மெலிஸ்சா புயலால் பாதித்த கியூபாவுக்கு நிவாரண உதவி: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி., கரீபியன் நாடுகளான ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளை கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் தாக்கிது. இதில், கியூபாவும் சிக்கியது. இதனால், 150 ஆண்டுகளில் இல்லாத வகையில் கியூபாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூறாவளி புயலால் தொடர் மழை, பலத்த காற்று ஆகியவற்றுடன் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் பேரிடர்களும் ஏற்பட்டன. வெள்ளம், நிலச்சரிவால் அந்நாடுகளின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா தரப்பில் இருந்து கியூபாவுக்கு … Read more

75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு

வாஷிங்டன், அமெரிக்காவில் பொது நலத்திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் ஈரான், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ரஷியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை தனது ‘எக்ஸ்‘ தள பக்க பதிவில் கூறியிருப்பதாவது:- “அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் சாரும் குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் … Read more

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் – டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, கிரீன்லாந்து உலகின் எட்டாவது பெரிய அரிதான கனிமங்களைக் கொண்டுள்ளது; அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயு, தங்கம், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்றவை அங்கு உள்ளன. சூப்பர் கண்டக்டர் சிப்புகள், மின்சார வாகனங்கள், பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவத் தொழில்நுட்பங்கள் தயாரிப்பதற்கு இந்த அரிதான கனிமங்கள் மிக அவசியமானவை. வகைப்படுத்தப்பட்ட 34 அரிதான கனிமங்களில், சுமார் 23க்கும் மேற்பட்ட அரிய கனிம வளங்கள் கிரீன்லாந்தில் உள்ளன. தற்போது, இந்தத் தனிமங்களின் … Read more

எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானியரை மணந்த சீக்கிய பெண் கைது

இஸ்லாமாபாத், குருநானக்கின் பிறந்தநாள் விழா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக 2 ஆயிரம் சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றனர். அதில் 48 வயதான சரப்ஜீத் கவுர் என்ற பெண்ணும் சென்றிருந்தார். திருவிழா முடிந்து சீக்கியர்கள் அனைவரும் இந்தியா திரும்பிய நிலையில், சரப்ஜீத் கவுர் மட்டும் திரும்பி வரவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானின் ஷேக்புரா மாவட்டத்தை சேர்ந்த நசீர் ஹுசைன் என்ற நபரை சரப்ஜீத் … Read more

இலங்கை எம்.பி. ஜீவன் தொண்டமான் பொங்கல் வாழ்த்து

கொழும்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் எம்.பி. வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில், தைப்பொங்கல் என்பது தமிழர்களால் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் உன்னதமான அறுவடை திருவிழாவாகும். இது “உழவர் திருநாள்” என்றும் அழைக்கப்படுகிறது. தைப்பொங்கல் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல; அது நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கையை போற்றும் மனப்பான்மையின் அடையாளமாக விளங்குகிறது. உழவர்களை கவுரவித்து, இயற்கையை வணங்கும் இந்த நன்னாளில் நாம் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ … Read more

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.50 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய … Read more

ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை

செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ஈரான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் அரசுக்கு எதிராக அதிருப்தி அடைந்துள்ள மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 17-வது நாளாக இன்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட … Read more

தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் பொங்கல் வாழ்த்து

சிங்கப்பூர், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தைத்திருநாளான நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரம்பரிய முறையில் புது மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். தமிழகத்தில் போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இதன்படி, இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் … Read more

ஈரான் வன்முறைக்கு யார் காரணம்? 2000 பேர் பலி! ட்ரம்ப்பின் 25% வரி மிரட்டல் -போர் மூளுமா?

USA Vs Iran: ஈரான் மீண்டும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தெருக்கள் பற்றி எரிகின்றன. கோபமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அமெரிக்க – ஈரான் இடையிலான போர் பதற்றம். 

கோஸ்டாரிகா ஜனாதிபதியை கொல்ல சதி திட்டம்; பெண் கைது

சான் ஜோஸ், கோஸ்டாரிகா நாட்டின் ஜனாதிபதி ரோட்ரிகோ சாவெஸ் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அவரை பணம் கொடுத்து கொல்ல முயற்சித்து உள்ளனர். இதுபற்றி அந்த நாட்டின் உளவு மற்றும் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவர் ஜார்ஜ் டாரெஸ் கூறும்போது, ரோட்ரிகோவை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. இதற்காக பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுபற்றி நம்பத்தகுந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது என்றார். இதேபோன்று அந்நாட்டின் அட்டார்னி ஜெனரல் கார்லோ டயஸ் நிருபர்களிடம் கூறும்போது, சந்தேகத்திற்குரிய … Read more