துருக்கி அதிபர் தேர்தல் 2023: மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எர்டோகன்

அங்காரா: துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த மறு தேர்தலில் அவர் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார். 69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன்பிறகு தற்போது வரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி … Read more

சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருகிறது – அமைச்சர் ஜெய்சங்கர்!

சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இருநாட்டு நல்லுறவு என்பது சமநிலையில் ஏற்பட வேண்டும் என்றும் அடுத்த நாட்டின் விருப்பம் போல அமைய முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அனந்த் தேசிய பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய ஜெய்சங்கர், கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவுடனான எல்லைப் பிரச்சினை வெளிப்படையாக உள்ளது என்றார்.எல்லையில் அமைதி குறைந்தால் இருநாடுகளின் நல்லுறவு நீடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். எல்லையில் முந்தைய … Read more

பாகிஸ்தானில் பனிச்சரிவு – நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் சம்பெலி பகுதியில் உள்ள ஷவுண்டர் மலைப்பாதை ஆசாத் காஷ்மீர் எல்லைப்பகுதியையும், கில்ஜித் பகுதியின் அஸ்டோர் மாவட்டத்தையும் இணைக்கிறது. இந்த பாதையை நாடோடி பழங்குடி இன மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஷவுண்டர் மலைப்பாதையில் இன்று திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தினத்தந்தி Related … Read more

துருக்கி தேர்தல்… 20 வருட கால அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும் எர்டோகன்!

உலக நாடுகள் துருக்கி தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. காரணம் துருக்கி நேட்டோ நாடுகளின் ஒரு அங்கம் என்பதுடன், அதன் நிலப்பரப்பு அமைந்துள்ள இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. துருக்கி இஸ்லாமிய நாடுகளில், ஜனநாயகம் உள்ள ஒரே நாடு என்று கூறப்பட்டாலும்,  ஒருவிதமான சர்வாதிகாரம் கொண்ட நாடு தான். 

பல்கலை பட்டமளிப்பு விழாவில் 2,500 பட்டதாரி மாணவர்களுக்கு தலா 1,000 அமெரிக்க டாலர் பரிசு.. அசத்திய அமெரிக்க கோடீஸ்வரர்..!

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அமெரிக்க கோடீஸ்வரர் ராபர்ட் ஹேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டம் பெற்ற 2 ஆயிரத்து 500 பட்டதாரி மாணவர்களுக்கு தலா ஆயிரம் டாலர் பரிசாக வழங்கினார். மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், Granite Communications நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் ஹேல் பங்கேற்று, சிறப்புரையாற்றி பட்டம் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து, பட்டதாரி மாணவர்களுக்கு தலா 500 டாலர் கொண்ட இரு கவர்களை பரிசாக வழங்கினார். அந்த … Read more

எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டவை ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி … Read more

ஏழை, எளியவர்களும் எளிதாக பயணிக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை இந்தியாவிலும் வரவேண்டும்: ஜப்பானில் புல்லட் ரயிலில் சென்ற முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

சென்னை: ஜப்பானின் ஒசாகாவில் இருந்து தலைநகர் டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இதற்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வரவேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து. அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் சென்றுள்ளார். சிங்கப்பூரில் … Read more

அழகால் வந்த ஆபத்து; பூஞ்சை பரவலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க அமெரிக்கா, மெக்சிகோ வலியுறுத்தல்

வாஷிங்டன், அமெரிக்காவின் 24 மாகாணங்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்கு மெக்சிகோ நாட்டை சேர்ந்த 2 மருத்துவ மையங்களில் அழகுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. எனினும், அவர்களில் பலருக்கு கொடிய பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது. அந்த நோயாளிகளில் 2 பேர் உயிரிழந்து விட்டனர். அவர்களில் ஒருவர் உறுப்பு நன்கொடையும் வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) உடனடியாக, தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. மெனிங்கிடிஸ் … Read more

அபுதாபியில் ஐ.ஐ.எஃப்.ஏ. விருதுகள் – நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது..!

அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைத்துறையின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். திரைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்கான சாதனையாளர் விருதை கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார். நிகழ்ச்சியில், திரிஷ்யம் 2 படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது. விக்ரம் வேதா படத்திற்காக சிறந்த நடிகராக ஹிருத்திக் ரோஷனுக்கும், கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக சிறந்த நடிகையாக ஆலியா பட்டுக்கும் விருது வழங்கப்பட்டது. விழா … Read more

போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீன பயணிகள் விமானம்…!

பிஜீங், போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய 2 நிறுவனங்களும் பயணிகள் விமான தயாரிப்பில் முன்னிலையில் உள்ளன. உலகில் செயல்பாட்டில் உள்ள பயணிகள் விமானங்கள் பெரும்பாலும் இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்பே ஆகும். இந்நிலையில், போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக சீனா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தை களமிறக்கியுள்ளது. சி919 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயணிகள் விமானம் இன்று வெற்றிகரமாக முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளது. 164 இருக்கைகளை கொண்ட இந்த விமானம் இன்று ஷாங்காயில் இருந்து 128 பயணிகளுடன் புறப்பட்டு … Read more