ஈரான் தொடர் தாக்குதல்: வெறிச்சோடிய இஸ்ரேல் நகரங்கள் – நிலவரம் என்ன?

டெல் அவிவ்: ஈரான் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் கொத்து குண்டுகளையும் ஈரான் ராணுவம் வீசி வருகிறது. கிளஸ்டர் குண்டு எனப்படும் ஒரு கொத்து குண்டில் சுமார் … Read more

அமெரிக்காவில் கிலாவியா எரிமலை வெடிப்பு – 1,000 அடி உயரத்திற்கு வெளியேறும் தீக்குழம்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. தீவிர செயல்பாட்டில் உள்ள எரிமலையான இது, சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது. கடைசியாக கடந்த 11-ந்தேதி இந்த எரிமலை வெடித்தது. இந்த நிலையில், கிலாவியா எரிமலை தற்போது மீண்டும் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது. இந்த வெடிப்பால் எரிமலையில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறி வருகிறது. அதில் இருந்து வெளியேறும் சாம்பல், அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்கா மீது … Read more

தாக்குதல் தொடர்ந்தால்.. 'இன்னும் பேரழிவு தரும்' பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

டெல்அவிவ், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறி, அந்த நாடு மீது கடந்த 13-ந்தேதி முதல் இஸ்ரேல் தாக்கி வருகிறது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், அணு விஞ்ஞானிகள் என அணுசக்தி துறையை குறி வைத்து தாக்கியது. அத்துடன் அந்த நாட்டின் ராணுவ நிலைகள், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் என பிற பகுதிகளையும் தங்கள் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகிறது. தங்கள் போர் விமானங்கள் மூலம் ஈரான் முழுவதும் பரவலாக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை … Read more

அமெரிக்கா போட்ட குண்டுகள்… ஈரானின் 3 அணுஉலைகள் துவம்சம் – போரில் இணைந்த டிரம்ப்!

Israel Iran Conflict: ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், இஸ்ரேலுடன் இந்த போரில் அமெரிக்காவும் கைக்கோர்ப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார். 

ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்களை தாக்கியது அமெரிக்கா: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: “ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். இப்போது அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன. முதன்மை தளமான ஃபோர்டோவில் குண்டுகள் முழுமையாக … Read more

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

துசான்பே, தஜிகிஸ்தானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.36 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 140 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.21 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 72.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 1 More update தினத்தந்தி Related Tags … Read more

ஈரான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 3 மூத்த தளபதிகள் உயிரிழப்பு

ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல், ஈரான் இடையே நேற்று 9-வது நாளாக போர் நீடித்தது. ஆரம்பம் முதலே ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் … Read more

அமெரிக்காவை நம்ப முடியாது: ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கருத்து

அமெரிக்காவை நம்ப முடியாது. அணு சக்தி தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். இஸ்ரேல், ஈரான் போர் தொடர்பாக அரபு நாடுகள் கூட்டமைப்பின் (அரபு லீக்) அவசர ஆலோசனை கூட்டம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் சவுதி அரேபியா, எகிப்து, இராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 22 நாடுகள் உள்ளன. அரபு நாடுகள் கூட்டமைப்பு கூட்டத்தில் … Read more

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அணு ஆயுத சோதனை நடத்தியதாக சந்தேகம்

வடக்கு ஈரானில் உள்ள செம்னான் பகுதியில், நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியதால், ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. வடக்கு ஈரானில் செம்னான் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்துக்கு தென்மேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன்தினம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் லேசான … Read more

“ஏவுகணைகள், குண்டுகளை கண்டு பயந்து போனோம்” – ஈரானில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் அனுபவ பகிர்வு

புதுடெல்லி: “எங்களைச் சுற்றி ஏவுகணைகளும், குண்டுகளும் விழுவதைக் கண்டு பயந்துபோனோம். அந்த நாட்களை மீண்டும் ஒருபோதும் பார்க்க மாட்டோம் என நம்புகிறேன்” என்று ஈரானிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து ஆர்மீனியா நாட்டுக்கு தரைவழியாக அழைத்துவரப்பட்ட 110 இந்திய மாணவர்கள் இன்று (ஜூன் 19) அதிகாலையில் விமானம் மூலம் டெல்லியை அடைந்தனர். ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் ஜம்மு காஷ்மீரைச் … Read more