பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

கேப்டவுன், இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 உள்ளது. இதனிடையே, ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க்கில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, அனைவரையும் உள்ளடக்க்கிய நிலையான பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் … Read more

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

பீஜிங், சீனாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 6.25 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.71 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 98.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. EQ of M: 4.1, On: … Read more

தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்

கேப்டவுன், இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 உள்ளது. இதனிடையே, ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில், அந்த அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா தலைமையில் இந்த உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் … Read more

‘மம்தானி சிறப்பாக பணியாற்றுவார்’ – இந்திய வம்சாவளி மேயரை புகழ்ந்த டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே எரிக் ஆடம்ஸ் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய மேயரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானியும் (வயது 34), குடியரசு கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவும் முன்னிலை வகித்து வந்தனர். மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க் மேயர் தேர்தல் அமெரிக்க அரசியலிலும் … Read more

படுத்திருந்தே ரூ.37,000 சம்பாதித்த இளைஞர்.. இதுபற்றி தெரியுமா?

World Laziest Man: 33 மணி நேரம் படுத்திருந்தே இளைஞர் ஒருவர் ரூ.37,000 பரிசு பெற்றுள்ளார். சீனாவில் நடந்த உலக சோம்பேறி மனிதனுக்கான போட்டியில், இளைஞர் வெற்றி பெற்று ரூ.37,000 பெற்றார்.

ஸ்காட்லாந்தில் கடும் பனிப்பொழிவால் 100 பள்ளிகள் மூடல்

எடின்பர்க், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. எனவே சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக மாறின. அப்போது சாலையில் நடந்து சென்ற 2 பேர் மீது கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் அபெர்டீன்ஷையர் நகர சாலையில் சென்ற மாடி பஸ் பனிக்கட்டிகளுக்கு இடையே சிக்கி கொண்டது. மீட்பு படையினர் அந்த பனிக்கட்டிகளை அப்புறப்படுத்திய பிறகே பஸ் … Read more

பாகிஸ்தான்: தொழிற்சாலையில் வெடி விபத்து – 16 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரின் மாலிக்பூர் பகுதியில் பசை தயாரிப்பு தொழிற்சாலை (glue making factory) உள்ளது. இந்த தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்டோர் இன்று வழக்கமான பணியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று பாயிலர் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த … Read more

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்.

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 12:59 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 170 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.40 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், இரவு 9.33 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவில் மீண்டும் … Read more

தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி; ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்…!

கேப்டவுன், ஜி20 அமைப்பின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் ஜோகனர்ஸ்பர்க் நகர் சென்ற பிரதமர் மோடிக்கு தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி20 உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பங்கேற்கும் பிரதமர் மோடி காலநிலை … Read more

வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ; 4 பேர் பலி

டாக்கா, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணிக்கு அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். … Read more