சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்.! 

குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும் என்று, தமிழக அரசுக்கு  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பீகாரில் குடி(சாதி)வாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சரியான நேரத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்நடவடிக்கையை முன்னெடுத்த அம்மாநில அரசிற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். ஆண்டாண்டு … Read more

கழிவறையில் பிறந்து 40 நாட்களேயான ஆண் குழந்தையின் சடலம்-பெற்றோர், பாட்டியிடம் தீவிர விசாரணை

அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்களேயான ஆண் குழந்தை நள்ளிரவில் கழிவறை பக்கெட் தண்ணிரில் தலைகீழாக மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெற்றோர், பாட்டியிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். காதலித்து திருமணம் செய்துக் கொண்ட மனோ – அம்சா நந்தினி தம்பதிக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றிரவு தாயின் அருகில் படுத்துறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. உறவினர்கள் வீடு முழுவதும் தேடிய நிலையில், கழிவறையில் இருந்த பக்கெட்டில் … Read more

இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி | செக் போஸ்ட்டுகள் அகற்றம்; நடவடிக்கை தொடரும்: சென்னை மாநகராட்சி

சென்னை: இந்து தமிழ் திசை செய்தி எதிரொலியாக சென்னையில் ஒரு சில சாலைகளின் நுழைவு வாயிலில் குடியிருப்புவாசிகள் அமைத்த செக் போஸ்ட்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். மேலும் இது போன்ற செக் போஸ்ட் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகள் என்று பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் யார் வேண்டுமானாலும் … Read more

அறிவுப்பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன், ஆனால்… அண்ணாமலையை கிண்டல் செய்த அமைச்சர் மா.சு

தமிழக அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்து மாவு டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்த நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், “அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன், ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்” என்று கிண்டல் செய்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசில், மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி வந்தார். மேலும், திமுக அரசில் நடந்த ஊழல்களின் பட்டியலை வெளியிடுவதாக … Read more

#BigBreaking || தமிழக மக்களுக்கு சற்றுமுன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கிதாகவும், மயங்கிய நிலையில் அவர்களை மீட்ட ஊர் பொதுமக்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, இந்த துயர … Read more

கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்தில் ஆவின் ஹெல்த் மிக்ஸை சேர்க்க வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்துப் பொருட்கள் தொகுப்பில், ஆவின் ஹெல்த் மிக்சைச் சேர்க்க வேண்டும் என்றும், அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்தின் புரோ பி.எல் மிக்ஸ்-க்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆவினில் ஹெல்த் மிக்ஸ் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திடம் வாங்கினால் அரசுக்கு 77 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிவித்தார். Source … Read more

ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை: செயல்பாட்டுக்கு வந்தது விற்பனை இயந்திரம்

சென்னை: ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரம் கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக … Read more

வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி அளிக்கும் வனத்துறை

தமிழகத்தில் முதல்முறையாக வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டையாட  பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடீஸ் எஸ்டேட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உடலில் காயங்களுடன்  இறக்கும் தருவாயில் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டது. 8 மாதமே  ஆன அந்த புலிக்குட்டியின்  உடலில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்தி இருந்த நிலையில், தனிக் கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஓன்றரை வயதான (16  மாதம்) அந்த புலிக் குட்டி ஆரோக்கியத்துடன் இருந்து வரும் … Read more

தமிழகத்தில் புதியதாக 2 வைரஸ்கள் தொற்று; 12 பேர் பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக பிஏ4, பிஏ5 ஆகிய 2 வைரஸ்கள் பரவியுள்ளதாக பரவத் தொடங்கியுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “புதியதாக உருமாற்றம் பெற்றுள்ள தமிழகத்தில் தென்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக ஒமிக்ரான் என்கிற வைரஸ், பிஏ1, பிஏ2, பிஏ3, பிஏ4, பிஏ5 என ஒரு 7 வைகளில் இருக்கிறது என்று உலகம் முழுவதும் சொல்லப்பட்டு … Read more

பெரும் மனவேதனையில் எடப்பாடி கே பழனிச்சாமி.! 

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  “கடலூர் அருகே கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த  மோனிசா, சங்கவி, சுமிதா, காவியா, பிரியதர்ஷிணி, நவநீதம் மற்றும் பிரியா, ஆகிய 7 பேர் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன். … Read more