ராணுவத்தில் ஆள்சேர்க்க வெளிநாட்டினரை குறிவைக்கும் ரஷியா

மாஸ்கோ, உக்ரைன்-ரஷியா போர் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவி வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கும் அதன் நட்பு நாடான வடகொரியா சுமார் 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியது. ஆனால் மிக பரந்த நிலப்பரப்பை கொண்டுள்ள ரஷியாவுக்கு அதன் எல்லையை பாதுகாக்கும் அளவுக்கு போதுமான வீரர்கள் இல்லை. எனவே படிப்பு, வேலை நிமித்தம் அங்கு செல்லும் வெளிநாட்டினரை போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்தநிலையில் … Read more

ஏஐ மூலம் போலீசாரை ஏமாற்ற நினைத்த இளம்பெண்

வாஷிங்டன், இன்று தொழில்நுட்பம் பெருகிவிட்டது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வருகைக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகள் உண்மையா, பொய்யா என்று கண்டறிய முடியாத அளவுக்குச் சவாலாகி வருகின்றன. இன்று ஏஐ மூலம் நடக்காததை நடந்ததுமாறியாக நம்ப வைத்து ஒரு சிலர் ஏமாற்றி வருகின்றனர். இதை வைத்துக்கொண்டு குற்றங்களைப் புரியத் தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில் அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதில் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ப்ளோரிடாவில் … Read more

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கடல் பகுதியில் இன்று இரவு 7.45 மணிக்கு (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி … Read more

உக்ரைன் போர் நிறுத்த திட்டத்தை ரஷியா ஏற்றுக்கொண்டுள்ளது; அமெரிக்க ஜனாதிபதி

வாஷிங்டன், உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து … Read more

சீன போர் விமானத்தை விரட்டியடித்த ஜப்பான் ராணுவம்

டோக்கியோ, பசிபிக் கடற்பகுதியில் உள்ள ஒகினாவா தீவு அருகே ஜப்பானுக்கு சொந்தமான எப்-15 போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது சீன கடற்படை கப்பலான லியோனிங்கில் இருந்து புறப்பட்ட ஜே-15 என்ற போர் விமானம் அதன் அருகே சென்றது. பின்னர் ரேடார் மூலம் ஜப்பான் விமானத்தை தாக்க முயன்றது. இதனையடுத்து அங்கு விரைந்த ஜப்பானிய போர் விமானங்கள் அதனை விரட்டியடித்தன. சீனாவின் இந்த அத்துமீறலுக்கு ஜப்பான் ராணுவமந்திரி ஷின்ஜிரோ கொய்சுமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் … Read more

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு

தோஹா, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசாவில் 2 ஆண்டுகளாக நடந்து வந்த போர், சர்வதேச சமூகத்துக்கு பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாஸ்தீனர்கள் பலியானதுடன், உயிருடன் இருப்பவர்களுக்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினிச்சாவும் அதிகரித்தன. எனினும் நீண்ட இழுபறிக்குப்பிறகு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன. பின்னர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் … Read more

ஜெர்மனியில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

பெர்லின், உக்ரைன்-ரஷியா போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷிய டிரோன் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே ரஷியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ராணுவ பலத்தை பெருக்க அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை ராணுவ சேவையில் இணைக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த சேவை ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு தன்னார்வ அடிப்படையிலும் இருக்கும். போர் ஏற்படும் காலங்களில் இவர்கள் ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் … Read more

இங்கிலாந்தில் கைதியுடன் தகாத உறவில் இருந்த பெண் அதிகாரிக்கு சிறை

லண்டன், இங்கிலாந்தின் வெதர்பி நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சுமார் 200 தண்டனை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் அதிகாரியாக இருந்தவர் மேகன் கிப்சன். இவர் சிறையில் இருந்த ஒரு கைதியுடன் தகாத உறவில் இருந்ததாக சக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட புகார்களை அனுப்பினர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த கைதிக்கு சிறையில் போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை லீட்ஸ் கிரவுன் … Read more

புதின் இந்தியா வருகை எதிரொலி: ‘அந்தர் பல்டி’ அடித்த அமெரிக்கா

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடா்ந்து ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையை பின்பற்ற தொடங்கினார். மேலும் இந்தியா மீதான வன்மத்தை ஆரம்பம் முதலே தொடர்ந்தார். குறிப்பாக இந்தியா மீது அதிகபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரிவிதிப்பு, சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி இந்தியர்களை கைவிலங்கிட்டு நாடு கடத்தியது, இந்தியர்கள் அதிகம் பெறும் அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.90 லட்சமாக (1 மில்லியன் டாலர்கள்) உயர்த்தி அறிவித்தது உள்ளிட்ட பல்வேறு சங்கடங்களை கொடுத்தார். இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, … Read more

டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கிய பிபா அமைப்பு

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா–பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என்றும் டிரம்ப் எதிர்பார்த்தார். ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில், டிரம்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அமைதிக்கான பரிசை வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன்–ஜூலை … Read more