பொம்மபுர ஆதீனம் ஆக்கிரமித்துள்ள 380 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் மனு

பொம்மையார் பாளையத்தில் மயிலம் பொம்மபுர ஆதீனம் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள 380-ஏக்கர் தரிசு நிலங்களை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் எபாளையம் குயிலாப்பாளையம், பிள்ளைச்சாவடி ஆகிய மூன்று கிராமங்களில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள 380 ஏக்கர் தரிசு நிலத்தை மயிலம் பொம்மபுர ஆதீனம் தனது கட்டுப்பாட்டில் ஆக்கிரமித்து மடத்தின் பெயரில் வைத்துள்ளார் என கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், … Read more

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த பவுடர்… சுகர் பேஷண்ட்ஸ் நோட் பண்ணுங்க!

Tamil Health Food Update For Diabetes Patients : இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்க்கரை அளவு சமநிலை தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது. இது ஒரு குணப்படுத்த முடியாத நோய், இந்நோய் தாக்கம் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையே சர்க்கரை நோய் வருவதற்கு … Read more

தமிழ்நாடு கஞ்சா விற்பனைக் கூடமா? வளரிளம் தலைமுறைகளின் எதிர்காலத்தையே அழித்தொழிக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு – அதிர்ச்சி அறிக்கை.!

தமிழ்நாடு ‘கஞ்சா விற்பனைக் கூடமாக’ மாறிவருவதைத் தடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்கள் முதல் சிறுகிராமங்கள் வரை கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, மதுபானங்களை அரசே விற்பதன் மூலம் தமிழகக் குடும்பங்களைச் சீரழித்தது போதாதென்று, தற்போது கஞ்சா பயன்பாட்டினை கட்டுப்படுத்த தவறி, வளரிளம் தலைமுறைகளின் எதிர்காலத்தையே அழித்தொழிக்கும் … Read more

ஊடக வெளிச்சத்துக்காகவே அரசு அலுவலங்களில் ஸ்டாலின் ஆய்வு: டிடிவி தினகரன் சாடல்

குன்னூர்: “ஊடக வெளிச்சத்திற்காகவே முதல்வர் ஸ்டாலின் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்கிறார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஓராண்டுகால திமுக ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் … Read more

3 வருடமாக ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு; பள்ளியிலும் நிராகரிப்பு- வேதனையில் மீனவக் குடும்பம் மனு

தரங்கம்பாடியில் 3 வருடமாக மீனவ குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால், பள்ளியிலும் மாணவர்கள் பாகுபாடு காட்டுவதாக மீனவ குடும்பத்தினர் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் குட்டியாண்டியூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் காத்தவராயன். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது, ‘’குட்டியாண்டியூரில் மீன் எடுத்து டிரான்ஸ்போர்ட் வேலை செய்து வருகிறேன். நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த … Read more

ஏழைகளுக்கு ஏற்ற சின்ன சைஸ் கார்… என்னென்ன வசதிகள் இருக்கு?

Wuling Electric Car features in tamil: சிறிய வகை கார்கள் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது டாடாவின் நானோ கார் தான். இந்திய மக்கள் சாலைகளில் டூவீலர்களில் குடும்பத்துடன் 3 பேர் 4 பேராகப் பயணிப்பதைப் பார்த்த டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா, சாதாரண நடுத்தர குடும்பத்தினர் செல்லும் வகையில் சிறிய ரக காரை உருவாக்கத் திட்டமிட்டார். அதன் விலை சுமார் 1 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால், ஆட்டோமொபைல் … Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்க புதிய திட்டம்.!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்கும் வகையில் 10 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களால் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும், பூங்காவில் உள்ள விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களும், ஸ்டிக்கர் ஒட்டி 10 ரூபாய் திரும்பப்பெறும் வைப்பு தொகையாக பெறப்பட்டு, … Read more

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், நாளை முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை … Read more

சுற்றுலாப் பயணிகள் வருகையால் களைகட்டிய ஒகேனக்கல்

தருமபுரி: ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகையால் ஒகேனக்கல் களைகட்டியது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை விநாடிக்கு 6,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால், பிரதான அருவியில் மிதமான வேகத்தில் தண்ணீர் விழுந்தது. மேலும், ஆற்றில் நீரின் இழுவை குறைவாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் ஒகேனக்கல்லுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வார இறுதிநாள் என்பதாலும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் ஒகேனக்கல்லுக்கு … Read more

அதிக வட்டி தருவதாக ரூ.7 கோடி மோசடி: பணத்தை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை அருகே அதிக லாபத்துடன் கூடிய வட்டி கொடுக்கப்படும் என 7 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியூ ரைஸ் ஆலயம் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் கிளை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினால் … Read more