சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர், நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 2020-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்திக்குமார் சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகிய 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார். இவர்களில் நீதிபதி சத்திக்குமார் … Read more

ஆண்பாதி, பெண்பாதியாக அர்த்தநாரீஸ்வரர்.. களைகட்டும் திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழா.!!

திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழா : உலகிலேயே ஆண்பாதி, பெண்பாதியாக அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிப்பது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் மட்டுமே. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்செங்கோட்டில் ஆண்டிற்கு ஒருமுறை மிகச்சிறப்பாக வைகாசி விசாக தேர் திருவிழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதம் கொண்டாடப்படும் தேர் திருவிழாவானது திருச்செங்கோடு மாநகரம் முழுவதும் 14 நாட்களுக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் சுவாமிகள் மலைமேல் இருந்து கீழே கொண்டுவரப்படுவர். பிறகு திருத்தேர் மீது … Read more

ரூ.5 லட்சம் பணம் கையாடல் செய்ததாக மிரட்டல்.. ஹோட்டல் ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலை..!

சேலத்தில் ஹோட்டல் ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதூர் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவ்வப்போது பணம் கையாடல் செய்து வந்த நிலையில் 5 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பதாக உரிமையாளர்கள் எழுதி வாங்கி மிரட்டியதால் மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டார். Source link

புதுக்கோட்டை பச்சலூர் அரசுப் பள்ளியை தயார்படுத்தும் பணி தீவிரம்: முதல்வர் வருவார் என எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை: புதுமைப் பள்ளியாக திகழும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வர் வராலாமென்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. அறந்தாங்கி அருகே மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி முன்மாதிரி பள்ளியாக மாற்றிய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமணி, அங்கிருந்து கடந்த 2019-ல் பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதலில் சென்றார். அங்கு, சுமார் … Read more

இன்ஸ்டாகிராமில் மாஸ் அப்டேட்… மகிழ்ச்சியில் ரீல்ஸ் ரசிகர்கள்

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. ஷாட் வீடியோ தளங்களான டிக்டாக், ஸ்னாப்சாட் போன்ற போட்டி நிறுவனங்களை கருத்தில் கொண்டு, இன்ஸ்டாவின் முக்கிய அம்சமான ரீல்ஸில் பல வதிமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய அப்டேட்டில், இன்ஸ்டா ரீல்ஸ் நேரம் அதிகரிப்பு, ரீல்ஸ் டெம்பிளேட் உட்பட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் முன்பு 60 நொடிகள் வரை நீளமுள்ள வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். ஆனால் தற்போது அதன் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் || கல்குடி மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.!

கல்குடியில் மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கல்குடி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் எழுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் இவரது மகன் தங்கவேலு மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டனர். தங்கவேலு மற்றும் அவரது தந்தை ஆகியோர் குளத்தில் மீன்களை பிடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியிலுள்ள சேற்றில் தங்கவேல் சிக்கிக்கொண்டு நீரில் மூழ்கி உள்ளார். இதனையடுத்து இளைஞரை தண்ணீரில் தேடியபோது அவர் உயிரிழந்த நிலையில் … Read more

காணிக்கை பணத்தை பூமியில் மரமாக நடுங்கள்… இயற்கையே இறைவன்..! என்ன ஒரு அறிவார்ந்த உபதேசம்..!

கோவை மாவட்டத்தில் மலைகளை கடந்து வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க சென்ற பக்தர் ஒருவர் அங்கிருந்த அடியாருக்கு காணிக்கையாக பணத்தை கொடுக்க, பணத்தை வாங்க மறுத்த அவர், மரம் நடுங்கள் என்று தெரிவித்த அறிவுரை பக்தர்களை நெகிழ வைத்துள்ளது. பணம் தேடி அலையும் உலகில் மன அமைதி தேடி கோவை வெள்ளிங்கிரி மலையில் உள்ள சிவன்கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அண்மையில் அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் தன் சகாக்களுடன் வெள்ளிங்கிரி ஆண்டவரை … Read more

திருச்செங்கோடு | அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாக தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

நாமக்கல்: பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. கோயிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா ஆண்டுதோறும் தமிழ் மாதமான வைகாசியில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழா 14 நாட்கள் விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடு காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை. கரோனா தளர்வுகள் … Read more

பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம்… எப்படி இவருக்கு மட்டும் ரோஷம் வந்துச்சு – இன்றைய அரசியல் மீம்ஸ்

உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்று நாம் இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகள் மற்றும் தகவல்களை புரியும் படியாகவும், அவற்றை தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன. அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வரும் இன்றைய அரசியல் … Read more

இனி நான் தான் தலைவன்.. ரவுடிகளுக்கிடையே நடந்த தகராறில் இளைஞர் படுகொலை.. திருப்பூரில் பரபரப்பு..!

கேங்க் லீடர் யார் என்ற தகராற்றில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் சுரேஷ் . இவரது நண்பர்கள் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், மணிகண்டன், குணா, அறிவுபிரகாஷ், பிரவீன்குமார் உள்ளிட்டோர் மீது அடிதடி உள்ளிட்டபல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்னிலையில், நண்பர்கள் ஐவரும் அங்குள்ள  மதுபான கடையில் மது அருந்தியுள்ளனர். அப்போது சுரேஷ் நண்பர்களிடம் நான் தான் உங்களுக்கு தலைவன். நான் சொல்வதைத் தான் இனி நீங்கள் கேட்க வேண்டும். நான் … Read more