40 பேர் பலி… சுவிஸ் பாரில் வெடிவிபத்து… புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்

Switzerland Bar Blast: சுவிட்ஸர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2026-ம் ஆண்டு எப்படி இருக்கும்? நாஸ்டர்டாமஸ் கணிப்புகள் வெளியாகி பரபரப்பு

2025-ம் ஆண்டு முடிந்து 2026 தொடங்க உள்ளது. புதிய ஆண்டு என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை அறிய அனைவரும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஜோதிடர்கள் 2026-ம் ஆண்டில் வரவிருக்கும் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்கள். இந்த சூழலில் பிரபல பிரெஞ்சு ஞானி நாஸ்டர்டாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கணிப்புகள் வைரலாகி வருகின்றன. எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன … Read more

வங்காளதேசம்; மாணவர் இயக்க தலைவர் கொலையில் தேடப்படும் நபர் துபாயில் பதுங்கல்

டாக்கா வங்காளதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து போராட்டமும் வன்முறையும் வெடித்தன. இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். தொடர்ந்து இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.இதற்கிடையே, ஷெரீப் உஸ்மான் ஹாடியை கொன்றவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக வங்காளதேச இடைக்கால அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் தேடப்படும் பைசல் கரீம் … Read more

2026-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம் – அமெரிக்கா கணிப்பு

வாஷிங்டன், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குத லையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த நிலையில் 2026-ம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ஆயுத மோதல் ஏற்படும் என்று அமெரிக்க சிந்தனைக் குழு ஒன்று கணித்துள்ளது. க வுன்சில் ஆன் பாரின் ரிலேஷன்ஸ் அமைப்பு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அதிகரித்த பயங்கரவாதச் செயல்பாடு காரணமாக … Read more

வங்காளதேச முன்னாள் பிரதமர் உடல் அடக்கம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சி தலைவருமானவர் கலிதா ஜியா (வயது 80). இவர் இதயம், நுரையீரல் தொற்று உள்ளிட்ட உடல்நல பிரச்சினை காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, கலிதா ஜியா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளில் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேவேளை கலீதா ஜியாவின் மறையை தொடர்ந்து வங்காளதேசத்தில் 3 … Read more

டிஜிட்டல் தகவல் அதிகரிப்பு: அஞ்சல் சேவையை முழுவதுமாக நிறுத்தியது டென்மார்க் அரசு

கோபன்ஹென், டென்மார்க் நாட்டின் அரசு அஞ்சல் சேவை துறை தனது அனைத்து கடித வினியோகங்களையும் இன்றுடன் நிறுத்தி உள்ளது. 400 ஆண்டுகள் பழமையான தனது பொது சேவைகளில் ஒன்றான நாட்டின் அஞ்சல் நிறுவனமான போஸ்ட் நார்ட் தனது இறுதிக்கடித்தை வழங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய கடிதம் வினியோக சேவையை முடிவுக்கு கொண்டு வந்த உலகின் முதல் நாடாக டென்மார்க் உருவெடுத்துள்ளது. நாட்டு மக்கள் டிஜிட்டல் தகவல் தொடர்புகளை அதிகளவில் நம்பியிருப்பதால் அஞ்சல் சேவைகளில் மிகப்பெரிய … Read more

தம்பி மகனே மாப்பிள்ளை… பாகிஸ்தான் ராணுவ தளபதி மகள் திருமணம் – ரகசியமாக நடந்தது ஏன்?

Asim Munir Daughter Wedding: பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது மகளுக்கும், தனது இளைய சகோதரனின் மகன் அப்துல் ரஹ்மான் என்பவருக்கும் இடையே திருமணம் நடத்திவைத்துள்ளார்.

முற்றிய மோதல்.. வெனிசுலா துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்

வாஷிங்டன், வெனிசுலா நாட்டில், டிரென் டே அராகுவா என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்த துறைமுகப் பகுதியை அமெரிக்கப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி தகர்த்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “அவர்கள் (கடத்தல் கும்பல்) படகுகளில் போதைப்பொருட்களை ஏற்றினர், எனவே நாங்கள் அனைத்து படகுகளையும், அவர்கள் பயன்படுத்திய அந்தப் பகுதியையும் தாக்கி உள்ளோம். அது அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்த இடமாகும். அது இப்போது … Read more

நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஈரான் மத்திய வங்கி கவர்னர் ராஜினாமா

தெஹ்ரான், மத்திய கிழக்கு நாடான ஈரான், நாட்டின் நாணயமான ரியால் மதிப்பு சரிவு மற்றும் அதிக பணவீக்கத்துடன் போராடி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானிய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாட்டின் நாணயமான (ரியால்) மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து, சுமார் 13,90,000 ஆக புதிய சாதனை அளவிற்கு குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, … Read more

போதைப்பொருள் கடத்தி வந்ததாக படகு மீது அமெரிக்கா தாக்குதல் – 2 பேர் பலி

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக வெனிசுலா எல்லையில் போர் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. மேலும், வெனிசுலாவுக்கு சென்ற எண்ணெய் கப்பலையும் அமெரிக்க படைகள் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளன. அதேவேளை, கடல் வழியாக போதைப்பொருள் … Read more