புள்ளிவிவரம் சொல்லும் அண்ணாமலை இதை பற்றி சொல்ல முடியுமா? அண்ணாமலைக்கு சவால் விடுத்த கேஎஸ் அழகிரி.!

சென்னை அருகே கல்பாக்கத்தில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டார். திருமண நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி தெரிவித்ததாவது, “அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பாஜக குறித்து கூறியது சரியாகத்தான் இருக்கும். அவருடைய கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன்சிங் தலைமையிலான அரசில் தமிழகத்தில், சேதுசமுத்திர திட்டம்,செம்மொழியாக தமிழ் மொழியை அறிவித்தது, இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை அதிகமாக அமைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு, மாணவர்களுக்கு … Read more

பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. இளைஞர் உட்பட 7 பேர் கைது.!

நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டியில், 10ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். வடகாடு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்ற இளைஞருக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு, செல்போன் மூலம் மாணவியுடன் கந்தசாமி பேசி வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் … Read more

'அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன்' – அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சென்னை: அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல் செய்துள்ளார். தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும் , தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அமைச்சர் சுப்பிரமணியன், “அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என … Read more

"அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன்..ஆனால்” – மா.சுப்ரமணியன்

“டெண்டர் பணிகளே முடிவடையாத நிலையில் அதில் ஊழல் நடந்துள்ளது, நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் காரணங்களால், தமிழக அரசுக்கு 77 … Read more

Tamil News Today Live: 44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

Go to Live Updates Tamil Nadu News Updates: தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் சென்னை கோயம்பேட்டில் இன்று தொடக்கம். சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு, இயந்திரத்தில் மஞ்சப்பை பெறும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பெட்ரோல் – டீசல் விலை நிலவரம் சென்னையில் 14வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனை கோவையில் ஸ்வீக்கி ஊழியரை … Read more

#கடலூர் || வெளியான செய்தியால் மன வேதனையில் பாமக தலைவர்.! சோகத்தில் மூழ்கிய கடலூர் மாவட்டம்.! 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கிதாகவும், மயங்கிய நிலையில் அவர்களை மீட்ட ஊர் பொதுமக்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 7 பேர் மரணத்துக்கு பாமக தலைவர் மருத்துவர் … Read more

தமிழகத்தில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா தொற்று: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் புதிய வகை பிஏ4 மற்றும் பிஏ5 வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் புத்தக கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர்ஆவடி நாசர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” தமிழகத்தில் மாவட்டம் அளவில் புத்தக … Read more

`மோடியால்தான் இலங்கை மக்களுக்கு நன்மை செய்யமுடியுமென சீமானுக்கு தெரியும்’-அண்ணாமலை பேச்சு

“அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது” எனக்குறிப்பிட்டுள்ளார் பாஜக அண்ணாமலை. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், “பல முக்கிய மசோதா நிறைவேற அதிமுக எங்களுக்கு துணையாக இருந்தது. அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. 20 சதவீத மக்கள் தேசிய அரசியலுக்கு ஆதரவாக உள்ளனர். அதிமுக குறித்து எங்களது கட்சியினர் தலைமையின் உத்தரவு இல்லாமல் எந்த … Read more

கமலாலயத்தில் அண்ணாமலை பிரஸ் மீட்… யூடியூப் சேனல்களுக்கு அனுமதி கிடையாது

சில தினங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வெளியிடுவோம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று(ஜூன் 5) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலையின் செய்தியாளர்களை சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழக பாஜக மாநில ஊடகப்பிரிவு தலைவர் பி ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் ஊடக நண்பர்கள் அனைவரும் … Read more

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தது சூதாட்ட சொகுசு கப்பலா? கோவை லாட்டரி தொழிலதிபருக்கு நன்றிக்கடனா? பரபரப்பு தகவல்.!

புதுவை கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “ஆன்மிக பூமியாக திகழும் புதுவையின் புகழை சீர்குலைக்கும் வகையில் கேசினோ சூதாட்ட கப்பலுக்கு தமிழக திமுக அரசு அனுமதியளித்துள்ளது. தேர்தலுக்கு உதவிய கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்த கப்பலுக்கு தமிழக திமுக அரசு அனுமதியளித்துள்ளது. இந்த தனியார் கப்பல் பயணத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். உல்லாச பயணம் என்ற போர்வையில் இயக்கப்படும் கப்பலில் … Read more