பொன்முடி விவகாரம்… 'நாளைக்குள் பதவிப் பிரமாணம்' – ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கெடு

Supreme Court Condemns TN Governor RN Ravi: பொன்முடி அமைச்சராவதை ஆளுநர் ஆர்.என். ரவி தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஆளுநர் ரவியை கடுமையாக சாடியுள்ளது.  

“மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு” – சொல்கிறார் செல்லூர் ராஜு

மதுரை: ”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடசேனுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது” என்று அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார். மதுரை மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐடி விங்) நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மற்றும் அதிமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன் அறிமுகக் கூட்டம் இன்று மாநகர கட்சி அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமை வகித்து, மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை அறிமுகம் செய்து வைத்தார். … Read more

பாஜக 20 தொகுதிகளில் நேரடி போட்டி… அண்ணாமலை அறிவிப்பு – ஓபிஎஸ் அணிக்கு கல்தா!

Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் 20 மக்களவை தொகுதியில் பாஜக நேரடியாக களம் காண்கிறது என்றும் வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என டெல்லி செல்லும் முன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். 

அடையாள அட்டை வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் முருகன் மனு 

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்துள்ள மனுவில், “லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க போகிறேன். அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் ஆகும். எனவே தனக்கு உரிய அடையாள … Read more

ஜனநாயக அறப்போர் நடத்த உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுக்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்!

DMK Alliance In 40 Constituencies Victory : இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்! என்று அறைகூவல் விடுத்து நாற்பதும் நமதே! நாடும் நமதே!! என அன்புடன் கடிதம் எழுதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை இரவு ராஜ்நிவாஸில் பதவியேற்கிறார். புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் பொறுப்பை, தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை வகித்து வந்தார். அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்து தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். தமிழிசைக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி மாநிலத் துணை நிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தெலங்கானா ஆளுநராக நேற்று அவர் பொறுப்பேற்றார். அதையடுத்து, புதுச்சேரிக்கு நாளை … Read more

அண்ணாமலை ஓர் பொய் புழுகி: அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்…!

Tamil Nadu News: அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன? பாராளுமன்ற தேர்தல் என்றால் என்னவென்று தெரியாது: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் 

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அறிவிப்பு

உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் த.லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீலகிரி (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் த.லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சபாநாயகர் ப.தனபால் இவரது தந்தை. லோகேஷ் தமிழ்செல்வன் முதன்முறையாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். பி.காம் எம்பிஏ படித்துள்ளார். இவர் அதிமுக ஐடி பிரிவு அவிநாசி … Read more

பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன அதிமுக! புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மறுத்துவிட்ட நிலையில் புதுக்கோட்டையில் இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.

ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு அதிமுகவில் சீட்: நெல்லையில் போட்டி

சென்னை: திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். மக்களவை தேர்தலில் அவருக்கு நெல்லை தொகுதியில் சீட் வழங்கி அதிமுக அறிவித்துள்ளது. யார் இந்த சிம்லா முத்துச்சோழன்?: திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் (35). கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இவரது … Read more