விஜய் – அதிமுக கூட்டணி! பிள்ளையார் சுழி போட்டாச்சு! உறுதிப்படுத்திய பழனிசாமி?

மக்களை காப்போம், தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் கடுமையான பிரசாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் விஜய் உடன் கூட்டணி குறித்து பேசி உள்ளார்.

சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக வழக்கு

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு குறித்து விசா​ரிப்​ப​தற்​காக சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தவெக சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிர​ச்சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்து நீதிபதி செந்தில்குமார் உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில், இந்த உத்​தரவை எதிர்த்து … Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டியில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோவில்பட்டி: சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் நாளை (அக்.9) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-ம் ஆண்டு செப்.24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் … Read more

விழுப்புரம் ரயில்வே இடத்தில் 44 வீடுகள் அகற்றம் – ஆக்கிரமிப்பால் நடவடிக்கை

விழுப்புரம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி, விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையையொட்டி ரயில்வே இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 44 வீடுகள் இன்று (அக்.8) அகற்றப்பட்டன. விழுப்புரம், பவர் ஹவுஸ் சாலையின் நடுவே மாரியம்மன் கோயிலும் மற்றும் சாலையை ஒட்டியுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 44 வீடுகள் இருந்தது. இதில் 43 ஓடு மற்றும் சிமென்ட் ஷீட் வீடுகளும், ஒரு கான்கிரீட் வீடும் அடங்கும். 50 ஆண்டுக்கு மேலாக, 44 வீடுகளிலும் 3-வது தலைமுறையாக பலரும் வசித்தனர். … Read more

வானிலை முன்னறிவிப்பு: காஞ்சி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (அக்.9), நாளை மறுதினம் (அக்.10), வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுசன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more

தவெகவுக்கு வலை விரிக்கும் காங்கிரஸ், பாஜக – விஜய்யின் பிளான் என்ன?

கரூர் துயரத்துக்குப் பின்னர் விஜய் இன்னும் வீட்டைவிட்டுக்கூட வெளியே வரவில்லை. ஆனால், அவரை கூட்டணிக்குள் கொண்டுவர இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் பக்கா பிளானோடு களமிறங்கியுள்ளன. திமுகவோடு அசைக்க முடியாத பிணைப்போடு கூட்டணியில் தொடர்கிறது காங்கிரஸ். அதேபோல பாஜகவும் அதிமுகவை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளது. ஆனாலும், தேர்தல் அரசியலில் இதுதான் இறுதியான கூட்டணி நிலைப்பாடு என சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், கரூர் துயரத்துக்குப் பிறகு விஜய்க்கு ஆதரவாக போட்டிப் போட்டி வேலை செய்துகொண்டிருக்கிறது பாஜகவும், காங்கிரஸும். … Read more

உடைந்து விழுந்த அரசுப் பேருந்து படிக்கட்டு – பள்ளிபாளையம் அருகே பயணிகள் அதிர்ச்சி

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே ஓடும் அரசுப் பேருந்தின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோட்டில் இருந்து கோவை கோட்டத்திற்கு உட்பட்ட ”கே 1” என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் வழியாக இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து நேற்று காலை ஈரோட்டில் இருந்து மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் சென்றது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இப்பேருந்து பள்ளிபாளையம் அருகே ஆவுத்திப்பாளையம் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது அதன் பின்புற படிக்கட்டுகள் … Read more

“கோவை உயர்மட்ட பாலத்தின் 55% பணிகள் நிறைவுற்றது அதிமுக ஆட்சியில்தான்” – பழனிசாமி பேச்சு

திருச்செங்கோடு: “அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் ரூ.1621 கோடியில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பணிகள் 55% நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் போட்டனர். அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்று கிடப்பில் போட்டு, இப்போது ஸ்டாலின் திறக்கிறார்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில், திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட கரட்டுபாளையம் பகுதியில் திருச்செங்கோடு – பரமத்தி சாலையருகே திறந்தவெளி மைதானத்தில் நடந்த … Read more

TVK Vijay: கரூர் விவகாரம்! தமிழக வெற்றிக் கழகம் எடுத்த அதிரடி முடிவு!

விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தனியார் நிறுவனத்தை மூட நடவடிக்கை: இருமல் மருந்து விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருநெல்வேலி: இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமையை சட்டப்படி ரத்து செய்து, நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 60-வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்தியப் பிரதேச மாநிலம், சிந்து வாரா மாவட்டத்தில் குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாகக் கருதப்படும் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து … Read more