ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஜோகன்னஸ்பர்க், ஜி20 உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, போதைப்பொருள்-பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் பரிந்துரைகளை வழங்கினார். நேற்று நடந்த இந்த மாநாட்டின் 3-வது அமர்விலும் பிரதமர் மோடி பேசினார். ‘அனைவருக்கும் நியாயமான மற்றும் சமமான எதிர்காலம் – முக்கியமான கனிமங்கள்; ஒழுக்கமான வேலை; செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் நடந்த … Read more

சவுதி, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 17 பேருக்கு மரண தண்டனை விதித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

சனா, இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இந்த போரில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவு அளித்தனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம், நிதி உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதனிடையே, போரின் போது இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலர் உயிரிழந்தனர். அதேவேளை, இந்த மோதலுக்குப்பின் இஸ்ரேல், சவுதி , அமெரிக்கா ஆகிய … Read more

வியட்நாமில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

ஹனோய், ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் குவாங் நாம், தாக்லாங், கான் ஹோவா உள்பட 5 மாகாணங்களில் கடந்த வாரம் முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆயிரத்திற்கும் … Read more

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

கீவ், உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 368வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, போரை முடிவுக்கு கொண்டு வர 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி முன் மொழிந்துள்ளார். அந்த நிபந்தனைகள் தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுடன் உக்ரைன் … Read more

பிரதமர் மோடி – தென் ஆப்பிரிக்க அதிபர் பேச்சுவார்த்தை

கேப்டவுன், 3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். அவர் நேற்று ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பிரதமர் மோடி இன்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தென் ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்புகிறார். 1 More update தினத்தந்தி Related … Read more

பிரேசிலில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் கைது

பிரேசிலியா, பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் பொல்சனாரோ (வயது 70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். இதில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வியடைந்ததை பொல்சனாரோ ஒப்புக்கொள்ளவில்லை. எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். … Read more

பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

கேப்டவுன், இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 உள்ளது. இதனிடையே, ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க்கில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, அனைவரையும் உள்ளடக்க்கிய நிலையான பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் … Read more

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

பீஜிங், சீனாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 6.25 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.71 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 98.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. EQ of M: 4.1, On: … Read more

தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்

கேப்டவுன், இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 உள்ளது. இதனிடையே, ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில், அந்த அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா தலைமையில் இந்த உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் … Read more

‘மம்தானி சிறப்பாக பணியாற்றுவார்’ – இந்திய வம்சாவளி மேயரை புகழ்ந்த டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே எரிக் ஆடம்ஸ் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய மேயரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானியும் (வயது 34), குடியரசு கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவும் முன்னிலை வகித்து வந்தனர். மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க் மேயர் தேர்தல் அமெரிக்க அரசியலிலும் … Read more