ரிசர்வ் வங்கியின் தங்க நகைகடன் விதிகள் : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

Tamilnadu Government, Gold Loan : தங்கநகை கடன் மீதான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி தளர்த்தக்கோரி நிதியமைச்சகம் வலியுறுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.

''வைகோவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்காதது வருத்தம் அளிக்கிறது'' – துரை வைகோ

திருச்சி: “வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தின் நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம்” என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1978-ம் ஆண்டு தனது 34- வது வயதில் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் … Read more

‘நீட் மட்டும்தானா? அதைத் தாண்டியும் உலகம் இருக்கு!’ – மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

மாமல்லபுரம்: “நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10, 12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கும் விழா இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடக்கிறது. இந்த விழாவில் முதற்கட்டமாக 88 தொகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசிய தவெக … Read more

வித்தியாசமாக பேசிய விஜய்… மாணவர்களிடம் முதல்முறையாக… கல்வி விருது விழா பரபர

Vijay Education Awards: 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இன்று பரிசளித்து வருகிறார். நிகழ்வில் அவர் பேசியதை இங்கு காணலாம்.

ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டு்ப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். சென்னை தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்துக்கான பூர்வாங்கப் பணிகளை நேற்று காலை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சென்னை, தீவுத்திடல், சத்தியவாணி முத்து நகரில் 4 தளங்களுடன் 19,464 சதுர அடி பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் … Read more

குன்னூர் காட்டேரி பூங்காவில் முதல்முறையாக மலை பயிர்கள் கண்காட்சி இன்று தொடக்கம்

குன்னூர்: நீல​கிரி மாவட்​டத்​தில் கோடை விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களான காய்​கறி கண்​காட்​சி, மலர்கள் கண்​காட்​சி, ரோஜா கண்​காட்சி மற்​றும் பழக்​கண்​காட்சி ஆகியவை நிறைவு பெற்​றுள்ளன. இந்​நிலை​யில், இறுதி நிகழ்ச்​சி​யாக குன்​னூர் காட்​டேரி பூங்​கா​வில் இந்த ஆண்டு முதல்​முறை​யாக மலைப் பயிர்​கள் கண்​காட்சி இன்று (மே. 30) தொடங்க உள்​ளது. இது தொடர்​பாக தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: மலைப் பயிர்​கள் கண்​காட்​சிக்​காக, காட்​டேரி பூங்​காவில் இரண்டு லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்டு அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளன. இது மட்​டுமில்​லாமல் … Read more

கமல்ஹாசனுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்? – சீமான் கேள்வி

விருதுநகர்: கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகரில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தற்போது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு … Read more

நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ், உடல்​நலக் குறை​வால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 75. அவரது உடலுக்கு முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். ஆளுநர் உட்பட பலரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி​யில் கடந்த 1949-ம் ஆண்டு பிறந்​தவர் ராஜேஷ். 1972-79 கால​கட்​டங்​களில் சென்​னை​யில் ஆசிரிய​ராக பணி​யாற்​றி​னார். இதற்​கிடையே, 1974-ம் ஆண்டு கே.​பாலசந்​தரின் ‘அவள் ஒரு தொடர்​கதை’ படத்​தில் நடிக​ராக அறி​முக​மா​னார். பின்​னர் ராஜ்கண்ணு தயாரிப்​பில் கே.​பாக்​ய​ராஜ் இயக்​கிய ‘கன்னி பரு​வத்​திலே’ … Read more

ராமதாஸ் குற்றச்சாட்டு எதிரொலி: நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் அன்புமணி – பாமகவில் நடப்பது என்ன?

விழுப்புரம்: ‘‘அன்புமணிக்கு பக்குவம், தலைமை பண்பு இல்லை. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. கட்சி பிரச்சினை பற்றி பேசிய தாய் மீது பாட்டிலை வீசி எறிந்தார். வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே கடந்த ஓராண்டாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த டிசம்பர் … Read more

17 மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை: கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு முன்கூட்டி, கடந்த 24-ம் தேதியே தொடங்கியது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், பிஹார், அசாம், பஞ்சாப்,ஹரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் தென்மேற்குபருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட … Read more