அரசு பங்களாவுக்கு ரூ.18 லட்சம் பாக்கி மாஜி பிரதமருக்கு பில் அனுப்பியது அரசு| The government sent a bill to the former prime minister owing Rs 18 lakh for the government bungalow

லண்டன்-பிரிட்டனில் உள்ள அரசு மாளிகையை பயன் படுத்தியதற்காகவும், அங்கு காணாமல் போன பொருட்களுக்காகவும் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் 18 லட்சம் ரூபாய் செலுத்தும்படி அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த லிஸ் டிரஸ் பதவி வகித்தார். கடந்த ஆண்டு செப்., 6 முதல் அக்., 25 வரை, 44 நாட்கள் மட்டுமே அவர் பிரதமர் பதவியில் இருந்தார். அவருக்கு பின், அதே கட்சியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக … Read more

தமிழின பிரச்னைக்கு சுமுக தீர்வு| A smooth solution to the Tamil problem

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-”இலங்கையில், நீண்ட காலமாக உள்ள தமிழ் இன பிரச்னைக்கு, இந்தாண்டு இறுதிக்குள் சுமுக தீர்வு எட்டப்படும்,” என, அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் நேற்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. நம் அண்டை நாடான இலங்கை தலைநகர் கொழும்புவில், தொழிலாளர்கள் தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது: இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் பயனளிக்கும் விதமாக, நம் அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் … Read more

பூமிக்கடியில் 31,076 அடி ஆழத்திற்கு துளையிடப்படும் ஆசிய கண்டத்தின் மிகவும் ஆழமான எண்ணெய் கிணறு…!

ஆசிய கண்டத்திலேயே மிகவும் ஆழமான எண்ணெய் கிணறை துளையிடும் பணியை சீனாவின் சினோபெக் (Sinopec) நிறுவனம் தொடங்கியுள்ளது. எண்ணெய் வளம் நிறைந்த டாக்லமக்கான் பாலைவனத்தில் பூமிக்கடியில், சுமார் 31 ஆயிரம் அடி ஆழத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு அமைக்கப்பட்டுவருகிறது. யூஜின் என பெயரிடப்பட்டுள்ள இந்த எண்ணெய் கிணறு, 6 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் என சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவரஸ்ட் சிகரத்தின் உயரத்துடன் ஒப்பிடுகையில் இந்த கிணறு அதை விட 2,000 அடி அதிக ஆழம் கொண்டது … Read more

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 34 பேர் காயம்- வீடுகள் சேதம்

கீவ், உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சண்டை தொடங்கியது. ஓராண்டை கடந்து விட்ட நிலையிலும் இந்த சண்டை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் கிழக்கு நகரான பவ்லோஹார்ட் நகரத்தில் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 34 பேர் காயம் அடைந்தனர். மேலும் பல வீடுகளும் சேதம் … Read more

அமெரிக்கா: சுடச்சுட மனித மூளை, இதயம்.. ஆர்டர் கொடுங்க.. பெண்ணை தூக்கிய போலீஸ்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் அமெரிக்காவில் பிணவறையில் வேலை செய்த பெண், மனித உறுப்புகளை திருடி விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்களின் உடல் உறுப்புகளை தனியார் மருத்துவமனைகள் திருடும் செய்திகளை நாம் கண்டிருப்போம். டெல்லியில் 15 வயதுச் சிறுமி ஒருவரின் உடலுறுப்புகள் திருடப்பட்டதாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி புகார் எழுந்தது. குடல் பிரச்னை காரணமாக … Read more

ஊதிய உயர்வை வலியுறுத்தி கம்போடியாவில் தொழிலாளர்கள் மே தினப் பேரணி

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்போடியாவில் ஆடை தயாரிப்பு மற்றும் கட்டுமானத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மே தினப் பேரணியை நடத்தினர். தலைநகர் நாம் பென்னில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்றவர்கள், கம்போடிய கொடிகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியச் சென்றனர். தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர். Source link

வங்காளதேசத்தில் வெப்பநிலை உயர்வால் அரிசி உற்பத்தி 40 சதவீதம் குறையும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டாக்கா, காலநிலை மாற்றத்தால் உலகில் தற்போது ஏற்பட்டு வரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று வெப்பநிலை அதிகரிப்பு ஆகும். அதன்படி நம் அண்டை நாடான வங்காளதேசத்திலும் வெப்பநிலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. அதாவது நாட்டின் தலைநகரான டாக்காவில் கடந்த மாத நிலவரப்படி அதிகபட்சமாக 40.6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 4 டிகிரி செல்சியஸ் அதிகம் ஆகும். இந்த வெப்பநிலை அதிகரிப்பு குறித்து வங்காளதேசத்தின் வானிலை ஆய்வு மைய இயக்குனர் … Read more

அமெரிக்காவில் தொடர்ந்து சரியும் வங்கிகள்! சிலிகானை தொடர்ந்து திவாலான பர்ஸ்ட் ரிபப்ளிக்!

அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை கடந்த மார்ச் மாதம் திவாலாகிய நிலையில் அமெரிக்காவில் 3 ஆவது பெரிய வங்கியாக உள்ள, First Republic Bank வங்கியும் திவாலாகியுள்ளது. 

3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர் : பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு

கார்டூம், ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் கார்டூமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையம் போன்றவற்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை ராணுவம் அறிவித்தது. இதனையடுத்து இந்த மோதல் உள்நாட்டு போராக உருவெடுத்தது. … Read more

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்வெட்டால் 48 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்வெட்டால் 48 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 9 மணி நேரத்திற்குப் பிறகு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறையின் இறுதி நாளான இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். Source link