பொதுக்கூட்ட மேடையில் பைப் குண்டு வீச்சு – ஜப்பான் பிரதமர் கிஷிடா உயிர் தப்பினார்

டோக்கியோ: பொதுக்கூட்ட மேடையில் பைப் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். குண்டு வீசியவரை போலீஸார் கைது செய்தனர். ஜப்பானின் வகயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி துறைமுகம் பகுதியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்றார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, மக்கள் மத்தியில் இருந்த மர்ம நபர் ஒருவர், பிரதமர் கிஷிடா அமர்ந்திருந்த மேடையை நோக்கி பைப் வெடிகுண்டை … Read more

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டி – ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார். 3 நாள் பயணமாக அயர்லாந்து சென்றுள்ள அவர், அங்கு புறப்படுவதற்கு முன் இந்த தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதற்கு தனது மனதை தயார்படுத்தி விட்டதாக கூறிய ஜோபைடன், தேர்தல் பிரசாரத்துக்கான … Read more

சீனாவில் கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி சாவு

சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது அங்குள்ள வெயிலாங் கப்பல் கட்டும் தளத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயந்துபோய் அவசர அவசரமாக வெளியே ஓடினர். மேலும் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே … Read more

குகையில் 500 நாட்கள் தனியாக வாழ்ந்த தடகள வீராங்கனை | Athlete who lived alone in a cave for 500 days

மாட்ரிட்-ஸ்பெயினில், ஆய்வு ஒன்றுக்காக வெளி உலக தொடர்பின்றி 500 நாட்கள் குகைக்குள் வாழ்ந்த தடகள வீராங்கனை பியாட்ரிஸ் பிளாமினி வெளியே வந்ததை அடுத்து, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினைச் சேர்ந்த பியாட்ரிஸ் பிளாமினி, 50, தடகள வீராங்கனையாவார். உற்சாக வரவேற்பு இவர் விஞ்ஞானிகளின் ஆய்வு ஒன்றுக்காக, 2021 நவம்பர் 20ல், ஸ்பெயினில் உள்ள கிரானாடா மலைப் பகுதியில், பூமிக்கடியில் 230 அடி ஆழத்தில் இருந்த குகைக்குள் சென்றார். இரண்டு கேமராக்கள், ஆயிரம் லிட்டர் … Read more

1 மணி நேரத்தில் 3 ஆயிரம் தண்டால்; உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலியர்

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் லூகாஸ் ஹெல்ம்கே (வயது 33). இவர் 1 மணி நேரத்தில் 3,206 தண்டால்களை எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை முறியடித்து உள்ளார். இது ஒரு நிமிடத்திற்கு 53 என்ற சராசரியை கொண்டது. இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் மற்றொரு ஆஸ்திரேலியரான டேனியல் ஸ்காலி என்பவர் அதிக தண்டால் எடுத்து சாதனை புரிந்து உள்ளார். இதனை லூகாஸ் முறியடித்து இருக்கிறார். தனது ஒரு வயது மகனுக்கு … Read more

போரின் போது வைக்கப்பட்ட கண்ணிவெடி வெடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பலி

காபுல், ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடைபெற்றது. அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அரசுக்கு எதிராக தலிபான்கள் ஆயுதப்போர் நடத்தினர். இந்த போரில் தலிபான்கள் வெற்றிபெற்று ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர். இந்த உள்நாட்டு போரின் போது பல்வேறு ஆயுதங்கள் அரசுப்படையினரால் கைவிடப்பட்டன. அந்த ஆயுதங்களை தற்போது தலிபான்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இதனிடையே, உள்நாட்டு போரின்போது பல இடங்களில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டன. போருக்கு பின் இந்த கண்ணிவெடிகள் செயலிழக்கப்படாமல் அப்படியே இருந்ததால் … Read more

‘உள்ளேயே இருங்கள்.. வெளியே வந்தால் சாவு தான்’ – சூடானில் இந்தியர்களுக்கு எச்சரிக்கை.!

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள். சூடானில் உள்ள இந்தியர்கள், தலைநகரில் குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளைத் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க தேசமான சூடான் நாட்டின் ராணுவத் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் அவரது நம்பர் 2 துணை ராணுவத் தளபதி மொஹமட் ஹம்தான் டாக்லோ இடையே பல வாரங்களாக ஆழ்ந்த பதட்டங்களுக்குப் பிறகு … Read more

நடுரோட்டில் மனைவியை மறந்து விட்டு சென்ற கணவன்! அதுவும் 160 கி.மீ., – எப்படி தெரியுமா?

Bizarre News: மனைவி சிறுநீர் கழிக்க வாகனத்தில் இருந்து இறங்கியது தெரியாமால், கணவர் காரில் 160 கி.மீ., பயணித்த சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது. 

அதிகாரத்துக்கான யுத்தம்: தூப்பாக்கிச் சத்தங்களால் மக்கள் பீதி – சூடான் நாட்டில் நடப்பது என்ன?

கார்த்தும்: அதிகார வேட்கைதான் எல்லா யுத்தங்களின் அடிப்படையாக இருந்திருக்கிறது. இன்றளவும் அப்படித்தான். கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு குட்டி நாடான சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதற்காக ஒரு நீண்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது அவ்வப்போது கலவரமாக வெடிப்பதும் பின்னர் கனன்று கொண்டிருப்பதாகவும் இருக்கிறது. சூடான் யுத்தம் இரு நாடுகளுக்கு இடையே அல்ல சொந்த மக்களுக்குள் நடக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடக்கிறது. ராணுவத்துக்கும், அதன் கிளையான துணை ராணுவத்திற்கும் இடையே நடக்கிறது. இத்தனையும் ஆட்சி … Read more