"அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன்..ஆனால்” – மா.சுப்ரமணியன்

“டெண்டர் பணிகளே முடிவடையாத நிலையில் அதில் ஊழல் நடந்துள்ளது, நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் காரணங்களால், தமிழக அரசுக்கு 77 … Read more

Tamil News Today Live: 44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

Go to Live Updates Tamil Nadu News Updates: தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் சென்னை கோயம்பேட்டில் இன்று தொடக்கம். சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு, இயந்திரத்தில் மஞ்சப்பை பெறும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பெட்ரோல் – டீசல் விலை நிலவரம் சென்னையில் 14வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனை கோவையில் ஸ்வீக்கி ஊழியரை … Read more

#கடலூர் || வெளியான செய்தியால் மன வேதனையில் பாமக தலைவர்.! சோகத்தில் மூழ்கிய கடலூர் மாவட்டம்.! 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கிதாகவும், மயங்கிய நிலையில் அவர்களை மீட்ட ஊர் பொதுமக்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 7 பேர் மரணத்துக்கு பாமக தலைவர் மருத்துவர் … Read more

தமிழகத்தில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா தொற்று: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் புதிய வகை பிஏ4 மற்றும் பிஏ5 வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் புத்தக கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர்ஆவடி நாசர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” தமிழகத்தில் மாவட்டம் அளவில் புத்தக … Read more

`மோடியால்தான் இலங்கை மக்களுக்கு நன்மை செய்யமுடியுமென சீமானுக்கு தெரியும்’-அண்ணாமலை பேச்சு

“அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது” எனக்குறிப்பிட்டுள்ளார் பாஜக அண்ணாமலை. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், “பல முக்கிய மசோதா நிறைவேற அதிமுக எங்களுக்கு துணையாக இருந்தது. அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. 20 சதவீத மக்கள் தேசிய அரசியலுக்கு ஆதரவாக உள்ளனர். அதிமுக குறித்து எங்களது கட்சியினர் தலைமையின் உத்தரவு இல்லாமல் எந்த … Read more

கமலாலயத்தில் அண்ணாமலை பிரஸ் மீட்… யூடியூப் சேனல்களுக்கு அனுமதி கிடையாது

சில தினங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வெளியிடுவோம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று(ஜூன் 5) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலையின் செய்தியாளர்களை சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழக பாஜக மாநில ஊடகப்பிரிவு தலைவர் பி ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் ஊடக நண்பர்கள் அனைவரும் … Read more

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தது சூதாட்ட சொகுசு கப்பலா? கோவை லாட்டரி தொழிலதிபருக்கு நன்றிக்கடனா? பரபரப்பு தகவல்.!

புதுவை கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “ஆன்மிக பூமியாக திகழும் புதுவையின் புகழை சீர்குலைக்கும் வகையில் கேசினோ சூதாட்ட கப்பலுக்கு தமிழக திமுக அரசு அனுமதியளித்துள்ளது. தேர்தலுக்கு உதவிய கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்த கப்பலுக்கு தமிழக திமுக அரசு அனுமதியளித்துள்ளது. இந்த தனியார் கப்பல் பயணத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். உல்லாச பயணம் என்ற போர்வையில் இயக்கப்படும் கப்பலில் … Read more

கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள், 3 பெண்கள் பலி..!

கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள், 3 பெண்கள் பலி தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கினர் திருமணமாகி ஒரே மாதமான இளம்பெண்ணும் பலி கடலூர் நெல்லிக்குப்பத்தை அடுத்த அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் 4 சிறுமிகள், 3 பெண்கள் நீரில் மூழ்கி பலி குச்சிப்பாளையத்தில் உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது 4 சிறுமிகளும், 3 பெண்களும் நீரில் மூழ்கி உயிரிழப்பு தடுப்பணையின் ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில் சிறுமிகளும், இளம்பெண்களும் தண்ணீரில் மூழ்கியதாக சொல்லப்படுகிறது … Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குமரிக் கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்ட கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமேஸ்வரம் அருகே மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத் துறைக்குயினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் … Read more