கரோனா கட்டுப்பாடுகளால் கொந்தளிப்பு: ஜின்பிங்குக்கு எதிரான போராட்டக் களத்தில் மாணவர்கள் தீவிரம்

ஷாங்காய்: தீவிர கரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில், சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதிபருக்கும் எதிரான பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா தொற்றை முழுமையாக இல்லாமல் செய்யும் நோக்கில் ‘ஜீரோ கரோனா’ எனும் கொள்கையை கம்யூனிஸ்ட் அரசு அமல்படுத்தி வருகிறது. இதனால், வீடுகளை விட்டு வெளியே செல்வதில் கட்டுப்பாடு, பணி இடங்களில் கட்டுப்பாடு, பொருட்களை வாங்குவதில் கட்டுப்பாடு என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீண்ட நெடுங்காலமாக அமல்படுத்தப்பட்டு வரும் … Read more

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது நேர்ந்த சோகம் – நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி

யவ்ண்டி, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன். இந்நாட்டின் தலைநகர் யவ்ண்டியில் உள்ள டமாஸ் மாவட்டத்தில் உயிரிழந்த நபரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 20 மீட்டர் உயரத்திற்கு மணல் மேடு அமைந்துள்ள பகுதி அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு மண் மேடு சரிந்து விழுந்தது. இதில், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்து … Read more

சீனாவில் போராட்ட செய்தியை படம் பிடித்த பிரபல தனியார் சேனல் நிருபருக்கு அடி, உதை

லண்டன், சீனாவில் அரசுக்கு எதிரான போராட்ட செய்தியை படம் பிடித்த பிரபல தனியார் செய்தி நிறுவன நிருபரை கைது செய்து அடித்து, உதைத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் பிற … Read more

சீனாவின் ஆதிக்கத்திற்கு கனடா கடிவாளம்; ராணுவத்தை மேம்படுத்த முடிவு.!

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில், கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜி – 20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டுக்கு இடையே உலகத் தலைவர்கள், இரு … Read more

கருந்துளை ஒளி எதிரொலிகளை ஒலி அலையாக மாற்றிய நாசா

அண்டத்தில் உள்ள கருந்துளையிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளின் எதிரொலிகளை ஒலி வடிவமாக நாசா வெளியிட்டுள்ளது. சலனமற்று இருக்கும் ஏரி நீரில் சிறு கல்லை போட்டால் சிற்றலைகள் எழுவது போலவும், காதின் அருகே பேப்பரை வேகவேகமாக ஆட்டினால் காற்றில் அதிர்வு ஏற்பட்டு சப்தம் எழுவது போலவும் கால-வெளி (space-time) பரப்பில் நிறை கொண்ட பொருட்கள் நகரும்போது அந்த அதிர்வில் காலவெளி பரப்பு அதிர்ந்து ஈர்ப்பு அலைகளும், ஒளி அலைகளும் எழும் என்பது ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவம். இந்த நிலையில், … Read more

ஹிஜாப் அணியாத பெண்ணுக்கு சேவை; வங்கி மேலாளர் அதிரடி பணி நீக்கம்| Dinamalar

டெஹ்ரான் : ஈரானில் ‘ஹிஜாப்’ அணியாமல் வந்த பெண்ணுக்கு வங்கிச்சேவை வழங்கிய மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள மேற்காசிய நாடான ஈரானில், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தையும், தலைமுடியையும் மறைக்கும் துணி மற்றும் உடலை மறைக்கும் கறுப்பு அங்கி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணியாத பெண்களுக்கு தண்டனை வழங்க அரசு சார்பில் ஒழுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு அபராதம் மற்றும் சிறைத் … Read more

சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பும் சீனர்கள்: பரவுது போராட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஷாங்காய்: கோவிட் கட்டுப்பாடுகளை நீக்கிட வேண்டும் என்றும் ஜனநாயகம் , சுதந்திரம் வேண்டும் என்றும் சீன மக்கள் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் 3 வது நாளாக தொடர்ந்து வருகின்றனர். அதிபர் மற்றும் கம்யூ., தலைவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். பல இடங்களில் போலீசார் போராட்டக்காரர்களை அகற்றினர். சீனாவில் நாள்தோறும் கோவிட் பாதிப்பு தொற்று 40 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் சில பகுதிகளில் கோவிட் ஊரடங்கை அமல் செய்து … Read more

அல்-ஷபாப் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட மொகடிஷு ஹோட்டல் சுற்றிவளைப்பு: 4 பேர் பலி

நியூடெல்லி: சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27, 2022) மாலை சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலை அல்-ஷபாப் தீவிரவாதிகள் தாக்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய மொகடிஷுவில் அமைந்துள்ள அதிபர் மாளிகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் செய்தியை, பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரியை மேற்கோள்காட்டி AFP செய்தி … Read more

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்ணுக்கு வங்கிச் சேவை: மேலாளர் நீக்கம்

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஒருவருக்கு வங்கி சேவை வழங்கிய வங்கி மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள குவோம் மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் மேலாளர் ,ஹிஜாப் அணியாமல் வந்த பெண்ணுக்கு வங்கிச் சேவை வழங்கி இருக்கிறார். இதனால் அவ்வங்கியின் மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை அம்மாகாணத்தின் ஆளுநர் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு ஈரான் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையை உருவாக்கியுள்ளது. ஈரானை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான … Read more

நேபாள பார்லி., தேர்தல் ஆளுங்கட்சி அபாரம்| Dinamalar

காத்மாண்டு : நம் அண்டை நாடான நேபாளத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் ஆளுங்கட்சியான நேபாள காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்ட் மற்றும் 550 உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபை தேர்தல் கடந்த வாரம் நடந்தது. இதில் பார்லி.,க்கு165 எம்.பி.,க்கள் நேரடி தேர்தல் வாயிலாகவும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுன்றனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் ஒரு வாரமாக எண்ணப்பட்டு, அவ்வப்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு … Read more