பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள்களுடன் அத்துமீறி நுழைந்த டிரோனை சுட்டு வீழ்த்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்!

பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்களுடன் இந்திய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் ஒன்றை அமிர்தசரஸ் அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த மூன்று கிலோ 200 கிராம் உயர்ரக ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் டிரோன் மூலமாக போதைப் பொருள் கடத்தலின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   Source link

துருக்கியில் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அதிபர் எர்டோகன்..!

துருக்கியில், அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் தயீப் எர்டோகன் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார். மே-14 அன்று நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில், அந்நாட்டு சட்டப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், நேற்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 69 வயதான அதிபர் தயீப் எர்டோகன் 52.14 சதவீத வாக்குகளை பெற்றதாவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெமால் கிலிக்டரொலு 47.86 % வாக்குகளை பெற்றதாகவும் அந்நாட்டு … Read more

Tamil Nadu is a state with a lot of talent: Chief Minister Stalins speech in Japan | திறமைசாலிகள் அதிகம் உள்ள தமிழகம்: ஜப்பானில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ‛நிறுவனங்களுக்கு மிகச்சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், அதனை ஜப்பானிய நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றும் பேசினார். சென்னையில் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கிலும், முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்து தற்போது ஜப்பானில் உள்ள … Read more

அதிபர் தேர்தல் | மீண்டும் எர்டோகன் வென்றிருக்கிறார்… ஆனால் துருக்கி மாறியிருக்கிறது!

அங்காரா: துருக்கியை 21 ஆண்டுகள் ஆட்சி செய்த எர்டோகன் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்கான ஆட்சி பொறுப்பை ஏற்கவுள்ள எர்டோகனின் வெற்றியை அடுத்து அவரது ஆதரவாளர்கள் தலைநகர் அங்காரா உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் 5 சதவீத ஓட்டு வித்தியசாத்தியத்தில் அதிபர் பதவிக்கான வெற்றியை தவறவிட்ட துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லு, எர்டோகனின் வெற்றியை ”நியாயமில்லாத தேர்தல்” என்று … Read more

பெலாரஸ் அதிபர் லுக்காஷென்கோவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பாதிப்பு!

பெலாரஸ் அதிபர் லுக்காஷென்கோ மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து திரும்பும் போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பெலாரசின் எதிர்க்கட்சித் தலைவரர் வலேரி செப்காலோ தெரிவித்துள்ளார்.அவரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில்,அவரது உடல் நலம் பற்றிய வதந்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. பெலாரசின் சர்வாதிகாரத் தலைவரான 68 வயதான லுக்காஷென்கோ அதிபர் புதினின் நம்பகமான நெருங்கிய நண்பராகக் கருதப்படுகிறார். அணு ஆயுதங்களை அண்மையில் … Read more

தரையிறங்கும் போது திடீரென வெடித்த விமானத்தின் சக்கரங்கள்.. எகிப்து ஏர் விமானத்தில் பரபரப்பு..!

சவூதி அரேபியாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த எகிப்து ஏர் விமானத்தின் சக்கரங்கள் தரையிறக்கும்போது அதன் சக்கரங்கள் திடீரென வெடித்ததால் பரபரப்பு நிலவியது. ஆயினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் உயிர்தப்பினர். கெய்ரோவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சவூதியின் கடற்கரை நகரான ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அசீஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் தரையிறங்கியது. Source link

துருக்கி அதிபர் தேர்தல் 2023: மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எர்டோகன்

அங்காரா: துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த மறு தேர்தலில் அவர் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார். 69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன்பிறகு தற்போது வரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி … Read more

சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருகிறது – அமைச்சர் ஜெய்சங்கர்!

சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இருநாட்டு நல்லுறவு என்பது சமநிலையில் ஏற்பட வேண்டும் என்றும் அடுத்த நாட்டின் விருப்பம் போல அமைய முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அனந்த் தேசிய பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய ஜெய்சங்கர், கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவுடனான எல்லைப் பிரச்சினை வெளிப்படையாக உள்ளது என்றார்.எல்லையில் அமைதி குறைந்தால் இருநாடுகளின் நல்லுறவு நீடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். எல்லையில் முந்தைய … Read more

பாகிஸ்தானில் பனிச்சரிவு – நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் சம்பெலி பகுதியில் உள்ள ஷவுண்டர் மலைப்பாதை ஆசாத் காஷ்மீர் எல்லைப்பகுதியையும், கில்ஜித் பகுதியின் அஸ்டோர் மாவட்டத்தையும் இணைக்கிறது. இந்த பாதையை நாடோடி பழங்குடி இன மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஷவுண்டர் மலைப்பாதையில் இன்று திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தினத்தந்தி Related … Read more