இந்தியாவை தாக்க 1000+ தற்கொலை படையினர்… உலகமே நடுங்கும் – பாகிஸ்தான் பயங்கரவாதி பகீர்

Masood Azhar: பாகிஸ்தான் பயங்கரவாத தலைவர் மசூத் அசார், இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயாராக இருப்பதாக ஆடியோ ஒன்றில் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மீண்டும் இந்தியா மீது தாக்குதலா…? அம்பலமான பாகிஸ்தானின் பிளான்!

Geopolitics: காசா மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு என கூறி பெரும் நிதி திரட்டலில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை குறி வைத்து அமெரிக்கா கடுமையான தாக்குதல்

நியூயார்க், சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பல்மைரா நகரில் கடந்த மாதம் நடந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் மற்றும் அமெரிக்க குடிமகன் ஒருவர் என 3 பேர் பலியானார்கள். இந்த நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை … Read more

கடவுளுக்கு எதிராக போர் செய்கிறீர்கள்; போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

தெஹ்ரான், ஈரான் நாட்டின் தலைவராக அயோதுல்லா அலி காமேனி இருந்து வருகிறார். அந்நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 13 நாட்களாக இந்த ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது. … Read more

வெனிசுலா அதிபரை போல புதினை கடத்த திட்டமா? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்து வரும் அமைதி ஒப்பந்தங்களை ஏதேதோ காரணங்கள் கூறி ரஷிய அதிபர் புதின் நிராகரித்து வருகிறார். இதனால் போர் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. அண்மையில், வெனிசுலா நாட்டிற்குள் அமெரிக்கா ராணுவத்துறையினர் அதிரடியாக நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை மனைவியுடன் … Read more

துப்பாக்கி முனையில் பலாத்கார முயற்சி; சிறுமி, பாதிரியார் உள்பட 6 பேர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் கொடூரம்

மிஸ்ஸிஸிப்பி, அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் ஜாக்சன் பகுதியில் இருந்து 150 மைல்கள் வடமேற்கே வெஸ்ட் பாயிண்ட் என்ற இடத்திற்கு மேற்கே செடார்பிளப் என்ற இடத்தில் வசித்து வரும் 24 வயது வாலிபர் ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மாமா மற்றும் சகோதரரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, சகோதரரின் காரை திருடி கொண்டு, பிளேக் ரோடு பகுதியில் சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியில் துப்பாக்கி முனையில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய … Read more

டிரோன் மூலம் கண்காணித்ததாக குற்றச்சாட்டு – தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா

பியாங்யாங், வடகொரியா, தென்கொரியா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ள நிலையில், எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. வடகொரியாவை மிரட்டும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தங்கள் வான் எல்லைக்குள் டிரோன்களை அனுப்பி முக்கிய ராணுவ தளங்களை கண்காணித்ததாக தென்கொரியா மீது வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக வடகொரிய ராணுவம் … Read more

கரீபியன் கடல் பகுதிகளில் மற்றொரு எண்ணெய் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

வாஷிங்டன் டி.சி., வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என கூறி அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை டிரம்ப் அரசு கைது செய்தது. நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து சில நாட்களுக்கு முன் நாடு கடத்தப்பட்டனர். கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதலை நடத்தவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் டிரம்ப் அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. … Read more

‘1 கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் எனக்கு நன்றி கூறினார்’ – டிரம்ப் மீண்டும் பேச்சு

வாஷிங்டன், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறினார். ஆனால் அவரது பேச்சை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், 1 கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் தனக்கு நன்றி கூறினார் என்று டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது;- “பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவுக்கு வந்தபோது, … Read more

விசுவாசத்துடன் உள்ள கூட்டணி நாடுகளை அமெரிக்கா மிரட்டுவது அதிர்ச்சி தருகிறது: டென்மார்க் எம்.பி.

கோபன்ஹேகன், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து சில நாட்களுக்கு முன் நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரின் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. … Read more