போப் பிரான்சிஸ் உயிரிழப்பு- அடுத்த தலைவர் யார்? தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் 4 இந்தியர்கள்..

Pope Francis Death Who Is Next Leader : கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அடுத்த தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் குழுவில் 4 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  

போப் பிரான்சிஸ் காலமானார்

வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. அவரது மறைவை வாடிகன் தேவாலய நிர்வாகம் உறுதி செய்துள்ளது. போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தொடர் சிகிச்சையில் … Read more

‘எங்கள் இழப்பில் ஆதாயம் தேடாதீர்!’ – அமெரிக்க மோதலால் உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

பீஜிங்: எங்களுடைய இழப்பில் உலக நாடுகள் ஆதாயம் தேட வேண்டாம் என்று அமெரிக்க மோதலை முன்வைத்து உலக நாடுகளுக்கு சீனா எச்சரித்துள்ளது. இத்தகைய சமரச முயற்சி சர்வதேச வர்த்தகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளது. இருபுறமும் சங்கடங்கள்.. உலக நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளும்படி அமெரிக்க நிர்பந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் சீனா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவுடன் இத்தகைய ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் … Read more

7 மாத விண்வெளி ஆய்வுக்கு பின் பத்திரமாக பூமிக்கு திரும்பிய ரஷிய வீரர்கள்

மாஸ்கோ ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்.26 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற 3 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழு பூமிக்கு பத்திரமாக திரும்பியது. ரஷ்ய விண்வெளி வீரர்கள் அலெக்ஸி ஒவ்சினின், இவான் வாக்னர் மற்றும் நாசாவின் மூத்த விஞ்ஞானி டொனால்ட் பெடிட் ஆகியோர் கஜகஸ்தானில் தரையிறங்கினர். அதுகுறித்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. இந்த மூவர் குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 மாத ஆய்வை முடித்துள்ளது. நாசா விஞ்ஞானி டொனால்ட் பெடிட் தனது 70வது … Read more

போரிடுவதைத்தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை – நேதன்யாகு

டெல் அவிவ், இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போாில் பாலஸ்தீனத்தை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்று வரும் போரில், காசாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரமாக அதிகரித்துள்ளது. காசா மீதான … Read more

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 'இன்டர்போல்' உதவியை நாடிய வங்காளதேசம்

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையை தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து … Read more

அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு வரவேற்பு

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 1 More update தினத்தந்தி Related Tags : Congress  Rahul Gandhi  USA  Trip  Reception  காங்கிரஸ்  ராகுல்காந்தி  அமெரிக்கா பயணம்  வரவேற்பு 

நாடு முழுவதும் டிரம்ப்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

வாஷிங்டன், அமெரிக்காவில் டிரம்ப் அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். செலவின குறைப்பு நடவடிக்கையாக இத்தகைய முடிவுகளை டிரம்ப் நிர்வாகம் எடுத்தது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தொழிலாளர் அமைப்புகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க பெடரல் கோர்ட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட … Read more

ஈஸ்டர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா கடும் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 387 குண்டு வீச்சுத் தாக்குதல்களையும், 19 தரைவழித் தாக்குதல்களையும் நடத்தி உள்ளது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “முதன்மைத் தளபதி சிர்ஸ்கியின் காலை 6 மணி அறிக்கையின்படி, பல்வேறு முன்னணி திசைகளில் இருந்த ஏற்கனவே ரஷ்யாவின் 59 குண்டுவீச்சுத் … Read more