தென் ஆப்பிரிக்கா: ரஷிய ராணுவத்துக்கு ஆள்சேர்க்க முயன்ற 4 பேர் கைது

மாஸ்கோ, உக்ரைன்-ரஷியா போர் கடந்த 3½ ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனை எதிர்த்து போரிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்களை ரஷியா ஈடுபடுத்தியது. இது தவிர தென் ஆப்பிரிக்கா உள்பட பிற நாடுகளில் இருந்தும் ரஷிய ராணுவத்தில் வீரர்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரஷியாவுக்கு ஆதரவாக போரிட சென்ற 17 தென் ஆப்பிரிக்கர்கள் உக்ரைனில் சிக்கி கொண்டனர். இதில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகன் ஜுமா-சம்புட்லா எம்.பி.க்கு தொடர்பு இருப்பதாக … Read more

ஹாங்காங் தீ விபத்து; பலி எண்ணிக்கை 146 ஆக உயர்வு

ஹாங்காங், ஆசியாவில் அமைந்துள்ள நாடு ஹாங்காங். இதை தங்கள் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியாக சீனா கருதுகிறது. இதனிடையே, ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடியில் 1 ஆயிரத்து 984 வீடுகள் உள்ளன. இதில்சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகே மேலும் சில அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இந்த அடுக்குமாடி … Read more

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 70,100 ஆக உயர்வு

காசா, இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணய கைதிகளை இஸ்ரேல் மீட்டது. அதே சமயம் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து … Read more

பார்த்த முதல் நாளே டும் டும் டும்… அடுத்த 18 நாளில் ரூ.30 லட்சம் காலி – கவலையில் கணவன்!

World Bizarre News: ஒரு பெண்ணை பார்த்தே அன்றே திருமணம் செய்துகொண்ட 40 வயது நபர், வெறும் 18 நாள்களில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பணத்தை பறிகொடுத்திருக்கிறார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம். 

தென் ஆப்பிரிக்காவுக்கான மானியங்கள் ரத்து – டிரம்ப் அதிரடி

வாஷிங்டன், தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். எனவே தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்தது. இந்தநிலையில், அடுத்த ஆண்டுக்கான ஜி-20 மாநாடு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என … Read more

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 303 ஆக உயர்வு

ஜகர்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது. … Read more

62வது வயதில் காதலியை திருமணம் செய்த ஆஸி. பிரதமர்

கென்பரா, ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பனிஸ் (வயது 62). இவர் 2000ம் ஆண்டு கார்மல் மெரி டெம்பட் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே, கடந்த 2019ம் ஆண்டு அந்தோணி அல்பனிஸ் – கார்மல் தம்பதி விவாகரத்து பெற்றனர். அதேவேளை, 2020ம் ஆண்டு பிரதமர் அந்தோணி அல்பனிஸ் ஜோடி ஹைய்டன் (வயது 47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது இந்நிலையில், காதலி ஜோடி ஹைய்டனை பிரதமர் … Read more

வெனிசுலா வான்பரப்பை பயன்படுத்த வேண்டாம்; விமான நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி … Read more

டிட்வா புயலால் விமான சேவைகள் பாதிப்பு; 3 நாட்களாக இலங்கையில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்

கொழும்பு, ‘டிட்வா’ புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. ‘டிட்வா’ புயலின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், மணிக்கு 10 கி.மீ வேக்த்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து வடக்கு – வடமேற்கில் நகர்ந்து நாளை (நவ.30) காலை வட தமிழ்நாட்டை நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டிட்வா புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் … Read more

சவப்பெட்டியில் இருந்து வந்த சத்தம்! இறந்த பெண் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்..

Thai Woman Found Alive In Coffin : ஒரு பெண், இறந்ததாக சவப்பெட்டியில் வைக்கப்பட்டதை அடுத்து, கதவை தட்டி வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.