாரை உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த போரூரில் உள்ள ராமநாதீசுவரர் கோவிலின் சொத்துகள், நிலங்கள் அபகரிக்கப்படுவதாக திருத்தொண்டர்கள் சபை நிறுவனரான சேலத்தைச் சேர்ந்த ஆ. ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பல புகார்களை அளித்து வந்தார். ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளதால் கோவிலுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், … Read more

இனி வருடத்திற்கு 2 ஐ.பி.எல்? புதிய திட்டத்திற்கு அடித்தளம் போடும் பி.சி.சி.ஐ!

Bcci Tamil News: இந்தியாவில் 15 வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து கிரிக்கெட் அணிகளும் தங்களது வருட காலண்டரை கடைபிடிக்க புறப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி நெதர்லாந்து அணியுடன் டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து மண்ணில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, ஜூன் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை தென் ஆப்பிரிக்கா உடனான 5 … Read more

வாய்ப்பை இழக்கக் கூடாது: அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் 13-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை  தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்துவது, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏப்ரல் … Read more

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் – வானிலை ஆய்வு மையம்

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 5, 6, 7 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று … Read more

“குதிரைகள் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதா?” – அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தாமதம் மீது அன்புமணி விமர்சனம்

சென்னை: “மே மாதத் தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கியிருந்தால், நடப்பாண்டும் வழக்கத்தை விட கூடுதலாக பல லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பர். அந்த வாய்ப்பை அரசு பள்ளிகளில் இழந்து கொண்டிருக்கின்றன” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசு பள்ளிகள் வரும் 13-ம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் … Read more