பிரிட்டனின் பணவீக்கம் அதிகரிப்பு பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சி| Britains rising inflation shocks economists

புதுடில்லி:பிரிட்டனின் பணவீக்கம், கடந்த பிப்ரவரி மாதத்தில் 10.4 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 4 மாதங்களில், முதன் முறையாக இந்த அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த உயர்வு, பொருளாதார நிபுணர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. பணவீக்கம் இந்த அளவுக்கு அதிகரிக்கும் என பலர் எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்த பணவீக்க உயர்வு, பிரிட்டனின் மத்திய வங்கியான ‘பேங்க் ஆப் இங்கிலாந்து’ வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளியுள்ளது. கடந்த ஜனவரியில், பிரிட்டனின் சில்லரை விலை பணவீக்கம் 10.1 … Read more

மல்லையாவின் வங்கிக்கணக்கில் தனது வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு பணம் இருந்ததாக சிபிஐ தகவல்..!

கடந்த 2017ஆம் ஆண்டில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் வங்கிக்கணக்கில் தனது வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு பணம் இருந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடன் மோசடி வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 3வது குற்றப்பத்திரிக்கையில் இந்த தகவலை சிபிஐ குறிப்பிட்டுள்ளது. தனது ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக கடனாகப் பெற்ற சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயைக் கொண்டு மல்லையா, ஐரோப்பாவில் சொத்துகள் வாங்கியதாகவும் ஸ்விட்சர்லாந்தில் தனது குழந்தைகள் பெயரில் இயங்கும் அறக்கட்டளைக்கு பணத்தை பரிமாற்றம் … Read more

அதிபர் புடினை முடிந்தால் கைது செய்து பாருங்கள்; ரஷ்ய முன்னாள் அதிபர் சவால்.!

ரஷ்ய அதிபர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், அவரை கைது செய்தால் அது ரஷ்யாவிற்கு எதிரான போர் பிரகடனமாக கருதப்படும் என முன்னாள் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் போர் தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒராண்டு ஆகியும் நிறைவடையாத போர் இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்திய அரசியலால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். இந்தநிலையில் உக்ரைன் … Read more

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி, கனமழை; 3.5 கோடி பேர் பாதிப்பு

கலிபோர்னியா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3.5 கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சூறாவளி காற்று மற்றும் கனமழையால் நேற்றும், இன்றும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சூறாவளியின் பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின் இணைப்புகளும் பரவலாக சேதமடைந்தன. கனமழையால் 3.5 கோடி பேர் பாதிக்கப்பட்டதுடன், 1.2 லட்சம் வீடுகளுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி செய்தி தொடர்பாளர் கரீனா கர்ரால் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், வெள்ளம், மரங்கள் சரிவது … Read more

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

தஜிகிஸ்தான், தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கமானது தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிமீ தொலைவில் பதிவாகி உள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 5.9 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : தஜிகிஸ்தான் நிலநடுக்கம் Tajikistan earthquake

போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சீனாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளோம்: உக்ரைன் அதிபர்

கீவ், ஓர் ஆண்டை கடந்தும் நீண்டு வரும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்பட உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த சூழலும் தென்படவில்லை. இதனிடையே ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி திட்டத்தை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் 3 நாள் பயணமாக கடந்த 20-ந் தேதி ரஷியா சென்ற சீன அதிபர் ஜின்பிங், நேற்று முன்தினம் … Read more

உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய வரிக்குதிரை.. மயக்க ஊசி செலுத்தி பிடித்த ஊழியர்கள்..!

தென் கொரியாவில், உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய வரிக்குதிரை பிடிபட்டது. சியோலில் உள்ள பூங்காவில் இருந்து தப்பிய அந்த வரிக்குதிரை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்ததை அறிந்த ஊழியர்கள், அதனை சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அந்த வரிக்குதிரை பத்திரமாக மீண்டும் உயிரியல் பூங்காவில் விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்..!

கொழும்பு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 12 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களிடம் இருந்து 2 … Read more