உக்ரைனின் ஒடேசா பகுதியில் ரஷியா டிரோன் தாக்குதல் – 6 பேர் படுகாயம்

கீவ், உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் ஒடேசா பகுதியில் ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நகரில் உள்ள எரிசக்தி கட்டமைப்பை குறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. … Read more

உக்ரைன் போர் விவகாரம்: அமெரிக்க அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது – புதின்

மாஸ்கோ, உக்ரைன்-ரஷியா போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர், மியாமி நகரில் இன்று உக்ரைன் அரசு செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கிடையில், அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் ரஷிய அதிபர் புதின் சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து புதின் கூறுகையில், உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் நடத்திய … Read more

கொலை செய்துவிட்டு தலைமறைவான இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி – அமெரிக்கா அறிவிப்பு

நியூயார்க், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38 வயது) என்பவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிசை கொன்றுவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து அமெரிக்கா புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவர் இந்தியாவில் பதுங்கி இருப்பதாக துப்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்தியாவில் பதுங்கி இருக்கும் நசீர் ஹமீது குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் (50 ஆயிரம் டாலர்கள்) … Read more

என்னை கொல்ல ராணுவம் முயற்சி – இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் 5 சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது … Read more

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி

லாகூர், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பாகும். இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் நகர் அருகே சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. … Read more

மர்ம சூட்கேஸ் முதல் போலி புதின் வரை… ரஷ்ய அதிபரின் வருகையில் கவனிக்க வேண்டிய 10 ரகசியங்கள்!

Vladimir Putin India Visit: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகையை முன்னிட்டு, அவரது பாதுகாப்பு வளையத்தில் கவனிக்க வேண்டிய 10 ரகசியங்களை இங்கு விரிவாக காணலாம். 

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 5.5 கோடி பேர் பாதிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம் இருக்கும். அந்த சமயத்தில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். இந்த நிலையில் அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பனிப்புயல்கள் தாக்கின. தற்போது 3-வது பனிப்புயல் உருவாகி இருக்கிறது. இந்த புதிய பனிப்புயல் அதி தீவிர பனிப்புயலாக மாறி உள்ளது. இந்த அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி … Read more

பாகிஸ்தானில் 200 சதவீதம் எச்.ஐ.வி அதிகரிப்பு

இஸ்லாமாபாத், உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தகவலின்படி, கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் மிக வேகமாக வளர்ந்து வரும் எச்.ஐ.வி. தொற்றுநோய்களில் ஒன்றை பாகிஸ்தான் தற்போது எதிர்கொண்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில், புதிய எச்.ஐ.வி. தொற்றுகளின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்து, 2010-ல் 16,000 ஆக இருந்தது, 2024-ல் 48,000 ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்பற்ற ஊசி நடைமுறைகள், இரத்த மேலாண்மை குறைபாடுகள், மற்றும் பாதுகாப்பற்ற பாலியல் உறவு முறை போன்ற காரணங்களால் இந்த அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

உயிரியல் பூங்காவில் தடுப்புச் சுவரை தாண்டி குதித்த வாலிபரை தாக்கி கொன்ற சிங்கம்

பிரேசிலியா, பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. அங்கு சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இதனை காண நண்பர்கள் சிலர் அங்கு சென்றிருந்தனர். அதில் மச்சாடோ (வயது 20) என்ற வாலிபர் ஆர்வ மிகுதியில் தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு மரம் வழியாக கீழே இறங்க முயன்றார். அப்போது அங்கிருந்த ஒரு சிங்கம் அவரை தாக்கி இழுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த மச்சாடோ … Read more

ரஷிய கப்பல்கள் மீது தாக்குதல்… உக்ரைனை கடலில் இருந்தே துண்டித்து விடுவோம்: புதின் மிரட்டல்

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், கருங்கடலில் சென்று கொண்டிருந்த ரஷியாவின் 2 கப்பல்களை கடந்த வாரத்தில், நீருக்கடியில் இருந்து ஆளில்லா விமானம் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது ரஷியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளார். இந்நிலையில், ரஷியாவின் முன்னணி செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், உக்ரைனை கடலில் இருந்தே … Read more