ரஷ்யாவில் பதற்றம்: மாஸ்கோவில் உக்ரைன் வான்வழி தாக்குதல்?
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய வான்வழி தாக்குதலினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைன் இன்று அதிகாலை மாஸ்கோவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியது. 8 ஏவுகணைகள் மாஸ்கோவை தாக்கின. எனினும் நாங்க அந்தத் தாக்குதலை இடைமறித்தோம். பல கட்டிடங்கள், வாகனங்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று தெரிவித்தது. ஆனால், “நாங்கள் வான்வழி தாக்குதலை நடத்தவில்லை. எனினும், இம்மாதிரியான தாக்குதல் மகிழ்ச்சி தருகிறது” என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. … Read more