தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகள் அறிவிப்பு!

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள சவுதி அரேபியா வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை தினமும் 5 லட்சம் பேரல்கள் மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல், ஒபெக் கூட்டமைப்பில் உள்ள ஈராக் 2 லட்சத்து 11 ஆயிரம் பேரல்களும், குவைத் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரல்களும், ஓமன் 40 … Read more

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது படகு கவிழ்ந்து 4 இந்தியர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா, கனடா நாடுகள் 8,891 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற சுமார் ஒரு லட்சம் பேர் பிடிபட்டுள்ளனர். இந்த சூழலில் கடந்த 27-ம் தேதி கனடாவின் கியூபெக் பகுதியில் இருந்து அமெரிக்காவின் மோஹாவ்க் பகுதிக்கு 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்தனர். அவர்கள் செயின்ட் லாரன்ஸ் ஆற்றில் படகில் அமெரிக்க கரையை நோக்கி சென்றனர். அப்போது கனமழை காரணமாக … Read more

இத்தாலி அலுவல் மொழியில் ஆங்கிலத்துக்குத் தடை? | Ban on English as official language in Italy?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரோம்: ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதிகாரப்பூர்வ தொடர்புகளில் ஆங்கிலம் உட்பட பிற மொழிச் சொற்களுக்கு தடை விதித்துள்ள அரசு, மீறுபவர்களுக்கு 89 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு மொழிகளை, குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தச் சட்டத்தின்படி, அதிகாரப்பூர்வ தகவல் … Read more

உக்ரைனுக்கு எதிரான போரில் 2 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு.. இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்!

உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் போரின் போது ரஷ்ய வீரர்கள் அதிகப்படியாக மது அருந்தியதால் உயிரிழப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. ஆயுதங்களை மோசமாகக் கையாளுதல், அதிகப்படியான மதுப்பழக்கம் போன்றவைகளால் ரஷ்ய வீரர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்தி கொண்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சாலை விபத்துக்கள், தாழ்வெப்பநிலை போன்றைவைகளும் ரஷ்ய வீரர்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. Source link

அமெரிக்காவை புரட்டி போட்டுள்ள சூறாவளி! ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்!

அமெரிக்காவில் புயல் ஒரு பேரழிவை உருவாக்கியுள்ளது. இயற்கையின் அழிவுக்கு முன்னால், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடு கூட தாக்கு பிடிப்பது கடினம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இயற்கையின் இந்த தாக்குதலில் இதுவரை 32 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக இவர்கள்வ்அனுமதிக்கப்பட்டுள்ளனர். டென்னசி, ஆர்கன்சாஸ், இந்தியானா மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய இடங்களில் இயற்கை சீற்றத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமையும் கடுமையான இடி, புயல் மற்றும் சூறாவளி … Read more

காதலிக்க ஒரு வாரம் விடுமுறை சீன கல்லுாரி மாணவர்கள் குஷி| A week off to love Chinese college students Khushi

பீஜிங்-சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, காதல் செய்வதற்காக கல்லுாரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், கொரோனாவுக்கு பின், பிறப்பு, இறப்பு விகிதங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 141 கோடி மக்கள் தொகை உடைய அந்த நாட்டில், சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதே போல் குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்துள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம், 2022-ல், 1,000 பேருக்கு, 7.52 என்ற அளவில் இருந்தது. அது … Read more

உயிரை பறிக்கும் மார்பர்க் வைரஸ் ஆப்ரிக்காவில் வேகமாக பரவுகிறது| Deadly Marburg virus spreads rapidly in Africa

வாஷிங்டன்-கடுமையான காய்ச்சல், தலைவலி, ரத்தக் கசிவு ஏற்படுத்தி உயிரைக் கொல்லும் தீவிரம் உடைய, ‘மார்பர்க் வைரஸ்’ ஆப்ரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. மேற்கு ஆப்ரிக்க நாடான கினியில், மார்பர்க் வைரஸ் பரவல் இருப்பது கடந்த பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. இதுவரை ஒன்பது பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், 20 பேருக்கு அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆப்ரிக்காவில் உள்ள பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவுகிறது. இந்த … Read more

சார்லஸ் புகைப்படம் வைக்க ரூ.80 கோடி ஒதுக்கீடு| Allotment of Rs. 80 crores for putting up Charless photo

லண்டன்-பிரிட்டனில் புதிய அரச பரம்பரை பதவியேற்பதைக் கொண்டாடும் வகையில், மன்னர் 3ம் சார்லசின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதற்காக, 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 70 ஆண்டுகளுக்கு மேலாக அரியணையை அலங்கரித்த ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்., மாதம் காலமானார். இதையடுத்து, புதிய மன்னராக 3ம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வமாக இவர் பதவியேற்க உள்ள விழா, அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கவுள்ளது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் … Read more

ஈரானில் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த தாய், மகள் மீது தயிரை ஊற்றிய நபர் – பரபரப்பு வீடியோ

டெஹ்ரான், ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினி(வயது 22) என்ற இளம்பெண்ணை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு … Read more

விஷத்தன்மை கொண்ட பஃபர் மீனை சமைத்து சாப்பிட்ட 83 வயது பெண் பலி..!

மலேசியாவில் விஷத்தன்மை கொண்ட பஃபர் மீனை சமைத்து சாப்பிட்ட 83 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரின் கணவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள உடலை பலமடங்கு பெரிதாக்கிக் கொள்ளும் பஃபர் மீன் அதிக விஷத்தன்மை உடையது என்பதால் பெரும்பாலும் உணவாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இந்நிலையில், வழக்கமாக மீன் வாங்கும் கடையில் இந்த மீனை வாங்கி சமைத்து மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவில் … Read more