MTB குரோஷியா சைக்கிள் பந்தயம்.. கரடு முரடான மலைப்பாதையில் சீறிப்பாய்ந்த சைக்கிள்கள்..!

குரோஷியாவில், கரடு முரடான மலைப்பகுதியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குரோஷியாவிற்குச் சொந்தமான 4 தீவுகளில், கடந்த 5 நாட்களாக இந்த சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. அணிக்கு 2 வீரர்கள் வீதம், 291 கிலோமீட்டர் தொலைவு நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில், ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும், ஜெர்மனி நாட்டு வீரர், வீராங்கனைகள் முதலிடம் பிடித்து வாகை சூடினர். Source link

தொலைதூர இலக்குகளைத் தாக்கும் ஆயுதங்களை வாங்க திட்டம் – ஆஸ்திரேலிய பிரதமர்

தொலைதூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்கப் போவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ் கூறியுள்ளார். அந்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அல்பனிஸ், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா – சீனா இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவித்தார். Source link

ஆரோக்கியமான குழந்தை எது? ஜப்பானில் நடந்த நுாதன போட்டி!| What is a healthy child? Modern competition in Japan!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ : ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் வகையில், ‘கிரையிங் சுமோ’ என்ற போட்டி ஜப்பானில் நேற்று நடந்தது. கிழக்காசிய நாடான ஜப்பானில், ‘கிரையிங் சுமோ’ எனப்படும் குழந்தைகளை அழ வைக்கும் போட்டி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த போட்டி நேற்று மீண்டும் நடத்தப்பட்டது. டோக்கியோ நகரின் சென்சோஜி கோவிலில் நடந்த இந்த போட்டியில், 6 – 18 மாத குழந்தைகள் பங்கேற்றனர். … Read more

‘சாப்பிடாமல் இருந்தால் சொர்க்கம்’ – பாதிரியாரின் பேச்சைக் கேட்டு கென்யாவில் பறிபோன 47 உயிர்கள்!

நைரோபி: கென்யாவில் உணவு உண்ணாமல் இருந்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று கூறிய பாதிரியாரின் ஆலோசனையால் 47 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் கடலோர நகரமான மலிந்திக்கு அருகில் உள்ள ஷகாஹோலா காட்டுப் பகுதியில் குவியல் குவியலாக பிணங்களை போலீஸார் கண்டெடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்துக்கு செல்முடியும் என்ற கருத்தை அப்பகுதி மக்களுக்கு பாதிரியார் பால் மெக்கன்சி என்பவர் ஆலோசனை வழங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாதிரியாரின் … Read more

ஜெய வாரியர்-2023 என்ற பெயரில் இங்கிலாந்து ராணுவத்துடன் இணைந்து இந்திய ராணுவம் போர் பயிற்சி

இங்கிலாந்துடன் இணைந்து போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு பயிற்சி வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இரு நாட்டு வீரர்களும் ஒருங்கிணைந்து பயிற்சி செய்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜெய வாரியர்-2023 என்ற பெயரில் 7ம் ஆண்டாக நடைபெற உள்ள பயிற்சியை முன்னிட்டு இந்த வீடியோ இந்திய ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. Source link

டிஸ்னிலேண்டில் தீ விபத்து | Fire at Disneyland

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் டாம் சயர் தீவில் உள்ள அனாஹேய்ம்மில் டிஸ்னிலேண்டிற்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இதில் உள்ள ஹோட்டலில் ‘பேண்டமிக்’ என்ற நாடக நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடந்து கொண்டிருந்து. அப்பொழுது ஹோட்டலின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காயமோ, உயிர் பலியோ ஏற்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து … Read more

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு

கெர்மடெக், நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தினத்தந்தி Related Tags : நியூசிலாந்து நிலநடுக்கம்

கென்யாவில் பாதிரியார் நிலத்தில் தோண்ட தோண்ட சடலங்கள்| Excavated corpses dug up on priests land in Kenya

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நைரோபி: கென்யாவில் பாதிரியார் ஒருவரது பண்ணையில் தோண்ட தோண்ட சடலங்களாக வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெகன்சி என்பவர் உள்ளார். அவருக்கு சொந்தமான பண்ணையில் 15க்கும் மேற்பட்டோர் உடல் மெலிந்து இருப்பதாகவும், அவர்களில் நான்கு பேர் இறந்து விட்டதாகவும் கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். … Read more

அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த ஆர்யன் வைத்யா (வயது 20), சித்தாந்த் ஷா (19) ஆகிய 2 மாணவர்கள் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 15-ந் தேதி நண்பர்களுடன் சேர்ந்து இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள மன்ரோ ஏரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் படகு சவாரி சென்றனர். பின்னர் அவர்கள் படகை ஏரியின் நடுப்பகுதியில் நிறுத்திவிட்டு ஏரியில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்ந்தனர். அப்போது ஆர்யன் மற்றும் சித்தாந்த் … Read more