வெப்பநிலையை அதிகரிக்கும் “எல் நினோ” விளைவு நடப்பாண்டு உருவாக வாய்ப்பு – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

பூமியில் வெப்பத்தை அதிகரிக்கும் எல் நினோ விளைவு இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கிழக்கு பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டி எல் நினோ உருவாகி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது இயல்பை விட வலுவாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்கா உள்பட உலகெங்கிலும் இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் அடுத்த ஆண்டிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

அமெரிக்காவில் சீனாவின் கொரோனா மருந்து பொருட்களுக்கு சலுகை நீட்டிப்பு

வாஷிங்டன், கொரோனா வைரஸ் கடந்த 2019-ல் சீனாவில் உருவாகி பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கொரோனாவுக்கு எதிரான மருந்து பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பல நாடுகள் வழங்கியது. அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவுக்கு எதிராக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு வரி விலக்கு உள்ளிட்ட சலுகையை அமெரிக்கா வழங்கியது. இந்த சலுகை நாளையுடன் (திங்கட்கிழமை) முடிய இருந்தது. … Read more

Sun: சூரியனின் நிறம் என்ன? மஞ்சளும் இல்லை வெண்மையுமில்லை! பச்சை!!!

Colour of sun: சூரியனின் நிறம் என்ன? சூரியனின் நிறம் மஞ்சள் அல்லது வெள்ளையா? சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் சர்ச்சைகளுக்கு அறிவியல் சொல்லும் பதில்…

ஆஸ்திரேலியாவின் தனித்துவ உயிரினமான பிளாடிபஸ் அந்நாட்டின் பழமையான தேசியப் பூங்காவில் விடுவிப்பு!

ஆஸ்திரேலியாவின் தனித்துவ உயிரினமான பிளாடிபஸ், அந்நாட்டின் பழமையான தேசியப் பூங்காவில் விடுவிக்கப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசின் கூற்றுப்படி 1970களுக்குப் பின் ராயல் தேசியப் பூங்காவில் பிளாடிபஸ்கள் காணப்படவில்லை. வசிப்பிட அழிவு, நதி சீரழிவு, வேட்டையாடுதல் மற்றும் வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தால் இவை பேரழிவைச் சந்தித்தன. இதனால் பழமையான தேசியப் பூங்காவில் சுமார் 50 ஆண்டு காலம் குறிப்பிட்ட உயிரினம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மற்ற இடங்களில் இருந்து … Read more

world mother day | அன்னையை போல் ஒரு தெய்வமில்லை: இன்று உலக அன்னையர் தினம்

‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என நம் கலாசாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்து இருக்கிறது. அவ்வகையில் அன்னையே நம் முதல் கடவுள். அன்னை இல்லையெனில் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் அவர்களை கைவிடக்கூடாது. வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிறு (மே 14) உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னா ஜார்விஸ் என்ற பெண்மணியால் 1908ல் இத்தினம் தொடங்கப்பட்டது. ‘மாதா, … Read more

பாகிஸ்தானில் பேஸ்புக், டுவிட்டருக்கு தொடரும் தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கடந்த 9-ந் தேதி அந்த நாட்டின் துணை ராணுவத்தினர் அதிரடியாக கைது செய்தனர். இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. மேலும் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் … Read more

சிறையில் தண்டனை முடிந்த 198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

கராச்சி: பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கைது செய்து வருகிறது. பாகிஸ்தான் சிறைகளில் தற்போது 654 இந்திய மீனவர்கள் இருப்பதாகவும் இவர்களில் 631 பேர் தண்டனைக் காலத்தை முடித்துவிட்டு விடுதலைக்காக காத்திருப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் கராச்சி நகரின் மாலிர் சிறையிலிருந்து 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை மாலை விடுதலை செய்தனர். இந்த மீனவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் வாகா எல்லையில் இந்திய … Read more

கோஹினூர் வைரம் மற்றும் பழங்கால கோயில் சிலைகளை இங்கிலாந்தில் இருந்து மீட்க இந்தியா திட்டம்!

கோஹினூர் வைரம் மற்றும் பழங்கால கோயில் சிலைகளை இங்கிலாந்தில் இருந்து மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து லண்டனில் வெளியாகும் டெய்லி டெலகிராஃப் நாளிதழின் செய்தியில், சுதந்திரத்திற்கு முந்தைய காலனியாதிக்க ஆங்கிலேயர் ஆட்சியில் பறிபோன கலைப் பொருட்களை இந்தியா திருப்பி அனுப்புமாறு கேட்கத் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியின் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போது இது குறித்து பேசப்படலாம் என்றும் … Read more

Legalization of euthanasia: The law in Portugal | கருணை கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதி: போர்ச்சுகலில் சட்டம்

லிஸ்பன், தென் ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில், 18 வயதுக்கு மேற்பட்ட நீண்டநாள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவரை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதிக்கும் சட்டத்துக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது. நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோரை கருணை அடிப்படையில் கொலை செய்வது தொடர்பாக உலகெங்கும் பேசப்படுகிறது. ஜெர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இதற்கு சட்டப் பூர்வமான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில், கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி அளிக்கும் மசோதா … Read more

Covid Vaccine: அமெரிக்கா செல்வதற்கு இனி கோவிட் தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை

Covid Vaccine Not Mandatory:  சர்வதேச பயணிகள் கோவிட் தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயம் என்ற கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அமெரிக்கா கைவிட்டது