தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

துசான்பே, தஜிகிஸ்தானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.36 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 140 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.21 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 72.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 1 More update தினத்தந்தி Related Tags … Read more

ஈரான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 3 மூத்த தளபதிகள் உயிரிழப்பு

ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல், ஈரான் இடையே நேற்று 9-வது நாளாக போர் நீடித்தது. ஆரம்பம் முதலே ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் … Read more

அமெரிக்காவை நம்ப முடியாது: ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கருத்து

அமெரிக்காவை நம்ப முடியாது. அணு சக்தி தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். இஸ்ரேல், ஈரான் போர் தொடர்பாக அரபு நாடுகள் கூட்டமைப்பின் (அரபு லீக்) அவசர ஆலோசனை கூட்டம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் சவுதி அரேபியா, எகிப்து, இராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 22 நாடுகள் உள்ளன. அரபு நாடுகள் கூட்டமைப்பு கூட்டத்தில் … Read more

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அணு ஆயுத சோதனை நடத்தியதாக சந்தேகம்

வடக்கு ஈரானில் உள்ள செம்னான் பகுதியில், நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியதால், ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. வடக்கு ஈரானில் செம்னான் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்துக்கு தென்மேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன்தினம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் லேசான … Read more

“ஏவுகணைகள், குண்டுகளை கண்டு பயந்து போனோம்” – ஈரானில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் அனுபவ பகிர்வு

புதுடெல்லி: “எங்களைச் சுற்றி ஏவுகணைகளும், குண்டுகளும் விழுவதைக் கண்டு பயந்துபோனோம். அந்த நாட்களை மீண்டும் ஒருபோதும் பார்க்க மாட்டோம் என நம்புகிறேன்” என்று ஈரானிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து ஆர்மீனியா நாட்டுக்கு தரைவழியாக அழைத்துவரப்பட்ட 110 இந்திய மாணவர்கள் இன்று (ஜூன் 19) அதிகாலையில் விமானம் மூலம் டெல்லியை அடைந்தனர். ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் ஜம்மு காஷ்மீரைச் … Read more

8 கி.மீ. சுற்றளவு ‘நாசம்’ – இஸ்ரேல் மீது ஈரான் வீசும் கிளஸ்டர் குண்டுகளின் வீரியம் என்ன?

தெஹ்ரான் / டெல் அவிவ்: இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் இன்று 9-வது நாளாக தொடரும் நிலையில், கிளஸ்டர் குண்டுகளை ஈரான் முதல் முறையாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இது பல குண்டுகளாக சிதறி வெடிக்கும் வகையை சேர்ந்தது என்பதால் பாதிப்பு அதிகளவில் ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்​படுத்​து​வ​தாக கூறி, அந்​நாட்​டின் மீது இஸ்​ரேல் தாக்​குதலை தொடங்​கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரு​கிறது. இரு நாடு​கள் இடையி​லான போர் … Read more

இந்தியா – பாக். போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்காது: மீண்டும் சீண்டும் ட்ரம்ப்!

வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரூத் சமூக வலைதளத்தில் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ‘ காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டா குடியரசுக்கும் இடையே, பல தசாப்தங்களாக நடந்து வரும், வன்முறை ரத்தக்களரி மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய போரில், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து, … Read more

இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 400 பேர் உயிரிழப்பு; 3,056 பேர் காயம்

தெஹ்ரான்: இஸ்ரேலின் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் சுகாதார அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஹொசைன் கெர்மன்பூர், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “9வது நாளாக தொடரும் தாக்குதல்களில் 54 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். 3,056 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் … Read more

கொலை மிரட்டல் எதிரொலி: ஈரானின் அடுத்த உச்ச தலைவரை தெரிவு செய்து வைத்துள்ளாரா கமேனி?

தெஹ்ரான்: தான் கொல்லப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், தனது பொறுப்பை வகிக்கப் போகும் தலைவரை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியதை அடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் குறிவைத்து வருகிறது. “இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். ஈரானின் உச்ச … Read more

இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்கிறது: துருக்கி குற்றச்சாட்டு

இஸ்தான்புல்: ஈரானை தாக்குவதன் மூலம் இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்வதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இஸ்தான்புல்லில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உச்சிமாநாட்டில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், “இஸ்ரேல் இப்போது நமது அண்டை நாடான ஈரானை தாக்குவதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியை முழுமையான பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்கிறது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஏமன் மற்றும் ஈரான் தரப்பில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் இஸ்ரேலின் … Read more